Sunday, September 30, 2012
Saturday, September 29, 2012
பு திதாக அதிபர், ஆசிரியர்கள் 6000 பேருக்கு அக்டோபர் 2ல் நியமனம்!
இலங்கை அதிபர் சேவை தரம் 2, தரம் 3 ஆகிய இரு தரப்பினர்களுக்கும் 3000 அதிபர்களும், இலங்கை ஆசிரியர் சேவை 3க்கு 3000 பட்டதாரி ஆசிரியர்களும் புதிதாக நியமனம் பெறவுள்ளனர்.
இலங்கை கல்வி நிருவாக சேவையின் 3ஆம் தரத்திற்கு திறமை சேவை மூப்பு மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் அடிப்படையில் தெரிவான அதிபர் சேவை தரம்1ஐச் சேர்ந்தவர்களுக்கும் நியமனம் வழங்கப்படவுள்ளது.
இந்த மூன்று பகுதியினருக்குமான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் அக்டோபர் மாதம் 02ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறவுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் கோட்டபாய ஜயரட்ன அறிவித்துள்ளார்.
இஸ்லாமிய விரோத படத்தினை தயாரித்த நபர் கைது
அமெரிக்காவின் லொஸ் ஏன்ஜல்ஸ் நகர சட்ட நிறுவனம் அதிகாரி டொம் முரோஸக் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
“முஸ்லிம்களின் மனதினை புண்படுத்தும் விதத்தில் படத்தினை தயாரித்து நெறிமுறைகளை மீறி அதனை இணையத்தில் வெளியீடு செய்த நகௌலா பஸ்ஸெல்லி நகௌலா (வயது 55) என்ற நபரே நேற்று கைது செய்யப்பட்டார். இவரை சமஷ்டி நீதிமன்றில் ஆஜர்படுத்தி விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளோம்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, சமஷ்டி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட மேற்படி நபருக்கு பிணைவழங்க சமஷ்டி நீதிமன்ற நீதிபதி மறுத்துள்ளார். உலகளாவிய ரீதியில் கலகங்களை தூண்டிவிடும் விதத்தில் நடந்துகொண்டமைக்காகவே பிணை வழங்க முடியாது என நீதிபதி கூறியுள்ளார். சமூகத்திற்கு ஆபத்தான விடயத்தினை சந்தேகநபர் செய்துள்ளதாகவும் நீதிபதி சுஸானி எச்.சீகல் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Thursday, September 27, 2012
கல்வி அமைச்சின் நூலக அபிவிருத்திப் பிரிவூக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளH சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திற்கு விஜயம் செய்தனH.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் சமூக ஊடக பயிற்சிப்பட்டறை
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின்
ஏற்பாட்டில் சமூக ஊடக பயிற்சிப்பட்டறை
இணையதளங்கள்இ வலைப்பூக்கள் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் ஆர்வமுடைய இளைஞர் யூவதிகளை இனங்கண்டு அவர்களை முறையாக பயிற்றுவிக்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் திட்டமிட்டுள்ளது.
நவீன உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் சமூக ஊடகத்துறையில் வினைத்திறனுடன் செயற்பட கூடிய வகையில் இளைஞர் யூவதிகளை பயிற்றுவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளையூம் சேர்ந்த இளைஞர் யூவதிகள் சமூக ஊடகங்கள் வாயிலாக ஆர்வமுடன் செயற்பட்டு வருகின்ற போதிலும் ஊடக தாற்;பரியங்கள் குறித்த உரிய பயிற்சிகளும் வழிகாட்டல்களும் இல்லாததன் காரணமாக சமூக ஊடகங்கள் வாயிலாக ஆக்கபூர்வமான பயன்களை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டே ஆர்வமுடையவர்களை முறையாக பயிற்றுவிப்பதன் மூலம் சிறந்ததொரு ஊடக கலாசாரத்தை கட்டியெழுப்பி ஆளுமை மிக்க சமூக ஊடக செயற்பாட்டாளர்களை உருவாக்க முடியூம் என மீடியா போரம் கருதுகிறது.
மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்படவூள்ள இப்பயிற்சிப் பட்டறைகளில் கலந்துகொள்ள விரும்பும் இளைஞர் யூவதிகள் தமது பெயர் விபரங்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தேசிய அமைப்பாளர் றிப்தி அலிக்கு 0773630668 எனும் தொலைபேசி இலக்கம் மூலமாகவோ அல்லது சகைவால.யடi@பஅயடை.உழஅ எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ எதிர்வரும் ஒக்டோபார் 15ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்க முடியூம்.
இந்த பயிற்சிப்பட்டறைகளில் அனுபவம் வாய்ந்த விரிவூரையாளர்கள் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கவூள்ளதுடன் பங்குபற்றுவோருக்கு பெறுமதிமிக்க சான்றிதழ்களும் வழங்கப்படவூள்ளன.
Monday, September 24, 2012
இஸ்லாததிற்கு எதிரான திரைப்படத்திற்கு இலங்கையிலும் தடை

எந்தவொரு மதத்தை இழிவுபடுத்தும் நோக்கிலான செயற்பாடுகளை தாம் கண்டிப்பதாக புத்தசாசன மற்றும் மத விவகார பதில் அமைச்சர் என்.கே.டி.எஸ்.குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் குறித்த கண்டனத்திற்குள்ளான திரைப்படம் இலங்கையில் ஒளிபரப்பப்படுவதனை தவிர்க்கும் வகையிலான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
5ம் தர புலமைப்பரிசில் பரிட்சைப் பெறுபேறுகள வெளியாகியுள்ளன
பெறுபேறுகளை அறிந்து கொள்ள www.doenets.lk என்ற இணைய தளத்தை அணுகியோ அல்லது கைத்தொலைபேசிகளிலோ பெற்றுக் கொள்ளலாம்
கைத்தொலைபேசிகளில் பெற்றுக் கொள்ள
EXAMS இடைவெளி பரிட்சைச்சுட்டெண் என்பவற்றை எஸ்.எம.எஸ் அனுப்புங்கள்
Mobitel ஆயின் 8884
Dialog ஆயின் 7777
Airtel ஆயின் 7545
Hutch ஆயின் 8888
Etisalath ஆயின் 3926 ற்கும் எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள்
அனைத்து மாணவரகளுக்கும் sammanthurai.tkசார்பாக வாழத்துக்கள்
கிழக்கு மாகாணசபை அமைச்சராக சம்மாந்துறை மன்சூர் பதவியேற்பு

Friday, September 21, 2012
சம்மாந்துறை மக்கள் உளமுருகி பிரார்த்தனை!
Thursday, September 20, 2012
நாளை சம்மாந்துறையின் அனைத்து ஜும்ஆப் பள்ளிவாசல்களிலும் பிரார்த்தனை.
Tuesday, September 18, 2012
சம்மாந்துறையில் தேசிய வாசிப்பு மாதப் போட்டிகள்
போட்டி விபரங்கள்
கனிஸ்ட பிரிவு
கவிதை - தலைப்பு - அறிவுப் பசியின் உணவகம் நூலகம்
கட்டுரை- தலைப்பு - வாழும் காலமெல்லாம் வாசிப்பு ஒரு மனிதனுக்கு அவசியம்.
சிரேஸ்ட பிரிவு
கவிதை - தலைப்பு - “வாசகனாக இருந்து உன் உள்ளத்தில் நூலகம் ஒன்றைத் திறந்துவை“
கட்டுரை- தலைப்பு -“ பாமரனையும் பண்டிதனாக்கும் வாசிப்புக் கலை“
விதிமுறைகள்-
1. இப்போட்டிகளில் சம்மாந்துறை பிரதேச அதிகார எல்லைக்குட்பட்ட அனைத்து பாடசாலைகளினதும் கனிஸ்ட மற்றும் சிரேஸட பிரிவு மாணவர்்கள் பங்கு பற்ற முடியும்.
2. கனிஸ்ட பிரிவில் தரம் 6-9 வரையான மாணவர்களும்
சிரேஸ்ட பிரிவில் தரம் 10-13 வரையான மாணவர்களும் பங்கு பற்ற முடியும்.
3. கவிதைகள் அனைத்தும் 30 வரிகளைக் கொண்டவையாக அமைதல் வேண்டும்.
4. கனிஸ்ட பிரவிற்கான கட்டுரைகள் 250-300 சொற்களைக் கொண்டதாகவும் சிரேஸ்ட பிரிவிற்கான கட்டுரைகள் 750-800 சொற்களைக் கொண்டவையாக அருக்க வேண்டும்.
5. ஒரு மாணவர இரு நிகழ்ச்சிகளிலும் பங்குபற்ற முடியும்
6. போட்டியில் பங்கு பற்றி முதல் மூன்று நிலைகளைப் பெறுகின்ற மாணவர்களுக்கே பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.
7. எழுத்துக்கள் தெளிவில்லாத விடத்து புள்ளிகள் குறைக்கப்படும்.
8. தொகுக்கப்படட உங்களது கவிதை, கட்டுரைகளுககு தனியான முன்பக்கம் ஒன்றை அமைத்து அம் முன்பக்கத்தில் உங்களது முழுப்பெயர், பாடசாலைச் சுட்டெண், கற்கும் தரம்,பாடசாலை பெயர் என்பன சரியாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
9 எதிர்வரும் 30.09.2012 ம் திகதிக்கு முன்னர் அதிபரால் உறுதிப்படுத்தப்பட்டு தபாலிலோ அல்லது நேரடியாகவோ
விடயப் பொறுப்பாளர்,
கவிதை, கட்டுரைப் போட்டி,
அமீரலி பொது நூலகம்,
சம்மாந்துறை எனும் முகரிக்கு அனுப்பப்ட வேண்டும்.
10. குறித்த முடிவுத்திகதிக்கு பிந்தும் ஆவணங்களும், ஆக்கங்களும் நிராகரிக்கப்படும்.
தொடர்புகளுக்கு
யுஏ.ஆர்.எம்.இல்யாஸ்
விடயப் பொறுப்பாளர்,
கவிதை, கட்டுரைப் போட்டி,
அமீரலி பொது நூலகம்,
சம்மாந்துறை
077-2382174
067-2260853
கிழக்கு மாகாண முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீத் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்திய பிரமாணம்


Monday, September 17, 2012
நாளை சம்மாந்துறையில் துஆ பிரார்த்தனை

இன்ஷா அல்லாஹ் 2012-09-18ம்(செவ்வாய் கிழமை) திகதி இஷாத் தொழுகையின் பின் சம்மாந்துறை மஸ்ஜிதுல் உம்மா (புதுப்பள்ளி) யில் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் மௌலவி அலி அஹமட் றஷாதி அவர்கள் சிறப்புப் பிரசங்கம் செய்யவுள்ளார். பொதுமக்கள் அனைவரையும் இப்பிரார்த்தனை நிகழ்வில் கலந்த கொள்ளுமாறு பள்ளிவாசல் நிர்வாகத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.
Sunday, September 16, 2012
சம்மாந்துறையில் இறைச்சியில் இறை நாமமா??

Friday, September 14, 2012
கி.மா. சபை தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரம் ஹக்கீமிடம்
கிழக்கு மாகாண சபை ஆட்சி அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு வழங்கப்பட்டுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அமைச்சர் ஹக்கீம் தலைமையில் இன்று புதன்கிழமை காலை விசேட கூட்டமொன்று கொழும்பில் இடம்பெற்றது.
இக்கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த கூட்டத்தில் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
இதற்கமையாக, சில நிபந்தனைகளுடன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுடன் கட்சி தலைவர் ஹக்கீம் பேச்சு நடத்துவார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதேவேளை, இலங்கை வந்துள்ள பொதுநலவாய நாடுகளின் பொதுச்செயலாளருக்கு இன்று புதன்கிழமை இரவு ஜனாதிபதி வழங்கவுள்ள விருந்துபசாரத்தில் கலந்துகொள்ளவுள்ள அமைச்சர் ஹக்கீம், கிழக்கு மாகாண ஆட்சி அமைத்தல் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
அத்துடன், தமிழ் தேசிய கூட்டமைப்புடனும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாளை பேச்சு நடத்தப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் விசேட கூட்டத்தில் கட்சியின் ஒற்றுமை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவான உலமாக்களினால் வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் காயம்-சம்மாந்துறையில் சம்பவம்
Thursday, September 13, 2012
தயட்ட கிருல்ல சம்மந்தமாக விளக்கமளிக்கும் செயலமர்வு
உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு நேற்று புதன்கிழமை
சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட செயலக சிரேஷ்ட நிர்வாக அதிகாரி பிரேமதாச,
சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.அப்தல்
லத்தீப், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், மாவட்டப்பதிவாளர்
சீ.எம்.எம்.சத்தார் உட்பட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை
உத்தியோகத்தர்கள், பட்டதாரிப் பயிலுனர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள்,
வெளிக்கள உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு திணைக்களமட்டத்திலும் அமைச்சுக்களின் மட்டத்திலும் நடைபெறவுள்ள நடமாடும்
சேவைகள் உட்பட பிரதேச அபிவிருத்தி தொடர்பிலான பல்வேறு விடயங்கள் தொடர்பில்
ஆராயப்பட்டது.
Wednesday, September 12, 2012
கிழக்கு முதலமைச்சர் பதவி முஸ்லிம் காங்கிரசுக்கே! மத்திய அரசிலும் இரு அமைச்சுகள்; ஜனாதிபதி தீர்மானம்?
இம்முறை 5069 மாணவர்கள் மேலதிகமாக பல்கலைக்கழகங்களிற்கு சேர்த்துக்கொள்ளப்படுவர்
2011ஆம் ஆண்டு கா.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் படி ஏற்பட்ட இசெட் புள்ளி பிரச்சனைக்கு தீர்வாக 5,609 மாணவர்களை மேலதிகமாக நடப்பு ஆண்டில் பல்கலைக்கழகங்களில் சேர்த்துக் கொள்ளும் படி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வழமையாக ஒவ்வொரு ஆண்டிலும் 21,500 மாணவர்கள் நடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்களிற்கு அனுமதிக்கப்படுவர்.
2011ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களது இசெட் புள்ளி பிரச்சினை தொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை ஆராய்ந்து உரிய தீர்வினை முன்வைக்கும் படி நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.
இதற்கமைய பல்கலைக்கழக மானியங்கள் அணைக்குழு 3 தீர்வினை முன்வைத்திருந்தது.
இவற்றில் ஒன்று பல்கலைக்கழகங்களிற்கு மேலதிகமாக மாணவர்களை உள்வாங்குவது ஆகும்.
Tuesday, September 11, 2012
தீர்மானமின்றி கலைந்தது முஸ்லிம் காங்கிரஸ் கூட்டம்!
கிழக்கு மாகாண சபையில் ஆட்சியை அமைப்பதற்கு எந்த தரப்புடன் இணைந்து கொள்வது என்பது தொடர்பில் ஆராய்வதற்காக கூடிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டம் தீர்மானம் எதுவுமின்றி கலைந்துள்ளது..
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி தொடக்கம் கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் இடம்பெற்று இக்கூட்டம் இன்று மாலை ஏழு மணியளவில் முடிவுக்கு வந்துள்ளது.
நாளை காலை மீண்டும் ஒரு கலந்துரையாடல் இடம்பெறும் என்று அறிவிக்கப்படுகிறது.
இக்கூட்டத்தில் கட்சியின் தவிசாளர், செயலாளர் நாயகம் உட்பட எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள ஏழு உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர பிரதி முதல்வருமான நிசாம் காரியப்பர் ஆகியோருடன் எஸ்.எச்.ஆதம்பாவா உட்பட உலமாக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பணி நீக்கம் செய்தாலும் பகிஷ்கரிப்பு தொடரும்:பல்கலைக்கழக பேராசிரியர்கள்
பல்கலைக்கழக ஆசிரியர்களின் பிரச்சினைகள் தொடர்பாக மத்தியஸ்தம் வகிப்பதற்கு மத்தியஸ்தர் ஒருவரை நியமிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை மறுதலிப்பதற்கு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக அச்சம்மேளனத்தின் தலைவர் கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி கூறினார்.
மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொள்ளாமைக்காக பதவிகளிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு அல்லது சிறைக்கு செல்லவும் தாம் தயார்
முடிந்தால் தம்மை பணி நீக்கம் செய்து பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சவால் விடுத்துள்ளனர்.
தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படும் வரையில் பணிக்கு திரும்பப் போவதில்லை என தெரிவித்துள்ளனர்.
பணி நீக்கம் செய்யப்பட்டாலும் அது பற்றி கவலைப்படப் போவதில்லை என சுமார் நான்காயிரம் பல்கலைக்கழக விரிவரையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கைத்தொழில் பிணக்குச் சட்டத்தின்படி, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் மீது தன்னார்வ மத்தியஸ்தத்தை தொழில் ஆணையாளர் விதித்துள்ளார். மத்தியஸ்தர் ஒருவரை நாளை புதன்கிழமை நியமிக்குமாறு அவர் இச்சம்மேளனத்தை கோரியுள்ளார்.
கப்பல் துறைமுக அமைச்சினை தந்தால் கிழக்கில் அரசுக்கு ஆதரவு! ஹக்கீம்
கிழக்கு மாகாண சபையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கி அந்தக் கட்சி ஆட்சியமைக்க ஆதரவு வழங்க வேண்டுமாயின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சில கோரிக்கைளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என கட்சியின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கீம் கேட்டுக் கொண்டுள்ளார் என உத்தியோக பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்சவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே ஹக்கீம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார் என்றும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1. தனது நீதியமைச்சுக்குப் பதிலாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சினை தனக்கு வழங்குதல்
2. வெளிவிவகார பிரிதியமைச்சுப் பொறுப்பைத் தமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்குதல்.
3. தனது கட்சியைச் சேர்ந்த நால்வருக்கு உயர்ஸ்தானிகர் பதவிகளை வழங்குதல்.
போன்ற முக்கிய கோரிக்கைகளையும் ஹக்கீம் முன்வைத்துள்ளார் என்றும் அந்தச் செய்திகள் கூறுகின்றன.
Monday, September 10, 2012
எந்தக் கூட்டமைப்புடன் கூட்டு? – ‘கிங் மேக்கர்’ முஸ்லிம் காங்கிரஸ்
மாறியுள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், எந்தக் கட்சியுடன் கூட்டுச்
சேர்ந்து ஆட்சியமைக்கும் சக்தியாகத் திகழ்வது என்பது தொடர்பாக
பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.14 ஆசனங்களை வென்று சாதாரண பெரும்பான்மைப்
பலத்தைப் பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, தேசிய சுதந்திர
முன்னணி பெற்ற ஒரு ஆசன ஆதரவையும் சேர்த்து 15 ஆசன பலத்துடன் இருக்கிறது.இதேவேளை, 11 ஆசனங்களை வென்றுள்ள தமிழரசுக்
கட்சிச் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய
தேசியக் கட்சியின் 4 ஆசன ஆதரவையும் சேர்த்து 15 ஆசன – சமபலத்துடன்
இருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.இந்த நிலையில், முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய
மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடனா அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனா
கூட்டுச் சேரப்போகிறது என்பதைப் பொறுத்தே கிழக்கு மாகாணசபை ஆட்சி அமையும்
என்ற நிலை உருவாகியிருக்கிறது.கிழக்கு மாகாணத்தில் அதிக பேரம் பேசும் சக்தியை சிறிலங்கா முஸ்லிம்
காங்கிரசுக்கு வழங்கியிருப்பதால், இந்தச் சந்தர்ப்பத்தை உச்ச அளவில்
பயன்படுத்துவதற்கு அந்தக் கட்சி முயற்சிகளை மேற்கொள்வதாகத் தெரிகிறது.முஸ்லிம் முதலமைச்சர், சிறுபான்மை
இனங்களைப் பாதிக்கும் முடிவுகள் எதுவும் எடுக்கப்படக்கூடாது என்பது போன்ற
பிரதான நிபந்தனைகளை முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்து வருவதாக கட்சி
வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.எனினும், முதலமைச்சர் பதவியை வழங்க ஐக்கிய
மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பின்னடிப்பதாகவும், முஸ்லிம் பிரதிநிதி
ஒருவரை முதலமைச்சராக நியமிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக
இருப்பதாகவும், இதற்குப் பதிலளிக்கும் வகையில், மத்தியில் மேலும் 2
அமைச்சுப் பதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும், கிழக்கு மாகாண
முதலமைச்சர் பதவியை பிள்ளையான் அல்லது கருணா தரப்புக்கு வழங்குமாறு ஐக்கிய
மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்திருப்பதாகவும் முஸ்லிம் காங்கிரஸ்
கட்சியின் உயர் வட்டாரங்கள் மூலம் தெரியவந்திருக்கிறது.இந்த நிலையில், கிழக்கு மாகாணத்தில்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்வதால் கிடைக்கக்கூடிய முதலமைச்சர்
பதவியா? அல்லது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் சேர்வதால்
முதலமைச்சர் பதவி கிடைக்காவிட்டாலும், மத்தியில் கிடைக்கக்கூடிய மேலதிக
அமைச்சுப் பதவிகளா என்று தீர்மானிக்கவேண்டிய நிலைக்கு முஸ்லிம் காங்கிரஸ்
தள்ளப்பட்டிருக்கிறது.மேலதிகமாக, இந்த விடயத்தில் இந்திய மற்றும் அமெரிக்க அழுத்தங்களும்
பின்னணியில் செயற்படுவதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.முஸ்லிம் காங்கிரசின் பிரதான தளமாக
கிழக்கு மாகாணம் இ்ருந்தாலும், கிழக்குக்கு வெளியே நாட்டின் ஏனைய
பகுதிகளில் வாழும் முஸ்லிம்களின் நலன்கள் குறித்தும் முஸ்லிம் காங்கிரஸ்
கவனம் செலுத்தவேண்டிய தேவை இருப்பதால், கிழக்கு மாகாணசபை விடயத்தில் அது
எடுக்கும் முடிவு, தேசிய ரீதியாக அதற்குக் கிடைக்கக்கூடிய அதிகபட்ச நலன்களை
அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கும் என்றும், இதில், மாகாண மற்றும்
சர்வதேச தரப்புக்களின் அழுத்தங்கள் தீர்மானிக்கும் விடயமாக இருக்க மாட்டாது
எனவும், முஸ்லிம் காங்கிரசுடன் நெருக்கமான மூத்த ஊடகவியலாளர் ஒருவர்
தெரிவித்தார்.இதனடிப்படையில் பார்க்கும்போது,
தமிழரசுக்கட்சி முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கக்கூடிய அதிகபட்ச சலுகையான
முஸ்லிம் முதலமைச்சர் பதவியை, மத்திய அரசுடன் பேரம் பேசக்கூடிய அதிகபட்ச
காரணியாகப் பயன்படுத்தி, மத்திய அரசிடம் கூடுதல் இலாபங்களைப் பெற்று,
கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
ஆட்சியமைப்பதற்கே முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது
பத்தாவது வெற்றித்தேர்தலாக வரலாற்றில் இடம்பெறும்!
மாகாண சபை தேர்தல் வெற்றி குறித்து நன்றி தெரிவித்து ஜனாதிபதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி வெளியிட்டுள்ள அந்த விசேட செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது-
இந்த கிழக்கு சப்ரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி பெற்றுள்ளது.
இந்த தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடாத்தி சிறந்த ஒரு மக்கள் ஆணையை பெற்றுக்கொள்ள அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தேர்தல்கள் ஆணையாளர் திணைக்களத்திற்கும் ஆளும்- எதிர்க்கட்சி சகல வேட்பாளர்களுக்கும்- பாதுகாப்பு தரப்பினருக்கும்-
விசேடமாக இந்த மாகாணங்களைச் சேர்ந்த சகல பொது மக்களுக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் உணர்வுகளை இந்தத் தேர்தல் தெளிவாக வெளிப்படுத்தியது . எனது தலைமையில் 2005ம் ஆண்டு தொடக்கம் நடைபெற்று வரும் தேர்தலில் 10வது வெற்றியான இந்தத் தேர்தல் இலங்கையின் வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.
தேசிய மக்கள் கருத்து கணிப்பாக இம்முறை நடைபெற்ற இந்த தேர்தல் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.
ஜனநாயகத்தை பலப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்ட எமது அபிவிருத்தி வேலைத்திட்டத்தை எதிர்காலத்தில் மேலும் மேலும் முன்னெடுத்துச் செல்ல பலம் கிடைத்துள்ளது.
அதேபோன்று இனஇ, மத, குல, பேதங்களை காண்பித்து வெற்றியை எதிர்பார்த்திருந்த அனைத்து சக்திகளையும் தோல்வியடையச் செய்து, இலங்கையின் தேசம் மற்றும் அரசின் மீது நம்பிக்கை வைத்த மக்கள் தொடர்பில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.
ஒரு இலக்கை நோக்கி வெற்றிகரமாக நெருங்கக் கூடியதாக இருப்பது வெற்றியாளரைப் போன்று தோல்வியாளரும் இணைகின்ற போதே ஆகும். எனவே, நாடு எதிர்நோக்கும் சாவல்களின் போது பொறுப்புடனும் ஒன்றிணையுமாறு உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்."
ரவூப் ஹக்கீமுக்கு ஜனாதிபதி அழைப்பு!
இவ்வாறே கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை ஏற்படுத்துவது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடமிருந்து தனக்கு முதலாவதாக தொலைபேசி அழைப்பு வந்தது எனவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபை ஆட்சியை அமைப்பதற்கான ஆதரவினை யாருக்கும் வழங்குவதற்கு முன்னர்- கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நான் கலந்துரையாட வேண்டும். எவ்வாறாயினும் அர்த்தமுள்ள அதிகார பரவலாக்கம் மற்றும் நல்லாட்சி ஆகியவற்றை உருவாக்குவதற்கு ஆதரவளிப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்
முஸ்லீம் காங்கிரஸ், ஐ.தே.க வுடன் இணைவதற்கான உரிமை கோரல் கடிதம் சமர்ப்பிப்பு
நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்த தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 11 ஆசனங்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 7 ஆசனங்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 4 ஆசனங்களும் கிடைத்துள்ளன.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 2 போனஸ் ஆசனம் உட்பட 14 ஆசனங்கள் கிடைத்தன. இந்த நிலையில், கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் ஒன்றை இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசாவும் கையெழுத்திட்டு நேற்று (09.09.2012) ஞாயிற்றுக்கிழமை தொலைநகல் மூலம் மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கரமவிற்கு அனுப்பிவைத்தனர்.
Sunday, September 9, 2012
கிழக்கில் எக்கட்சிக்கும் தனித்து ஆட்சியமைக்க முடியாது!
இதேவேளை- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 4 ஆசனங்களையும் அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.
மொத்தமாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 200044 வாக்குகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு 193827 வாக்குகளையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 132917 வாக்குகளையும் ஐக்கிய தேசியக் கட்சி 74901 வாக்குகளையும் தேசிய சுதந்திர முன்னணி 9522 வாக்குகளையும் பெற்றுள்ளது.
நாளை மாகாண சபைத் தேர்தலில் வெற்றி ஈட்டிய வேட்பாளர்களின் நேரடி வெற்றிக் கொண்டாட்டம் எமது சம்மாந்துறை இணையத்தளத்தில் இணைத்திருங்கள் எம்மோடு www.sammanthuraihotnews.blogspot.com
கொண்டாட்டம் எமது சம்மாந்துறை இணையத்தளத்தில் இணைத்திருங்கள் எம்மோடு
www.sammanthuraihotnews.blogspot.com
சம்மாந்துறை இணையத்தள குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
வேட்பாளர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரம்
கூட்டமைப்பு வேட்பாளர் எம்.எல்.ஏ.அமீர் டீ.ஏ அவர்களையும் சம்மாந்துறை
இணையத்தள குழு சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவர்களது அரசியல் நகர்வுகளை செய்திகளாக வழங்க எமது இணையத்தளம் காத்துக்
கொண்டிருக்கிறது.
ரவூப் ஹக்கீமை கலந்துரையாடலுக்கு வருமாறு மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு
குணவர்த்தன ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமக்கு அழைப்பு விடுத்துள்ளதாக
அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இவ்வாறே கிழக்கு மாகாணத்தில் ஆட்சியை ஏற்படுத்துவது தொடர்பில் தமிழ்
தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடமிருந்து தனக்கு முதலாவதாக
தொலைபேசி அழைப்பு வந்தது எனவும் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபை ஆட்சியை அமைப்பதற்கான ஆதரவினை யாருக்கும் வழங்குவதற்கு
முன்னர், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடன் நான் கலந்துரையாட வேண்டும்.
எவ்வாறாயினும் அர்த்தமுள்ள அதிகார பரவலாக்கம் மற்றும் நல்லாட்சி
ஆகியவற்றை உருவாக்குவதற்கு ஆதரவளிப்போம்" என அவர் குறிப்பிட்டுள்ளார். TM
தீர்மானம் மேற்கொள்வதில் அவசரப்படமாட்டோம் - முஸ்லிம் காங்கிரஸ் அறிவிப்பு
வாக்குகள் தமக்கு தோல்வியல்ல என தெரிவித்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் இது
முஸ்லிம்களின் உணர்வுபூர்வ வெளிப்பாடு என குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் முஸ்லிம் காங்கிரஸின்
அடுத்தகட்ட நடவடிக்கை யாது என முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன்
அலியிடன் யாழ் முஸ்லிம் வினவியது. இதுதொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட
அவர் கூறியதாவது,
இடர்பாடுகள், அச்சுறுத்தல்கள் அதிகார துஷ்பிரயோகம் இவற்றுக்கிடையேதான்
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களை பெற்றுள்ளது.
அம்பாறையில் நாம் தனித்து 4 நின்று ஆசனங்களைப் பெற்றுள்ளோம். உண்மையில்
இதுதான் வெற்றி. திகாமடுல்ல முஸ்லிம்கள் முஸ்லிம் காங்கிரஸுக்கு 3
தொகுதிகளில் வெற்றியை பெற்றுத்தந்துள்ளனர். அவர்களுக்கும் முஸ்லிம்
காங்கிரஸுக்கு கிழக்கு மாகாணம் பூராகவும் வாக்களித்தமக்களுக்கு நன்றி
சொல்கிறோம்.
மக்களின் உணர்வுபூர்வ வெளிப்பாடாகவே முஸ்லிம் காங்கிரஸ் இந்தத் தேர்தல்
முடிவுகளை நோக்குகிறது. மக்களின் தீர்மானத்திற்கமையவே எமது முடிவுகளும்
அமையும். இருந்தபோதும் எந்தக்கட்சி ஆட்சியமைக்க உதவுவது என்ற தீர்மானத்தை
அவசப்பட்டு மேற்கொள்ளமாட்டோம். முஸ்லிம் சமூகத்தை முதன்மைப்படுத்தியே
எமது திர்மானங்கள் அமையும்.
கிழக்கு மாகாண ஆட்சி மற்றும் முஸ்லிம் முதலமைச்சர் தொடர்பில் எந்தக்
கட்சியுடனும் முஸ்லிம் காங்கிரஸ் பேச்சு நடாத்தும். நாங்கள் ஜனநாயக
கட்சி. அந்த அடிப்படையில் நாங்கள் இதற்கான உரிமையை பெற்றுள்ளோம்.
அத்துடன் நாளை திங்கட்கிழமை அம்பாறை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ்
முக்கியஸ்தர்கள் ஒன்றுகூட அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து
ஆராயவுள்ளதாகவும் ஹசன் அலி யாழ் முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.
15 முஸ்லிம் பிரதிநிதிகள் கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு
சபைக்கு தெரிவாகியுள்ள அம்பாறை ,திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட
மக்கள் பிரதிநிதிகளை அவர்கள் பெற்றுள்ள விருப்பு வாக்குகளுடன் தருகிறோம்
திருகோணமலை மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் இருந்து தலா நான்கு என்ற
அடிப்படையில் மொத்தமாக 08 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் 07 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். இதன்
பிரகாரம் மொத்தமாக 15 முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர், அதேவேளை
தமிழ் பிரதிநிதிகள் மொத்தமாக 12 பேர் தெரிவாகியுள்ளனர், சிங்கள
பிரதிநிதிகள் மொத்தமாக 07 பேர் தெரிவாகியுள்ளனர் (போனஸ் ஆசனங்கள் பற்றிய
விபரம் இடத்தில் உள்ளடக்கப் படவில்லை)
திருகோணமலை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள்.
அமைச்சர் நஜீப் அப்துல் மஜீட்- 11,726 -UPFA
ரம்ழான் அன்வர்- 10,904 -SLMC
ஹசன் மௌலவி- 10,123-SLMC
இம்ரான் மஹ்ரூப்- 10, 048-UNP
மட்டகளப்புமாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் .
அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி 21,271-UPFA
பொறியியலாளர் சிப்லி பாறூக் 20,407-UPFA
முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.சுபைர் – 19,303-UPFA
அஹமட் நசீர் செயினலாப்தீன் 11,401- SLMC
அம்பாறை மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் .
ஆதம்பாவா தவம், 32,330-SLMC
ஏ.எம்.ஜெமீல் 22,357-SLMC
ஐ.எம்.எம். மன்சூர் 21759-SLMC
ஏ.எல்.எம். நசீர் 18,327-SLMC
எம்.எஸ்.உதுமாலெப்பை 24,033-UPFA
ஆரிப் சம்சுதீன் 19,680-UPFA
ஏ.எம்.அமீர் 19,671-UPFA
திருகோணமலை மாவட்டம் தெரிவான அனைத்து உறுப்பினர்கள் விபரம்
இலங்கை தமிழரசுக் கட்சி
எஸ். தண்டாயுதபாணி- 20,850
குமார்சுவாமி நாகேஸ்வரன்- 10,910
ஜெஹதீஸன் ஜனார்த்தனன்- 8,560
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
ஆரியவதி கலபதி- 14,224
பிரியந்த பத்திரன- 12,393
அமைச்சர் நஜீப் அப்துல் மஜீட்- 11,726
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
ரம்ழான் அன்வர்- 10,904
ஹசன் மௌலவி- 10,123
ஐக்கிய தேசிய கட்சி
இம்ரான் மஹ்ரூப்- 10, 048
தேசிய சுதந்திர முன்னணி
ஜயந்த விஜயசேகர- 7,303
மட்டக்களப்பு மாவட்டம் தெரிவான அனைத்து உறுப்பினர்கள் விபரம்
இலங்கை தமிழரசுக் கட்சி
இரா. துரைரெத்தினம்- 29,148
கே. துரைராஜசிங்கம்- 27,719
ஞா.கிருஷ்ணபிள்ளை- 20,200
இந்திரகுமார் பிரசன்னா- 17,304
மா.நடராசா- 16,681
கோ.கருணாகரம்-16,536
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
சிவனேசத்துரை சந்திரகாந்தன்- 22,338
அமைச்சர் எம்.எஸ்.அமீரலி- 21,271
சிப்லி பாரூக்- 20,407
எம்.எஸ்.சுபையிர்- 19,303
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
ஹாபீஸ் நஷீட் அஹமட்- 11,401
அம்பாறை மாவட்டம் தெரிவான அனைத்து உறுப்பினர்கள் விபரம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு
விமலவீர திசாநாயக்க 31815
எம்.எஸ்.உதுமாலெப்பை 24,033
டி.வீரசிங்க 20,922
ஆரிப் சம்சுதீன் 19,680
ஏ.எம்.அமீர் 19,671
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
ஆதம்பாவா தவம், 32,330
ஏ.எம்.ஜெமீல் 22,357
ஐ.எம்.எம். மன்சூர் 21759
ஏ.எல்.எம். நசீர் 18,327
ஐக்கிய தேசிய கட்சி
யா கமகே 41,064
சந்திரதாஸ கலபதி 20,459
இலங்கை தமிழரசுக் கட்சி
தவராஜா கலையரசன் 12,122
ஐ. முருகேசு 10,812
Saturday, September 8, 2012
provincial council election 2012 eastern province
Freedom Alliance 200,044 31.58 % 14* members Ilankai Tamil Arasu
Kadchi 193,827 30.59 % 11 members Sri Lanka Muslim Congress 132,917
20.98 % 7 members United National Party 74,901 11.82 % 4 members
National Freedom Front 9,522 1.5 % 1 member
--
*firos123g@gmail.com
info@sammanthurai.tk*
*
www.sammanthurai.tk
www.sammanthurainews.com
www.saynotodowry.tk
www.newthilgates.tk
*
இன்றைய தேர்தல் வாக்களிப்பின்போது பத்து வன்முறைச் சம்பவங்கள், இருவர் கைது - பெப்ரல் அமைப்பு
இருப்பினும், பாரதூரமான சம்பவங்கள் எதுவும் இல்லை எனவும் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அதன்படி வாக்களிப்பு நிலையத்திற்கு முன்பாக துண்டுப்பிரசுரம் வெளியிடல், விருப்பு இலக்கத்தை பார்வைக்கு வைத்தல் உள்ளிட்டவை குறித்தே முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் தேர்தலில் இருந்து விலகியுள்ளதாகத் தெரிவித்து சிலரால் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதாகவும் எனினும் பொதுவாக நோக்குமிடத்து தேர்தல் அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாக ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இதேவேளை தேர்தல் சட்டங்களை மீறியோர் என்ற வகையில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதில் ஒருவர் போலியாக வாக்களிக்க முனைந்தார் என கிண்ணியாவிலும் மற்றையவர் சட்டவிரோத பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என ஹொரவப்பொத்தானையிலும் கைது செய்யப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கிழக்கில் சுமூகமான தேர்தல்: தற்போது 48 வீதமான மக்கள் வாக்களிப்பு
3 மாகாண சபைகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது
வாக்களிக்க தகுதி – 33,36,417
வாக்குச்சாவடிகள் – 3247
வாக்கு எண்ணும் நிலையம் – 236
* தொகுதி வாரியாகத் தேர்தல் முடிவு
* 3 மாகாணங்களில் 37 தொகுதிகள்
* 21,000 பொலிஸ் கடமையில்
* 4,000 கண்காணிப்பாளர்கள் களத்தில்
கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்தி ஆகிய மூன்று மாகாண சபைகளிலிருந்து 108 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று சனிக்கிழமை நடைபெறுகிறது. மேற்படி மூன்று மாகாண சபைகளிலிருந்தும் 108 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கென இம்முறை 3073 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர். 2011ஆம் ஆண்டின் தேர்தல் இடாப்பின் பிரகாரம் இன்று இடம்பெறும் தேர்தலில் 33 இலட்சத்து 36 ஆயிரத்து 417 பேர் (33,36,417) வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். வாக்கெடுப்புக்கென தேர்தல்கள் திணைக்களத்தினால் மூன்று மாகாண சபைகளுக்குமுரிய 37 தேர்தல் தொகுதிகளில் மூவாயிரத்து 247 (3,247) வாக்குச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன.
இன்று காலை 7 மணிக்கு அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு, திகாமடுல்ல, இரத்தினபுரி, கேகாலை ஆகிய ஏழு மாவட்டங்களிலுமுள்ள 37 தேர்தல் தொகுதிகளிலும் வாக்கெடுப்பு ஆரம்பமாகியது. தேர்தல் நடைபெறும் மாவட்டங்களின் தேர்தல் அலுவலகங்களிலிருந்து வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள் பூரண பாதுகாப்பிற்கு மத்தியில் எடுத்துவரப்பட்டுள்ளன.
தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால் 175 மேலதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்திற்கு 25 அதிகாரிகள் வீதம் இவர்கள் மேற்பார்வை நடவடிக்கைகளில் ஈடுபடுவர். தேர்தல் கடமைகளுக்கென நியமிக்கப்பட்ட மேலதிகாரிகளும் அரசாங்க ஊழியர்களும் தமக்கு வழங்கப்பட்டிருக்கும் வாக்குச் சாவடிகளில் அறிக்கையிடலை ஆரம்பிப்பர்.
மூன்று மாகாண சபைக்குமுரிய தேர்தலை கண்காணிப்பதற்கென இம்முறை சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமான உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவர். இவர்களுக்கு மேலதிகமாக கண்காணிப்பு வாகனங்களும் சேவையில் ஈடுபடுத்தப்படும். தேர்தல்கள் திணைக்களத்தினால் 400 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பஃவ்ரல், கஃபே ஆகிய கண்காணிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பல தனியார் கண்காணிப்பு நிறுவனங்கள் நீதியானதும் அமைதியானதுமான முறையில் தேர்தலை நடத்தும் பொருட்டு மிகுந்த ஆர்வத்துடன் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இதேவேளை 06 ஆம் திகதி முதல் 21 ஆயிரம் பொலிஸார் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண குறிப்பிட்டுள்ளார்.வாக்குச் சாவடியொன்றுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸார் மூவர் வீதம் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படுவரெனவும், மூன்று மாகாண சபைகளுக்குமுரிய தேர்தலுக்குமென 108 பொலிஸ் நிலையங்கள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடமையிலீடுபடுத்தப்படும் 21 ஆயிரம் பொலிஸாருள் 123 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் 1400 பொலிஸ் இன்ஸ்பெக்டர்களும் அடங்குவர்.
மேலும் 70 பெண் பொலிஸ் இன்ஸ்பெக்டர்களும் இவர்களில் உள்ளடக்கப்படுவரெனவும், பொலிஸார் வாக்குச் சாவடிகளில் மாத்திரமன்றி அதற்கு வெளியிலும் விசேட பாதுகாப்பு சேவைகளை முன்னெடுப்பர். நான்கு வாக்குச் வாடிகளுக்கு ஒரு பொலிஸ் நடமாடும் சேவையும் நடாத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளது. இவ்விசேட பொலிஸ் பாதுகாப்பு சேவை எதிர்வரும் 09ஆம் திகதி வரை தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் அமுலில் இருக்குமெனவும் அவர் சுட்டிக்காடடி உள்ளார்.
இதுவரை அமைதியான சூழலே காணப்படுவதாக கூறிய பிரதி பொலிஸ் மா அதிபர், கிழக்கு மாகாணத்தில் ஓரளவு பதற்றம் காணப்பட்ட போதிலும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் கிழக்கு மாகாணத்திற்கென விசேட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், தேர்தல் நடைபெறும் இடங்களில் அமைதியினை குழப்ப முயற்சித்தால் நடத்தப்படவிருக்கும் தேர்தலில் அநீதி ஏற்படாமையை உறுதிப்படுத்தும் முகமாக கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கென தேர்தல்கள் திணைக்களத்திலிருந்து விசேட அதிகாரிகளடங்கிய குழுவொன்றும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நீதியானதும் அமைதியானதுமான முறையில் தேர்தலை நடத்துவதற்கு ஏற்ற வகையிலான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல்கள் திணைக்களம் முன்னெடுத்து வந்துள்ளது. தேர்தல் முடிவடைந்ததும் தபால் மூல வாக்களிப்பின் முதலாவது பெறுபேற்றினை இன்று நள்ளிரவு 12 மணியளவிலும் முழுமையான வாக்களிப்பினது முதலாவது பெறுபேற்றினை மறுநாள் நாளை காலை 2 மணியளவிலும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் பிரதி ஆணையாளர் மொஹமட் தெரிவித்துள்ளார்.
வாக்குகள் 236 நிலையங்களில் எண்ணப்படும். வாக்கு எண்ணும் நிலையங்களுககு பஃவ்ரல், கஃபே ஆகிய கண்காணிப்பாளர்களுக்கு பார்வையிடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் 26 நிலையங்களிலும் திகாமடுல்லையில் 29 நிலையங்களிலும் திருகோணமலையில் 19 நிலையங்களுமாக கிழக்கு மாகாணத்தில் 74 வாக்கு எண்ணும் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அநுராதபுரம் மாவட்டத்தில் 42 நிலையங்களிலும் பொலன்னறுவையில் 23 நிலையங்களிலுமாக வடமத்திய மாகாணத்தில் 65 நிலையங்களில் வாக்குகள் எண்ணப்படும். கேகாலையில் 47 நிலையங்களிலும் இரத்தினபுரியில் 50 நிலையங்களிலுமாக சப்ரகமுவ மாகாணத்தில் 97 நிலையங்களில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திகாமடுல்ல, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 1162 வாக்குச்சாவடிகளில் நாளை தேர்தல் நடத்தப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளிலும் 414 வாக்குச் சாவடிகளில் வாக்கெடுப்பு நடத்தப்படும். இம் மாவட்டத்தில் 11 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கென 14 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு 3 இலட்சத்து 47 ஆயிரத்து 99 பேர் (3,47,099) வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
திகாமடுல்ல மாவட்டத்தில் அம்பாறை, சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளிலுமிருந்து 14 பேரை தெரிவு செய்வதற்காக 17 பேர் போட்டியிடுகின்றனர். இம்மாவட்டத்தில் 4 இலட்சத்து 41 ஆயிரத்து 287 (4,41,287) பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இங்கு 463 வாக்குச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் சேருவில, திருகோணமலை, மூதூர் ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளில் நாளை வாக்கெடுப்பு நடத்தப்படும். இங்கு 285 வாக்களிக்கும் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இம் மாவட்டத்தில் 10 பேரை தெரிவு செய்வதற்காக 13 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு 2 இலட்சத்து 45 ஆயிரத்து 363 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, கேகாலை ஆகிய இரண்டு மாவட்டங்க ளிலும் 1189 வாக்குச் சாவடிகளில் நாளை தேர்தல் நடத்தப்படும். இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலிய கொட, இரத்தினபுரி, பெல்மதுள்ள, பலாங்கொடை, இறக்குவானை, நிவித்தி கலை, கலவானை, கொலன்ன ஆகிய எட்டு தேர்தல் தொகுதிகளிலுமுள்ள 623 வாக்குச் சாவடிகளில் தேர்தல் நடத்தப்படும். இம் மாவட்டத்தில் 24 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கென 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இம் மாவட்டத்தில் 7 இலட்சத்து 69 ஆயிரத்து 814 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
கேகாலை மாவட்டத்தில் தெதிகம, கலிகமுவ, கேகாலை, இறம்புக்கனை, மாவனல்லை, அரநாயக்க, எட்டியாந் தோட்டை, ருவன்வெல்ல, தெரணியகலை ஆகிய ஒன்பது தேர்தல் தொகுதிகளிலும் 566 வாக்களிப்பு நிலையங்களில் நாளை தேர்தல் நடத்தப்படும். இங்கு 18 பேரை தெரிவு செய்வதற்கென 21 பேர் போட்டியிடுகின்றனர். 6 இலட்சத்து 31 ஆயிரத்து 981 பேர் இம்மாவட்டத்தில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
வடமத்திய மாகாணத்தில் அநுராதபுரம், பொலன்னறுவை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் 895 வாக்குச் வாவடிகளில் நாளை தேர்தல் நடத்தப்படும். அநுராதபுரம் மாவட்டத்தில் மதவாச்சி, ஹொரவப்பொத்தானை, அனுராதபுரம் கிழக்கு, அநுராதபுரம் மேற்கு, கலாவெவ, மிஹிந்தலை ஆகிய ஆறு தேர்தல் தொகுதிகளிலும் 608 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு நடத்தப்படும். இம் மாவட்டத்தில் 21 பேரை தெரிவு செய்வதற்கென 24 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு 6 இலட்சத்து 6 ஆயிரத்து 508 பேர்வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.
பொலன்னறுவை மாவட்டத்தில் மின்னேரியா, மெதிரிகிரிய, பொலன்னறுவை ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளிலும் 287 வாக்களிப்பு நிலையங்களில் நாளை வாக்கெடுப்பு நடத்தப்படும். இங்கு 10 பேரை தெரிவு செய்வதற்கென 13 பேர் போட்டியிடுகின்றனர். இம் மாவட்டத்தில் 2 இலட்சத்து 94 ஆயிரத்து 365 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். உத்தியோகப்பூர்வ தபால் மூல வாக்களிப்பு கடந்த மாதம் 27, 28 ஆகிய திகதிகளில் நடத்தப்பட்டதுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் யாவும் 05 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
மூன்று மாகாண சபைகளும் ஜூன் 27 ஆம் திகதி கலைக்கப்பட்டன. ஜுலை 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதிவரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஜுலை 12 முதல் 18 வரையான காலப் பகுதிக்குள் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. ஏழு மாவட்டத்திலுமிருந்து 91 கட்சிகள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தன. இதில் இரண்டு கட்சிகள் நிராகரிக்கப்பட்டன. வேட்பு மனுக்களை தாக்கல் செய்த 88 சுயேட்சைகளிலும் இரண்டு சுயேட்சைகள் நிராகரிக்கப்பட்டன. வாக்காளர் அட்டைகள் ஒகஸ்ட் 17 ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை விநியோகிக்கப்பட்டன. வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் தமது மாவட்ட தேர்தல் அலுவலகத்துடன் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Friday, September 7, 2012
அனுமதிப் பத்திரமின்றி கொண்டு வரப்பட்ட மாடுகள் பிடிப்பு
Wednesday, September 5, 2012
சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் கவனத்திற்க்கு.
அம்பாறையில் சுதந்திரமாக தேர்தலை நடாத்த முடியாது?
கிழக்கு மாகாணமே தேர்தல் விதிமீறல்கள் அதிகரிக்கும் மாகாணமாக உள்ளதாகவும் கஃபே அமைப்பினர் தெரிவிக்கின்றனர். இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் நீலநிற ஆடைகளுடன் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ள வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்களை தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுத்திவருவதாகவும் முறைப்பாடு கிடைத்துள்ளதாக கஃபே அமைப்பு சுட்டிக்காட்டியது. இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் சுதந்திரமான, நீதியான தேர்தலை உறுதி செய்வதற்காக காவல்துறையினருடன் இணைந்து உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் கூறினார்.
பதவிநிலை அதிகாரிகள் தரத்தில் இருப்பவர்களைத் தவிர ஏனைய அரச ஊழியர்கள் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதற்கான சுதந்திரம் இருப்பதாகக் கூறிய பிரதி ஆணையாளர், ஆனால் அவர்களை பிரசாரங்களில் ஈடுபடுமாறு அமைச்சோ அரச திணைக்களங்களோ பணிக்க முடியாது என்றும் சுட்டிக்காட்டினார்.