Tuesday, August 30, 2011
கிழக்குப் பல்கலை வேந்தராக பேராசிரியை யோகா!
கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வேந்தராக பேராசிரியை யோகா இராசநாயகம்
நியமிக்கப்பட்டுள்ளார். உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இந்த
நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை
பல்கலைக்கழக வரலாற்றில் மிகவும் மதிப்பு மிக்க உயர் பதவிகளில் ஒன்றாக
கருதப்படும் வேந்தர் பதவியினைப் பெறுகின்ற முதல் தமிழ் பெண்மணி இவர் ஆவார்.
நீண்ட காலம் பல்கலைக் கழக உயர் கல்விப் பணியில் ஈடுபட்டுவரும் இவர்
கொழும்பு பல்கலைக் கழகத்தில் கலைத் துறை பீடாதிபதியாகவும் பதில்
உபவேந்தராகவும் பல தடவை பணியாற்றியு ள்ளார்.
இங்கிலாந்தின் கேம்பிறிஜ் பல்கலைக் கழகத்தில் கலாநிதிப் பட்டத் தைப் பெற்றுக்கொண்ட இவர், உள்நாட்டி லும், வெளிநாட்டிலும் பிரபலமான விருதுகள் பலவற்றைப் பெற்றுக்கொண்டவர்.
இவை தவிர தேசிய சர்வதேச ரீதியில் செயற்படும் அமைப்புக்களில் அங்கத்தவராக செயற்பட்டுள்ளார். இவர் உயர் கல்விப் பணியில் அடைந்த அளவிடமுடியாத வெற்றிகளைக் கெளரவித்து கொழும்புப் பல்கலைக் கழகம் 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இவருக்கு இலக்கிய கலாநிதிப் பட்டமளித்து கெளரவித்தது.
கொழும்பிலுள்ள சொண்டா (Zonta) அமைப்பானது கல்வித்துறை மேம்பாட்டுக்காக இவர் ஆற்றிய பணியினைக் கெளரவித்து “சொண்டா பெண்கள் சாதனையாளர் விருதினை” 2004ம் ஆண்டு வழங்கி கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தின் கேம்பிறிஜ் பல்கலைக் கழகத்தில் கலாநிதிப் பட்டத் தைப் பெற்றுக்கொண்ட இவர், உள்நாட்டி லும், வெளிநாட்டிலும் பிரபலமான விருதுகள் பலவற்றைப் பெற்றுக்கொண்டவர்.
இவை தவிர தேசிய சர்வதேச ரீதியில் செயற்படும் அமைப்புக்களில் அங்கத்தவராக செயற்பட்டுள்ளார். இவர் உயர் கல்விப் பணியில் அடைந்த அளவிடமுடியாத வெற்றிகளைக் கெளரவித்து கொழும்புப் பல்கலைக் கழகம் 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இவருக்கு இலக்கிய கலாநிதிப் பட்டமளித்து கெளரவித்தது.
கொழும்பிலுள்ள சொண்டா (Zonta) அமைப்பானது கல்வித்துறை மேம்பாட்டுக்காக இவர் ஆற்றிய பணியினைக் கெளரவித்து “சொண்டா பெண்கள் சாதனையாளர் விருதினை” 2004ம் ஆண்டு வழங்கி கெளரவித்தமை குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Posts (Atom)
Pages
Pages
Visitors
474565
feature content slider
Content right
.
.
.