Friday, November 30, 2012

துருக்கியின் மறுமலர்ச்சி

துருக்கி மார்க்கம் போதிக்கும் பாடசாலைகளில் ஹிஜாப் தடையை நீக்கியுள்ளது. இந்த முன்னெடுப்பானது அங்குள்ள மதச்சாரபற்ற சக்திகளின் விமர்சனங்களைத் துண்டியுள்ளதுடன், துருக்கி அரசாங்கம் ஒர் இஸ்லாமிய நிகழ்ச்சி நிரலை நோக்கி நகர்வதற்கான சிறந்த சாட்சி இதுவேனவும் கூறியுள்ளன. 
துருக்கிய அரசியல் களத்தில் கல்வித்துறையானது. ஒரு முக்கிய மோதல் தளமாகக் கருதப்படுகின்றது. ஏ.கே.பி கட்சியின் பிரதம மந்திரி ரஜப் தையிப் அர்துகானின் முக்கிய ஆதரவாலர்களாக இருப்போரும், கபடமாக இஸ்லாமிய பெறுமானங்களை நுழைவிப்பதாக அவர் மீது குற்றம் சுமத்தும் மதச்சார்பற்றவாதிகளும் இத்தனத்தின் மீதே மோதிக்கொள்கின்றனர்.
மதச்சார்பற்ற சக்திகளுக்கு தீ மீது எண்ணெய் ஊற்றும் நிகழ்வாக இருந்தது, இவ்வருடம் அர்துகான் தமது முக்கிய இலக்காக குறிப்பிட்ட ஆன்மீக பக்குவமுடைய இளைஞர்களை உருவாக்குவது
என்பதாகும். மட்டுமன்றி கடந்த தசாப்தம் முழுவதிலும் ஏ.கே.பி அரசாங்கம் கல்வித்திட்டத்தில் செய்து வந்த மாற்றங்கள், மார்க்கப் பாடசாலைகளது பங்கினை மேலும் வலுவூட்டியிருந்தன. மேலும், செவ்வாயன்று அறிவிக்கப்பட்ட மாற்றங்களுக்கு அமைய 2013-2014 ஆம் ஆண்டுகளில் அமுலில் வரும் வகையில் சாதாரண பாடசாலைகளிலும் அல்குர்ஆன் பாடங்களுக்கு ஹிஜாப் அணிவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
புதிய மாற்றங்கள் பற்றி அர்துகான் மட்ரிடில் நடைபெற்ற ஒர் பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிடும் போது நாம் அனைவருக்கும் அவரகளது விருப்புக்கு, அவர்களது பண்பாட்டுக்கு ஏற்ப தமது பிள்ளைகளை அணிவிக்க இடமளிப்போம். இவை அனைத்தும் பொது வேண்டுதலின் விளைவாக எடுக்கப்பட்ட படிப்படியான மாற்றங்களாகும்.
துருக்கிய சாதாரண வாழ்க்கையிலும் இந்த மார்க்க சார்பான நிலைப்பாடுகளுக்கும் மதச்சார்பற்ற நிலைப்பாடுகளுக்குமிடையிலான முரண்பாடுகளைக் காணமுடியும். 1923 ஆம் ஆண்டு முதல் தம்மை மதச்சார்பின்மையின் பாதுகாவளர்களாக சுய நியமனம் செய்து கொண்ட இராணுவத்தை அவரகளது அதிகாரங்களிலிருந்து குறைப்புக்களைச் செய்ததெல்லாம் இந்த அர்துகானின் கடந்த தசாப்த ஆட்சியாகும். இதை இஸ்லாமிய வேர் கொண்டதாக மதச்சார்பற்ற சக்திகள் வர்ணித்த போதும், அதை அர்துகான் அரசு மறுத்தே வந்துள்ளது.
இந்நிலையிலே அண்மைக்காலம் வரை இவ்வாறான ஒரு நிகழ்வு இடம்பெறமுடியும் என்று நினைக்கக் கூட முடியாத, ஜனாதிபதி மற்றும் பிரதமர்களின் பாரியார்கள் ஹிஜாபுடன் சமூகமளித்திருக்க இராணுவ தளபதிகள் கலந்து கொண்ட வரவேற்பு நிகழ்வு ஜனாதிபதி மாளிகையி்ல் நடைபெற்றது.
இதேவேளை கம்ஹீரியாத்என்ற மதச்சார்பற்ற பத்திரிகை இதனை கல்வியை இஸ்லாமியமயப்படுத்தலுக்கான முதற்படியே இது எனக் குறிப்பிட்டுள்ளது.

பலஸ்தீனுக்கு அங்கீகாரம்

இஸ்ரேலின்  தாக்குதல்களுக்கு இலக்காகிவரும் பலஸ்தீனை ஐக்கிய நாடுகள் சபை ஒரு நாடாக அங்கீகரித்துள்ளதென தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் பலஸ்தீனத்திற்கு ஆதரவாக 139 நாடுகள் வாக்களித்துள்ளன மற்றும்  எதிராக ஒன்பது நாடுகளும் வாக்களித் துள்ளன.ஆனால் இந்த வாக்கெடுப்பில் 41 நாடுகள் பங்கேற்கவில்லை.
இதன்படி உறுப்புரிமையில்லா கண்காணிப்பாளர் நாடாக பலஸ்தீனை ஐ.நா.சபை அங்கீகரிப்பதற்கு அதன் பொதுச் சபை இணக்கம் வெளியிட்டுள்ளது.
இந்த அறிவிப்பானது தனி நாடு கோரும் பலஸ்தீனத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என கருதப்படுகிறது.
இந்த வாக்கெடுப்பு முடிவு மூலம் இரு நாட்டு ரீதியான தீர்வுத் திட்டமொன்றை இஸ்ரேலுடன் ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக பலஸ்தீனத் தலைவர் மொஹமட் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த வாக்கெடுப்பானது சமாதான முனைப்புக்களைப் பின்னடையச் செய்யும் என இஸ்ரேல் பிரதிநிதி கூறியுள்ளார்.
பலஸ்தீனத்தை நாடாக ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை வாக்கெடுப்பு முடிவுகளைத் தொடர்ந்து பலஸ்தீன மக்கள் ரமல்லா நகரில் பாரியளவில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

கிரக ஒழுங்கு- அரிய நிகழ்வு

எதிரவரும் டிசம்பர் 3ம் திகதி 3 கிரகங்கள் நேர்கோட்டில் வரவுள்ளன.
சில இணையத்தளங்களின் தகவல்களின் படி 2737 வருடங்களுக்கொருமுறை நிகழும் இவ்வரிய நிகழ்வு எகிப்தின் மர்மப் பெட்டகமான கீஸா பிரமிடுகளின் மேல் வானிலே 3 கிரகங்களும் வரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

சனி, வெள்ளி, புதன் கிரகங்களே இவ்வாறு அமையவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

Wednesday, November 28, 2012

பெரியபள்ளிவாசலில் கிரகணத் தொழுகை

இன்று  சந்திர கிரகரணமாகும். கிரகணத்தை முன்னிட்டு இதனால் சம்மாந்துறை பெரிய பள்ளிவாசலிலும் விஷேட கிரகணத் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது நெடு நேரம் நடாத்தப்பட்ட இத்தொழுகையில் பெருமளவான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மறைந்த அமைச்சருக்கான கதமுல் குர்ஆன் நிகழ்வு

மறைந்த அமைச்சர் அல் ஹாஜ் மர்ஹும் எம்.ஏ.அப்துல் மஜீட் அவர்களின் முதலாவது  வருட ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு கதமுல் குர்ஆனும் துஆப் பிரார்த்தனையும் மாலைவட்டம் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் இன்று 2012-11-29 அதிகாலை சுபஹுத் தொழுகையின் பின்னர் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நடைபெற்றது..

இந்த நிகழ்ச்சியில் பெருமளவானோர் கலந்து கொண்டு அன்னாரின் மறுமை வாழ்வு ஈடேற்றம் பெற பிரார்த்தித்ததோடு அன்னாரின் நற்பணிகளையும் நினைவு கூர்ந்தனர்.

இந்த வருடத்தின் இறுதி சந்திர கிரகணம்

இந்த வருடத்தின் இரண்டாவதம் இறுதியானதமான சந்திர கிரகணம் இன்று (2012-11-28) திகதி இடம்பெற்றது.

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி நேர்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படும் இவ்வரிய நிகழ்வு பல ஆண்டுகளுக்கு ஒரு முறையே அதே போல் நிகழும்.
இவ்வாறான கிரகணமொன்று இன்று இடம்பெற்றது. அதனை இலங்கையில் சிறிதளலு காணக்கூடிய வாய்யு இருந்தது எனினும் காலநிலை மாற்றம் காரணமாக முகில்கள் சூழ்ந்த நிலையில் வானம் காணப்பட்டது. இதனால் கிரகணத்தை தெளிவாக பார்க்க கூடிய வாய்ப்பு  பல இலங்கையர்களுக்கு தவறவிடப்பட்டது.  

மர்ஹும் எம்.ஏ.அா்துல் மஜீட் அவர்களின் முதலாவது வருட நினைவு

சம்மாந்துறை அரசியல் சமூக வரலாற்றில் அதிககாலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட மறைந்த முன்னாள் அமைச்சர் அப்துல் மஜீட் அவர்களின் முதலாவது வருட நினைவு தினம் இன்றாகும் .
1926-10-15ம் திகதி அஹமது லெப்பை உடையார் முகம்மதலி , அப்துல் மஜீட் வன்னிமை கதீஜா தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். சம்மாந்துறை அரசினர் தமிழ்ப்பாடசதலையிலே ஆரம்பக் கல்விகற்ற இவர் . மட்டக்ளப்பு சிவானந்தா வித்தியாலயத்திலே தனது இடைநிலை கல்வியைத் தொடர்ந்தார். பின்னர் பல்கலைக்கழகம் பிரவேசித்த அன்னார் கிழக்கிலங்கையிலேயே முதலாவது முஸ்லிம் பட்டதாரியாக 1949ம் வருடம் வெளியானார்.

சம்மாந்துறை மக்களின் வாழ்வாதார, கல்வி, விவசாய, பொருளாதார, சமூக அபிவிருத்திக்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவர் பட்டின சபைத் தவிசாளராகவும், தவிசாளராகவும், மாவட்ட அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், பிரதி அமைச்சராகவம், அமைச்சராகவும் பல்துறைகளிலும் இருந்து சமூகப்பணி செய்தார்.

சேவையின் சிகரமென புகழப்பட்ட இவர் கடந்த 2011ம் வருடம் நவம்பர் 29ம் திகதி சம்மாந்தறை ஆதார வைத்தியசாலையில் இறையடி எய்தினார்.

சம்மாந்துறையின் முதலாவது வரலாற்று ஆவணப்படம் வெளியீடு

சம்மாந்தறையின் வரலாற்றெழுதியலின் ஒரு மறுமலர்சியுகம் 2012ல் ஆரம்பமாகியுள்ளது.
குறிப்பாக சம்மாந்தறையின் வரலாற்றில் அதிகளிவான வரலாற்று தொகுப்புகள் வெளியாகியுள்ள வருடமாக 2012ம் வருடத்தைக் கொள்ளலாம்
வெண்முத்து, அறுவடை, ஈழத்தின் இன்னுமொரு மூலைக்குப் பின்னர் மீலாத் மலர், திறப்பு விழாமலர்கள் , பட்டறை  வரை ஆங்காங்கே சேகரிப்புகள் இடம்பெற்றிருந்தாலும் 2012ம் வருடத்தில் சம்மாந்துறையின் முதலாவது வரலாற்றுத் தொகுப்பு தனி நூலாக “சம்மாந்துறை பெயர் வரலாறு“ கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகியிருந்தது. அதன் பின்னர்  “சம்மாந்துறை அரசியல் வரலாறு” எனும் நுர்ல் வெளியானது. அதன்பின்னர் பிரதேச செயலகத்தின் தகவல் களஞ்சியமான பட்டறை வெளியானது, பின்னர் சம்மாந்துறையிலுள்ள குடிகள் பற்றிய “முஸ்லிம்கள் மத்தியில் குடிவழிமுறை“ எனும் நூல் அண்மையில் வெளியானது.

இந்த வரிசையில் டீகே இணைய குழுமமும் இணைந்து கொள்கின்றது சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் ஒரு வரலாற்றுப்பார்வை என்ற முதலாவது ஆவணப்படத்தை கடந்த 2012-11-26ம் திகதி இமய விழாவில் வெளியிட்டு வைத்தது.

Monday, November 26, 2012

இமயவிழா 2012-400000 பார்வைகள்

சம்மாந்தறை டீகே இணையதளம் நான்கு இலட்சம் வாசகர்களைக் கடந்துள்ளது.
மேற்படி இமயம் நோக்கிய இந்த நிகழ்வைக் கொண்டாடும் முகமாக இன்று டீகே மீடியா குழுமத்தினால் இமய விழா நிகழ்வொன்று சம்மாந்தறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
கடந்த 2008 ம்வருடம் ஆரம்பிக்கப்பட்ட இந்த இணைய ஊடகம் கடந்த நான்கு வருடங்களில் நிகழ்த்திய சாதனைகள் மற்றும் சேவைகள் என்பன பற்றிய கண்ணோட்டமும். சம்மாந்துறை 2012 எனும் தொகுப்புப் பார்வையும். இணைய தளத்தின் 400000 பார்வையாளர்களை தாண்டிய நிலைகள் பற்றிய 400000 பார்வைகள் எனும் நிகழ்வும் இடம்பெற்றது மற்றும் விஷேடமாக டீகே இணைய குழுமத்தின் கூட்டு முயற்சியில் உருவான ” சம்மாந்தறை பெரிய பள்ளிவாசல் ஒரு வரலாற்றுப்பார்வை“ எனும் ஆவணப்படமும் வெளியிட்டு வைக்கப்பட்டது. சம்மாந்தறை வரலாற்றில் முதன்முதலாவது ஒளிப்பதிவு வரலாற்று ஆவணப்படம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வுக்கு அதிதிகளாக சம்மாந்தறை பிரதேச சபைத்தவிசாளர் ஏ.எம்.எம்.நௌசாத் , மற்றும் மத்தியஸ்த சபை தலைவர் எஸ் அப்துல் றாஸிக், முன்னாள் தவிசாளர் ஐ.எம்.இப்றாஹீம், மற்றும் கவிஞரும் ஆய்வாளருமான பௌஸ்தீன் அவர்களும்  கெப்ஸோ நிறுவனத்தை சேர்ந்த சகோதரர் இம்டாட் மற்றும் பல பிரமுகர்களம் ஊடகவியலாளர்களும் கலந்து சிறப்பித்தனர்

Saturday, November 24, 2012

KINDS 21 அமைப்பின் இலவச செயலமர்வு


சம்மாந்துறை Kinds-21 Association அமைப்பின் ஏற்பாடடில் இலவச செயலமர்வொன்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எதிர்வரும் டிசம்பர் மாதம் க.பொ.த சாதாரண தரப் பரிட்சையை எழுதவிருக்கும் மாணவர்களுக்காக முற்றிலும் இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த செயலமர்வு இரண்டாவது நாளாக விஞ்ஞானப்பாடத்திற்காக இடம்பெற்றிருந்தது. 250-300 வரையிலான மாணவர்கள் கலந்து பயன்பெற்றனர். ஏற்கனவே ஆங்கில பாடத்திற்கு நடாத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் 27ம் திகதி அமைப்பினரால் அல்மர்ஜான் மகளிர் கல்லூரியில் கணித பாடத்திற்கும் செயலமர்வொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

முர்சி முக்கிய தீர்மானம்

வியாழன் இரவு ஜனாதிபதி முர்ஸியின் பேச்சாளரின் அறிவிப்புக்களை அடுத்து எகிப்து அரசியல் களம் அதிர்ந்து போயுள்ளது. காஸா தாக்குதல்களுக்கு ஒரு முடிவு கட்டப்பட்ட சூடு  தணிவதற்கு முன்னாலே முர்ஸியின் இந்த அதிரடி நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. முபாரக் கால அதிகாரிகளை களை எடுக்கும் ஒர் நகர்வாகவே நேற்றைய தீர்மானங்கள் நோக்கப்படுகின்றது.
முர்ஸியினால் நேற்று அரசியல் யாப்புக்கு சேர்க்கப்பட்ட விடயங்கள், 2011 ஆம் ஆண்டு புரட்சியினால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மிக முக்கிய விடயங்களாக கருதப்படுகின்றது. முர்ஸியின் இந்த அறிவிப்பினைத் தொடரந்து தஹ்ரிரில் ஒன்று கூடிய நூற்றுக்கணக்கான மக்கள் தமது ஆதரவுக் குரல்களை எழுப்பினர்.
 முர்ஸியினால் நேற்று அறிவிக்கப்பட்ட யாப்புக்கான முக்கிய சேர்க்கைகளாவன 
1. ஜனாதிபதியினால் அறிவிக்கப்படுகின்ற அறிவிப்புக்கள், சட்டங்கள் மற்றும் யாப்புக்கான சேர்க்கைகள் அனைத்தும் நீதித்துறை உட்பட எந்த ஒரு அதிகாரத்தினாலும் செயலிழக்கச் செய்யவோ தாக்கல் செய்யவோ முடியாது.
2. எகிப்துக்கான யாப்பு வரைஞர் குழு மற்றும் பாரளுமன்ற உயர் சபையான ஸூரா சபை என்பன நீதித்துறை உட்பட எந்த ஒரு அதிகாரத்தினாலும் செயலிழக்கச் செய்யவோ களைக்கப்படவோ முடியாது. மேலும், யாப்பு வரைவுக்கான காலவரையறை இரண்டு மாதங்களினால் நீடிக்கப்படுவதுடன் யாப்பு ஆவணப்படுத்தலுக்கான காலம் 8 மாதங்களாக நீடிக்கப்படுகிறது.
3. ஜனவரி 25 தொடக்கம் புரட்சியில் ஈடுபட்டோரை கொலை செய்தல், அவர்களை காயப்படுத்தல் போன்றவற்றில் ஈடுபட்டோருக்கான சட்டத்தீர்ப்புக்களை மீள்தீர்ப்புக்கு உட்படுத்தல். மற்றும் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைத்து அரச அதிகாரிகளையும் ஓய்வு பெறச்செய்தல்.
4. சட்ட  மா அதிபர் அப்துல் மவ்ஜீத் மஹ்முத் ஓய்வுக்கு உட்படுவதுடன் அவரது பதவிக்கு தளத் இப்றாஹீம் நியமிக்கப்படுகிறார்.

Thursday, November 22, 2012

மாபெரும் கண்டணிப் பேரணி











 இஸ்ரேலிய யுதர்களின் பலஸ்தீன் காஸா மீதான வெறியாட்டத்தைக் கண்டித்து இன்று மாபெரும்  கண்டணப் பேரணி அமைதியான முறையில் தென் கிழக்குப் பல்கலைக் கழக ஒலுவில் வளாகத்தில் முஸ்லிம் மஜ்லிஸ் மற்றும் மாணவர் பேரவையின் தலைமையில் இடம்பெற்றது.

Wednesday, November 21, 2012

இஸ்லாமிய புதுவருடத்தை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கொண்டாட்டம்


வௌ்ளிக்கிழமை (16.11.2012) ஆரம்பமான இஸ்லாமிய புதுவருடமான ஹிஜ்ரி 1434முஹர்ரம் மாதத்தை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் பொறலை அஹதிய பாடசாலையுடன் இணைந்து பாடசாலையின் அதிபர் ஷிப்லி ஹாசிம் தலைமையில் முஹர்ரம் பிரதான நிகழ்வை தெமடகொட வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் இல் நடாத்தியது.
மேற்படி நிகழ்வில் சிறைச்சாலைகள் திணைக்களத்தின் மேலதிகச் செயலாளர் எம்.ஐ.அமீர்,முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் வை.எல்.எம்.நவவிஉதவிப் பணிப்பாளர் மௌலவி நூறுல் அமீன், ஜனாதிபதியின் சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான ஹஸன் மௌலானசரத் ஹெட்டியாராச்சி, , மற்றும் அஹதியாப் பாடசாலைகளின் சம்மேளன அங்கத்தவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பணிப்பாளர் நவவிஹஸன் மௌலானாஅருட் தந்தை சரத் ஹெட்டியாராச்சி,அஹதியா பாடசாலை அதிபர் ஷிப்லி ஹாசிம் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.
அஹதியாவின் 25 வருட கால சேவையை பாராட்டி அதிதிகளால் ஷிப்லி ஹாசிமுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
Hijri1
Hijri8
Hijri7
Hijri2

வாகன விபத்தில் ஒருவர் பலி

கல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியின் ஒலுவில் எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அக்கரைப்பற்று, கோமாரி பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான கணேசமூர்த்தி என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் அக்கரைப்பற்று- மட்டக்களப்பு தனியார் பஸ்ஸின் நடத்துனருமாவர்.

பயணிகளுடன் மட்டக்களப்பிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த போது ஒலுவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பஸ்ஸை நிறுத்துவதற்கு முற்பட்ட போது மிதிபலகையிலிருந்து தவறி விழுந்துள்ளார். இதனால், இவரின் தலையில் பஸ் ஏறியமையினாலேயே இவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து தொட்ர்பான மேலதிக விசாரனைகளை அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் விஜயரத்தின தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். 






கமு/ சது/ முஸ்லிம் முஸ்லிம் மகளிர் வித், 2013ற்கு புதிய மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பம் கோரல்


கமு/ சது/ முஸ்லிம் முஸ்லிம் மகளிர் வித், 2013ற்கு புதிய மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பம் கோரல்
புதிய மாணவர்கள சேர்ந்துக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவம் 2012.11.21ஆந் திகதி முதல் பாடசாலையில் வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  
சிறந்த கல்விச் சமூகம் ஒரு நாட்டிற்கும், அந்தச் சமூகத்திற்கும், அந்த பிரதேசத்திற்கு சிறந்த சொத்தாக காணப்படுகின்றது. அவ்வாறான பணிகளை 1938ம் ஆண்டு தொடக்கம் இந்த மண்ணிலிருந்து செய்து வரும் இந்த பாடசாலையானது பல கல்விமான்களை பல அறிஞர்களையும் இந்த சமூகத்திற்கு வழங்கி அதன் பெருமையை நாளாந்தம் தெரியப்படுத்திக்கொணடிருக்கின்றன.

இந்த  வகையில் அதன் வளர்ச்சியிப்பாதையில் அதற்கான ஒத்துழைப்பு வழங்கி கொண்டிருக்கும் சம்மாந்துறை சமூகத்திற்கும், ஏனைய அரசியல்வாதிகளுக்கும் நன்றிகளைச் சொன்னால் ஒன்றும் சேர்வடைந்து போவதில்லை.
மேலும் பல சாதனைகளை நடாத்த திட்டமிட்டுல்ல இந்தப்பாடசாலை எதிர்வரும் காலங்களில் ஒரு சிறந்த ஆரம்ப நிலைப்பாடசாலையாக தோற்றம் பெறுவதற்கான முனைப்பில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டிருக்கின்றது. அதன் ஊடாக ஆரம்ப மாணவர்களின் கல்வி நிலையை விருத்தி செய்து அவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதன் ஈடாக சிறந்த கல்விச் சமூகத்தை பெற அனைவரும் ஒத்துழைப்பு வழங்கு வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
-    ஏ.எம்.தாஹா நழீம்

21-11-12 பாலின்ரோம் திகதி

பாலின்ரோம் palindrome என்பது ஒரு வார்த்தை அல்லது ஒரு எண்தொடர் அல்லது ஏதோ ஒரு வரிசை, முன்னால் இருந்தோ அல்லது பின்னால் இருந்தோ வாசிக்கும் போது ஒரே மாதிரியாக அமைந்திருத்தல் ஆகும்.

உதாரணமாக “விகடகவி“ என்ற சொல்
“மாடு பாடுமா“ என்ற வசனம் பொன்றவை
இது போலவே திகதிகளிலும் பாலின்ரோம் திகதிகள் உண்டு

அவ்வாறான ஒரு திகதியே 21-நவம்பர்-2012 ஆகும் அதாவது இதனை எழுதும் போது திகதி-மாதம்-வருடம் என்ற ஒழுங்கில் எழுதும் போது 21-11-12 என வரும் . இவ்வாறான திகதிகள் அரிதாகவே காணப்படகின்றன.

Tuesday, November 20, 2012

ஜனாதிபதியின் பிறந்ததினத்தை முன்னிட்டுசம்மாந்துறையில் மர நடுகை




ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 67வது பிறந்த தினத்தை முன்னிட்டும் ஜனாதிபதியின் பதவியேற்பின்  இரண்டாவது பதவிக் காலத்தின் 2வது வருடப் நிறைவையிட்டும் சம்மாந்துறைப் பிரதேச சபையின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும் சம்மாந்துறை தொகுதியின்  சுதந்திரக் கட்சியின் அமைப்பாளருமான அல் ஹாஜ் ஏ.எம்.எம்.நௌஷாட் தலைமைமையில் மரம் நடுகை நிகழ்வும், பிராத்தனையும் இன்று சனிக்கிழமை (2012-11-20) காலை சம்மாந்துறை  சென்னல் கிராம நிலையத்தில் நடைபெற்றது .

 இந்நிகழ்வில், பிரதேச சபை உதவித் தவிசாளர் எம்.ஏ.கலீலுர் றஹ்மான்,  பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.ஜீ.எம்.சிப்லி, எம்.ஐ.றனூஸ், எம்.பி.முகைதீன், தியாகரன் ஆகியோரும் மற்றும் பிரதேச சபையின் செயலாளர் எம்.எம்.சலீம் உட்பட பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது,  ஜனாதிபதியின் தேக ஆரோக்கியத்துக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும்  சம்மாந்துறை மத்தயஸ்த சபையின் தவிசாளரும் உலமா சபையின் செயலாளருமான மௌலவி எம்.ஐ.அச்சு முகம்மது அவர்களின்  துஆப் பிராத்தனையும் இடம்பெற்றது.

குடி வழிமுறை தகப்பன் வழியே- அஷ்ஷைஹ் எம்.பி.அலியார் ஹஸ்ரத்


Monday, November 19, 2012

சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித், ஜனதிபதியின் 67 அகவையை முன்னிட்டு சான்றிதழ் வழங்கும் வைபவம்

சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித், ஜனதிபதியின் 67 அகவையை முன்னிட்டு சான்றிதழ் வழங்கும் வைபவம்

எமது ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாட்டில் பல்வேறுபட்ட நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளது என்பதை நாங்கள் அறிந்த விடயமே. குறிப்பிட்டுச் சொல்லப் போனால் மர நடுகை, மதசார்பான நடவடிக்கைகள் சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.

 

கல்வி அமைச்சின் சுற்று நிருபதிற்குகமைவான முறையில்  சம்மாந்துறையில் உள்ள புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகளவான பிள்ளைகளை சித்தியடைவைக்கும் பாடசாலையான கமு/ சது/ முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் இந் நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வானது அரசியல் சார்பான ஒரு பிரமுகரின் பிரசன்னத்துடன் நடாத்தப்பட வேண்டும் என்றும் அந்த சுற்றுநிருபத்தில் கோரப்பட்டிருந்தததும் இங்கு ஒரு முக்கிய விடயமாகும்.

இந்த கோரிக்கைக்கமைவாக சம்மாந்துறை கல்வி வலயத்தில் சமாதான கல்விக்கான  இணைப்பாளராகவும் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஏ. முகம்மட் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து இந் நிகழ்வை சிறப்பித்தார்.

அத்துடன் இப்பாடசாலை அதிபர் TM. தௌபீக் மற்றும் இப்பாடசாலையின் செயற்பாட்டாளர் .AM. தாஹா நழீம் தரம் -5 கற்பிக்கும் ஆசிரியைகளான RUM.மன்சூர், AU. றிம்லான், AB. பரீதா ஆகியோர்  இந்த நிகழ்வில் கலந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 70 மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி ஜனாதிபதி அவர்களின் 67 பிறந்த தின நிகழ்வை மிக விமர்சியாக கொண்டாடினார்கள். 





Sunday, November 18, 2012

இஸ்ரேல் பொய்யும் புழுகும் நிறைந்த ஒரு நாடு-யூசுப் அல் கர்ளாவி

ஷெய்க் யூஸுப் அல் கர்ளாவி சென்ற வெள்ளிக்கிழமை முதன் முறையாக உலகப் புகழ்பெற்ற ஜாமிஉல்-அஸ்ஹரில் (அல்-அஸ்ஹர் பள்ளிவாசல்) ஜும்ஆ பிரசங்கத்தை நிகழ்த்தினார். “உலகின் முன்னணி பள்ளிவாசல்கள் பலவற்றில் நான் பேசி இருக்கிறேன். ஆனால், அல்-அஸ்ஹரில் பேசுவது இதுவே முதல் முறை“ என அவர் அங்கு குறிப்பிட்டார்.
இதன்போது, காஸாவில் தற்போது இடம்பெற்றுவரும் தாக்குதலை கண்டித்தமைக்காக எகிப்தின் ஜனாதிபதி முஹம்மத் முர்ஸிக்கும் கட்டார் நாட்டுக்கும் அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.

காஸா மீதான இஸ்ரேலின் அடாவடித்தனத்தை அவர் இப்பேருரையில் வன்மையாகக் கண்டித்தார். “கொல்லப்படும் அளவுக்கு காஸா மக்கள் என்னதான் செய்தார்கள்?. இஸ்ரேல் பொய்யும் புழுகும் நிறைந்த ஒரு நாடு. வரலாறு முழுவதும் அது அதனையே செய்து வந்திருக்கிறது“ எனவும் அவர் சாடினார்.

சிரிய மக்களுக்கு எதிராக பஷார் அல் அஸத் செய்யும் கொடுமைகளையும் அவர் கண்டித்துப் பேசினார்.

உலக இஸ்லாமிய அறிஞர்களின் ஒன்றியத்தின் தலைவராக கர்ளாவி உள்ளார். ஜமால் அப்துன் நாஸரின் காலத்தில் எகிப்தில் இருந்து வெளியேறிய அவர் கட்டாரில் தற்போது வாழ்ந்து வருகிறார்.

2011 ஜனவரி 25 புரட்சியின் காரணமாக முபாறக் வீழ்த்தப்பட்ட ஒரு வாரத்தின் பின்னர், தஹ்ரீர் சதுக்கத்தில் கர்ளாவி குத்பாவை (வெள்ளிக்கிழமை நிகழ்த்தும் மார்க்க உரை) நிகழ்த்தினார். இதில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.
கர்ளாவி 1926 இல் எகிப்தில் பிறந்தார். அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற அவர், இன்று சர்வதேச அளவில் செல்வாக்கு மிக்க இஸ்லாமிய அறிஞராகத் திகழ்கிறார். நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

இன்று ஜனாதிபதியின் பிறந்தநாள்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 67 ஆவது பிறந்த தினம் இன்றாகும் அவரது பிறந்த தினத்தினை முன்னிட்டும், அவர் இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்று இன்று 8 ஆவது வருடமாவதை முன்னிட்டும் நாட்டின் பல பகுதிகளில் விசேட நிகழ்வுகளும் மரநடுகை நிகழ்வுகளும்  முதியோர் கெளரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன. 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் 1945ம் வருடம் நவம்பர் மாதம் 18ம் திகதி ஹம்பாந்தோட்டையில் பிறந்தார். 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இரண்டாவது பதவிக்காலத்தின் மூன்றாவது வருட பூர்த்தியும் அவரின் பிறந்த நாளும் அதாவது ஒரே நாளில் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்

இஸ்ரேலுக்கு அதனைப் பாதுகாக்கும் உரிமை உள்ளதாம்: ஒபாமா

காஸாவில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் தன்னைப் பாதுகாப்பதற்கான உரிமையைக் கொண்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
“தனது மக்களை நோக்கி ஏவுகணைகள் மழைபோல் வந்து தாக்கும்போது, உலகில் உள்ள எந்த நாடும் அதை சகித்துக் கொள்ளாது. தன்னைப் பாதுகாக்கும் இஸ்ரேலின் உரிமையை நாம் முழு மனதாக ஆதரிக்கிறோம்“ என அவர் தெரிவித்துள்ளார். அவர் தென்கிழக்காசிய நாடுகளுக்கு மேற்கொண்டுள்ள விஜயத்தின்போது தாய்லாந்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வைத்தே இதனைத் தெரிவித்தார்.
இஸ்ரேல் தரைவழியாக காஸாவை ஆக்கிரமிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என செய்திகள் வெளிவந்துள்ளது. எனினும், எகிப்து இதனை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறது.

நன்றி (மீள்பார்வை)

இஸ்ரேலுக்கு அர்தூகானின் பலமான செய்தி

இஸ்ரேலின் பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹுவுக்கு, துருக்கிய பிரதமர் ரஜப் தய்யிப் அர்தூகான் பலமான செய்தி ஒன்றை விடுத்துள்ளார். 2012 இன் நிலமைகள் 2008 இலிருந்து பல வகையில் மாறுபட்டிருக்கிறது என்பதே அந்த செய்தியாகும்.
2008 இல் தேர்தலுக்கு முன்னர், இஸ்ரேல் காஸாவை கடுமையாகத் தாக்கியது. இப்போது மீண்டும் தேர்தல் வந்துள்ளது. இஸ்ரேல் அதையே மீண்டும் செய்கிறது என எகிப்தில் இடம்பெற்ற துருக்கி - எகிப்திய வர்த்தக மன்றத்தில் உரையாற்றும்போது அவர் தெரிவித்துள்ளார்.

சிறுவர்களைக் குரூரமாகக் கொல்வதில் இஸ்ரேல் மிகவும் மோசமாக உள்ளது. அந்நாடு துருக்கிக்கும் இதையே செய்தது. காஸாவுக்கு மனிதாபிமான உதவியைக் கொண்டு சென்ற மாவி மர்மரா கப்பலில் பயணித்த 9 துருக்கிய பிரஜைகளை சர்வதேச கடலில் வைத்து அவர்கள் கொன்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“நான் லாவோஸில் இஸ்ரேலிய ஜனாதிபதிக்கு இதனையே சொன்னேன்: சிறுவர்களை எப்படிக் கொல்வது என்பது இஸ்ரேலுக்கு நன்கு தெரியும். முறையற்ற விதத்தில் இராணுவப் பலத்தைப் பயன்படுத்துவது குறித்தும் அவர்களுக்கு நன்கு தெரியும்.

2008 இல் 1500 பேரைக் கொன்றதோடு, அவர்கள் 5000 பேரைக் காயப்படுத்தினர். 24 மணித்தியாலங்களுக்குள் இஸ்ரேல் இந்த தாக்குதலை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். இஸ்ரேலும் காஸாவும் போர் நிறுத்தத்தை உடனடியாக அமுலுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   
பலஸ்தீன – இஸ்ரேலிய விவகாரத்தைத் தீர்ப்பதில் அரசியலுக்கும் வெளிநாட்டுக் கொள்கைக்கும் மட்டும் சம்பந்தம் இல்லை. பிராந்தியத்தின் பொருளாதாரம் மற்றும் சமூக வாழ்வு என்பவற்றுடனும் இது தொடர்புபட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போர் முழக்கத்திற்கு மத்தியிலும் காஸா மக்கள் திடமாகவே உள்ளனர் – எகிப்திய பிரதமர்

தான் காஸாவுக்கு விஜயம் செய்தபோது, போர் முழக்கத்திற்கு மத்தியிலும் மக்கள் திடமாக உள்ளதைக் கண்டதாக எகிப்திய பிரதமர் ஹிஸாம் கந்தில், துருக்கி- எகிப்திய வர்த்தக மன்றத்தின் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்ட சிறு குழந்தை ஒன்றைக் கண்டபோது, தனது உள்ளம் ஆழமாக வேதனை அடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். பிராந்தியத்தில் அமைதியைப் பேணுவதற்காக துருக்கியும் எகிப்தும் இணைந்து பணியாற்றுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மக்கள் வீடுகளில் கூட்டாக ஒன்றிணைந்து இருப்பதாக சில தகவல்கள் வெளிவந்துள்ளன. மரணத்தை கூட்டாக எதிர்கொள்வது ஒரு அருள் என ஒருவர் தெரிவித்துள்ளார்

 

நன்றி மீள்பார்வை

நபிகளாரின் வரலாறு(ஸீறா) விஷேட சொற்பொழிவு

இறுதி நபி உத்தமத் தூதர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களினடைய வரலாறு பற்றிய விஷேட சொற்பொழிவு இம்மாதம்(நவம்பர்2012) 23,24,25ம் திகதிகளில் சம்மாந்தறை பெரிய பள்ளிவாசலில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் ஸீறா பற்றிய இச் சொற்பொழிவை மௌலவி அலி ஏ.ஏ.அஹமட் றஸாதி அவர்கள் நிகழ்த்தவுள்ளார்கள்.
குறித்த 23,24,25ம் திகதிகளில் மஃரிப் தொழுகையிலிருந்து இரவு 9.00 மணிவரை இந்நிகழ்வு நடைபெறும்

Saturday, November 17, 2012

செம்மழை மர்மம் துலக்கம்

இலங்கையின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக 'சிவப்பு நிற' மழை பெய்து வருகிறது.  இலங்கையின் செவனகல பிரதேசத்தில் சிவப்பு மழை பெய்திருக்கிறது. இதேபோல் இந்திகொலபெலஸ்ல ஆகிய கிராமங்களிலும் சிவப்பு மழை பெய்திருக்கிறது.

கடந்த வாரத்தில் இதேபோல பல பகுதிகளில் 'செம்மழை' பெய்திருக்கிறது. இந்த மழை நீர் பட்டிருக்கும் இடங்களில் சிவப்பு நிற திட்டுகள் காணப்படுகின்றன.

வீட்டின் கூரைகள், மரங்களின் இலைகளில் பொதுமக்களின் உடைகளிலும் இந்த செந்நிறத் திட்டு படிந்திருப்பதால் ‘ரத்தக் கறை' போல் காணப்படுகிறது.

இவ்வாறான நிகழ்வு இலங்கை மக்களுக்கு புதிதாக இருந்தாலும்  இது போன்ற நிகழ்வுகள் ஏற்கனவெ வெளிநாடுகளில் நிகழ்ந்திருக்கின்றன. கடந்த 2005ல் கேரளாவில் இத பொன்ற ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது.
இது பற்றி வெளியாகியுள்ள ஆய்வறிக்கையில் 
ட்ராகோலேமொனாஸ்’ எனப்படும் நுண்ணுயிரே குறித்த மாதிரிகளில் இருந்ததாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் அனில் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
இச் செம்மழையில் நனைந்தால் அது பொதுமக்களுக்கு தீங்கை உண்டாக்காத நுண்ணுயிர் என்று அறியப்பட்டதாக மருத்துவ ஆராய்ச்சி நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேற்று கிரகங்களில் இருந்து வந்தவர்களால் சிவப்பு மழை தோன்றியிருக்கலாம் என்று முன்னர் பரவலாக கருத்துகள் வெளியிடப்பட்டு வந்தன.
எனினும், அவற்றில் எந்தவித உண்மையும் இல்லை என்று ஆதர் சி கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கிரக மண்டல ஆய்வாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவிக்கையில்.
இலங்கைக்கு இவ்வாறான சிவப்பு மழை புதிது எனினும், ஏனைய நாடுகளில் இவ்வாறான சிவப்பு நிற மழை வீழ்ச்சி பல்வேறு சந்தர்ப்பங்களில் பெய்திருப்பதாகவும், கடலில் இருந்து ஆகாயத்துக்கு நீர் உறிஞ்சப்படும் போது, சில சமயங்களில் கடலில் காணப்படுகின்ற அரிதான சிவப்பு நிற மாற்றங்களும் சேர்த்து உறிஞ்சப்படலாம்.
இதன் விளைவாகவே இந்த மழைவீழ்ச்சி ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Friday, November 16, 2012

இஸ்லாமிய புதுவருட வாழ்த்துக்கள்

இன்று இஸ்லாமியப் புது வருடம் ஹிஜ்ரி 1434ஆரம்பமாகியுள்ளது.
இந்த வருடத்தை நல்லமுறைலஷயில் பயன்படுத்துவதோடு எமது கடந்த கால தவறுகளை சிந்தித்து இனிவருங்காலங்களில் அவற்றிலிந்து நீங்கி  எல்லாம் வல்ல இறைவனின் நல்லருள் பெற பிரார்த்திப்போமாக.

Wednesday, November 14, 2012

சம்மாந்துறை வரலாற்று ஆவணப்படுத்தல்களில் இன்னுமொரு சுவடு


மட்டக்களப்பு முஸ்லிம்களின் தனித்துவ அம்சங்களில் அவர்களில் காணப்படும் குடி வழிமுறை முக்கியமான  மரபாக பேணப்பட்டு வருகின்றது. இதன் வரலாறு மற்றும் சம்மாந்துறைப் பிரதேச முஸ்லிம்களின் மத்தியில் தற்போது வழக்கிலுள்ள  குடி வழிமுறை சம்மந்தமாக சம்மாந்தறை குடி மரைக்கார் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கலாபூஷணம் எஸ்.அப்துல் றாஸிக் அவர்களால் தொகுக்கப்பட்ட முஸ்லிம்களின் மத்தியில் குடி வழிமுறை எனும் நூல் வெளியீடு எதிர்வரும் 2012-11-17ம் திகதி சனிக்கிழமை மு.ப. 9.00 மணியளவில் சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் காரியப்பர் மண்டபத்தில் ஏற்பாட செய்யப்பட்டுள்ளது.
குடி மரைக்காயர் சம்மேளனத் தலைவர் எஸ்.எல்.ஆதம்பாவா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பல பிரமுகர்களும் கலந்த சிறப்பிக்கவள்ளனர். பொது மக்கள் அனைவரும் இலவசமாக கலந்து கொள்ள முடியும் என்பதும்

பிரத்தியேகமாக நூல் விற்பனைப்பிரிவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது

சம்மாந்துறை சம்மந்தமான வெளியிடப்படும் தனி வரலாற்று நூல்கள் வரிசையில் இந்த வருடத்தின் மூன்றாவது நூலும். குடி வரலாறுகள் சம்பந்தமான முதலாவது தொகுப்பு நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tuesday, November 13, 2012

செல்வி, MR. ஹன்ஸா, மாகாண மட்ட விஞ்ஞான வினாடி வினாப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

செல்வி, MR. ஹன்ஸா, மாகாண மட்ட விஞ்ஞான வினாடி வினாப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கிடையிலான விஞ்ஞான வினாடி வினாப் போட்டியில் சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த தரம் – 9 ல் கல்வி கற்கும் மாணவி செல்வி MR. ஹன்ஸா மாகாண மட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொண்டார்.

இந்த வெற்றிக்காக இப்பாடசாலையில் விஞ்ஞான ஆசிரியையாக கடமையாற்றும் ஆசிரியை Mrs. KA. நஸீர் அவர்களும் இப் பாடசாலையின் அதிபர் TM. தௌபீக் அவர்களும் இம் மாணவியை வழிப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன், இம் மாணவி இதற்கு முன்னரும் பல பரிசில்களை மாகாண, மாவட்ட, வலய மட்டத்தில் பெற்று பாடசாலைக்கு பெருமை தேடித்தந்துள்ளார்.
மேலும், இம்மாணவி இப்பாடசாலையின் மாணவத்தலைவி என்பதையும் இங்கு சுட்டிக்காட்டுதல் வேண்டும்.
இவரை எமது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், பெற்றார், பாடசாலை சமூகமும் இவரை வாழ்த்துக்கின்றனர்.



Sunday, November 11, 2012

கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் - சான்றிதழ்ப் படிப்பு

---------- Forwarded message ----------
From: "Ila. Sundaram" <ilasundaram@gmail.com>
Date: Fri, 9 Nov 2012 10:53:20 +0530
Subject: கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் - சான்றிதழ்ப் படிப்பு
To:

அன்புடையீர், வணக்கம்.

*கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் - சான்றிதழ்ப் படிப்பு
Certificate Course in Fundamental & Usage of Tamil Computing*
*02.12.12 - 28.12.12*

எனும் ஒருமாதகாலச் சான்றிதழ்ப் பயிற்சி வகுப்பு *டிசம்பர், மே *மாதங்களில் *SRM
பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயக் கணினித்தமிழ்க் கல்வித்துறை*யில் நடைபெறவுள்ளது.

கணினியில் தமிழைப் பயன்படுத்துவதற்கும் ஆய்வு செய்வதற்கும் தமிழ் மென்பொருள்
உருவாக்குவதற்கான அடிப்படை ஆய்வுப் பணிகளை அறிந்துகொள்வதற்கும் இணையத்தமிழ்ப்
பயன்பாட்டினைப் புரிந்துகொள்வதற்கும் இந்தச் சான்றிதழ்ப் பயிற்சி வகுப்பு
நடத்தப்படுகிறது.

பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், தமிழ்
ஆர்வலர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் பருவ விடுமுறை மாதங்களான மே,
அல்லது டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது.


வகுப்புகள்* திங்கள் முதல் வெள்ளி* வரை *20* நாட்கள் காலை *10* மணிமுதல் மாலை *
5* மணிவரை நடைபெறும்.

தகுதி: *10-ம் வகுப்பில் தேர்ச்சி*. வயது வரம்பு இல்லை.

மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை* www.srmuniv.ac.in/tamil_perayam.php *எனும்
இணையதளத்திலும் தமிழ்ப்பேராய அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்தை
நகல் எடுத்தும் பயன்படுத்தலாம்.

பயிற்சிக் கட்டணம் ரூபாய் *1000/-* (ஆயிரம்)-த்திற்கான வரைவோலையை(DD) 'SRM
TAMIL PERAYAM' என்னும் பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக எடுத்து
விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும்.

நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் வந்துசேரவேண்டிய கடைசி நாள் *26.11.2012*,
திங்கட்கிழமை.
மேலும் விவரங்களுக்கு இணைப்பைப் பாருங்கள்.

நண்பர்களுக்கு இதனைத் தெரியப்படுத்தவும்.

இணைப்பில்.
1. செய்திக்குறிப்பு
2. விண்ணப்பம்

நன்றி...


--
இல. சுந்தரம்
*ILA. SUNDARAM*
M.A., M.Sc.(I.T)., MCA., MBA., M.Phil., PGDCA., (Ph.D)
Assistant Professor of Tamil
Coordinator, Computational Tamil Studies
Tamil Perayam, SRM University
Kattankulathur - 603 203.
Kanchipuram Dt., T.N. S-India.

Cell: +91-*98423 74750*

--
*firos123g@gmail.com
info@sammanthurai.tk*
*
www.sammanthurai.tk
www.sammanthurainews.com
www.saynotodowry.tk
www.newthilgates.tk
*

Saturday, November 10, 2012

இன்று 10-11-12

ஒவ்வொரு நுாற்றாண்டிலும் 12 முறை மட்டுமே வரக்கூடிய தொடர் திகதி எனும் அரிய தகதி இன்றாகும்
2012-நவம்பர் -10 சனிக்கிழமை
இன்றைய இந்தத் திகதி 100 வருடத்திற்கு ஒருமுறையே இவ்வொழுங்கில் 10,11,12 ஆகியன பெறுமான வரிசைக்கிரமமாக வருவது அரிய தொடரொன்றாகும். இத்தொடர் இந்நூற்றாண்டின் 11வதும் கடைசிக்கு மதலாவதான தொடருமாகும்

மேலும் எதிர்வரும் 2013ம் வருடம் டிசம்பர் மாதம் 11ம் திதியே இந்த நூற்றாண்டின் கடைசித் திகதியாகும்.

Thursday, November 8, 2012

கல்முனை கல்வி மாவட்டத்தில் மிகச் சிறந்த CFS பாடசாலையாக சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித், தெரிவு

அ.ம. தாஹா நழீம் (Publisher – Google Inc)

 கல்முனை கல்வி மாவட்டத்தில் மிகச் சிறந்த CFS பாடசாலையாக சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித், தெரிவு.

 

 

இன்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண பாடசாலைகளில் பிள்ளை நேயம் தொடர்பான கருப்பொருள் எவ்வாறு பின்பற்றப்படுகின்றது என்பதை செயற்பாட்டாளராக செயற்படும் UNICEF மற்றும் Australian Aid போன்ற நிறுவனங்கள் நாளுக்கு நாள் பரிசிலனை செய்து வருகின்றன. இதற்காக பல கோடி ரூபாய்க்களை செலவு செய்து வருகின்றது என்றால் அதனை யாரும் மறுப்பதிற்கில்லை.

மேலும் இப்பாடசாலைகளின் செயற்பாடுகளை விருத்தி செய்வதற்கு இப்பாடசாலைகளிலுக்கிடையில் காணப்படுகின்ற விடயங்களை ஏனைய பாடசாலைகள் பின்பற்றி தங்களுடைய பாடசாலையில் அதனை பிரயோகிப்பதன் ஊடாக பிள்ளை நேயக் கோட்பாடுகளான ஆறு கோட்பாடுகளை விருத்தி செய்யும் நோக்கும் கல்முனை கல்வி மாவட்ட மாவட்டத்தில் 15 சிறந்த பிள்ளை நேயப்பாடசாலைகளை தெரிவு செய்து   அதில்  மிகச் சிறந்த பாடசாலை தெரிவு செய்வதற்கான போட்டி (Sharing CFS Best Practice (District Level)  2012.11.06 ஆந் திகதியன்று கமு/ கமு/ வெஸ்லி உயர் கல்விப் பாடசாலையில் நடாத்தப்பட்டது. இது ஒரு கல்வி மாவட்ட மட்டப் போட்டியாகும்.

இந்தப் போட்டியானது கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் கோரப்பட்ட சுற்று நிருபத்திற்கமைவாக, நேர்மைாயன முறையில் ஒரு திறந்த போட்டியாக நடைபெற்றது. அத்துடன் இதில் வலயக்கல்வி அதிகாரிகள் நடுவர்களாக செயற்பட்டார்கள் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். அத்துடன் பங்கு பற்றும் பாடசாலைகளிலிருந்து  ஐந்து ஆசிரியர்கள் வீதம் அவர்கள் முன்னிலையில் இப் போட்டி நடாத்தப்பட்டது என்பதும் இங்கு கோடிட்டு காட்ட வேண்டும்.

Photo here

 

கல்முனை உதவிக்கல்விப் பணிப்பாளர், M. நஜிம் அவர்களிடம் பெற்றிக்கான கேடயத்தினை இப்பாடசாலையின் அதிபர் ரீ.எம். தௌபீக்,  ஆசிரியர் ஏ.எம். தாஹா நழீம் அவர்களும் இணைந்து பெற்றுக்கொள்ளும் காட்சி இது.




--
firos123g@gmail.com
info@sammanthurai.tk


www.sammanthurai.tk
www.sammanthurainews.com
www.saynotodowry.tk
www.newthilgates.tk

Tuesday, November 6, 2012

தேசிய வாசிப்பு மாத கண்காட்சியும் விற்பனையும்









சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் பிரதேச சபை நூலகங்கள் ஏற்பாட்டில் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு இன்று(2012-11-03) காலை 9.30 மணியளவில்  ஆரம்பமானது.சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் அல்ஹாஜ் ஏ.எம்.எம்.நௌசாத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கை ஆசியா பவுண்டேசன் இயக்குனர் திரு.ரீ.நல்லதம்பி அவர்களும் சிறீ லங்கா டெலிகொம்மின் பிராந்திய பிரதி இயக்குனர் திரு.எம்.பத்மசூதன் அவர்களும் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டனர் மற்றும் கிழக்கு மாகணசபையின் சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் அவர்களும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் அவர்களும் கலந்து கொண்டனர்.

சிறுவர்களை மையப்படுத்தியும் ஒக்டோபர் வாசிப்பு மேம்பாட்டு நிகழ்ச்சிகளையும் மையமாகக் கொண்டு ஒழுங்கு படுத்தப்பட்டிருந்த இந்நிகழ்வில் சிறுவர்களிற்கான புத்தகக் காட்சிக்கூடமும் சம்மாந்துறை எழுத்தாளர்கள் படைப்பாளிகளின் ஆக்கங்களும் மற்றும் ஊர்ப்பிரமுகர்கள் வன்னுமை சிற்றாட்சியாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பிரதெச சபைத்தவிசாளர்கள் அனைவரினதும் அரிய பகைப்படங்கள், சம்மாந்தறையின் பழைய தேச வரைபடங்கள், தகவல்கள் என்வையும் பழைய சிலோன் நாணயங்களும், வெளிநாட்டு நாணயங்களும், சம்மாந்துறையின வெளியீடுகளுடன் கூடிய காட்சிக் கூடமும் 
Computer Society of Sammanthurai ஏற்பாட செய்யப்பட்டிருந்த வை-பை விளக்க செயலமர்வுகளும், மற்றும் கணணி வன்பொருட்களுடனான காட்சிக்கூடமும் 

சிறுவர்களுக்கான கார்ட்டூன் அனிமேசன் திரைப்படக் கூடமும், TK மீடியாவின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்ட முற்றிலம் இயற்கையாலான கலையகமும்  பண்பலை ஒலிபரப்பு கூடமும் காணப்பட்டன.

இக்கண்காட்சி சிறவர்களைப் பெரிதம் கவர்ந்ததோடு. பெரியவர்கள் இளைஞர்களின் வருகையும் அதிகரித்துக்காணப்பட்டது.

அங்கு சம்மாந்துறையின் இளம் விஞ்ஞானி மர்சூக்கின் கண்டுபிடிப்பு மாதிரியும் இடம்பெற்றிருந்தமை கறிப்பிடத்தக்கது.

மேலும் TK.மீடியாவினர் தயாரித்திருந்த பெரியபள்ளிவாசல் ஒரு வரலாற்றுப்பார்வை எனும் ஆவணப்படமும் இங்கு காட்சிப்படத்தப்பட்டது.

இக்கண்காட்சி தொடர்ச்சியாக 4 நாட்களக்க ஏற்பாட செய்யப்பட்டள்ளது.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.