
சம்மாந்துறை மல்கம்பிட்டி கிராம சேவகப் பிரிவிற்குட்பட்ட பள்ளாற்றுப்
பகுதியில் இனம் தெரியாத பெண் சடலம் ஆற்றில் மிதந்து வந்ததை பொதுமக்கள்
2010.09.29 அவதானித்து சம்மாந்துறைப் பொலிஸாரிடம் தகவல் தெரிவித்தனர்.

ஸ்தலத்துக்கு
சம்மாந்துறை நிலையப் பொறுப்பதிகாரி ஜெயந்த தஹனாக்க மற்றும் கல்முனை உதவி
பொலிஸ் அத்தியகட்சகர் மெண்டிஸ்,கல்முனை மாவட்ட நீதிமன்ற நீதவான் ஆகியோர்
பிரசன்னமாகி சடலத்தை ஆற்றிலிருந்து அப்புறப்படுத்தினர்.சடலம் இனம்
காணப்படாமல் வைத்தியப் பரிசோதனைக்காக கல்முனை அஷ்ரஃப் ஆதார வைத்தியசாலைக்கு
கொண்டு செல்லப்பட்டுள்ளது.விசாரணைகள் கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியகட்சகர்
திரு.மெண்டிஸிணால் முடுக்கி விடப்பட்டுள்ளது.