Tuesday, November 20, 2012
ஜனாதிபதியின் பிறந்ததினத்தை முன்னிட்டுசம்மாந்துறையில் மர நடுகை
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 67வது பிறந்த தினத்தை முன்னிட்டும் ஜனாதிபதியின் பதவியேற்பின் இரண்டாவது பதவிக் காலத்தின் 2வது வருடப் நிறைவையிட்டும் சம்மாந்துறைப் பிரதேச சபையின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும் சம்மாந்துறை தொகுதியின் சுதந்திரக் கட்சியின் அமைப்பாளருமான அல் ஹாஜ் ஏ.எம்.எம்.நௌஷாட் தலைமைமையில் மரம் நடுகை நிகழ்வும், பிராத்தனையும் இன்று சனிக்கிழமை (2012-11-20) காலை சம்மாந்துறை சென்னல் கிராம நிலையத்தில் நடைபெற்றது .
இந்நிகழ்வில், பிரதேச சபை உதவித் தவிசாளர் எம்.ஏ.கலீலுர் றஹ்மான், பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.ஜீ.எம்.சிப்லி, எம்.ஐ.றனூஸ், எம்.பி.முகைதீன், தியாகரன் ஆகியோரும் மற்றும் பிரதேச சபையின் செயலாளர் எம்.எம்.சலீம் உட்பட பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, ஜனாதிபதியின் தேக ஆரோக்கியத்துக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் சம்மாந்துறை மத்தயஸ்த சபையின் தவிசாளரும் உலமா சபையின் செயலாளருமான மௌலவி எம்.ஐ.அச்சு முகம்மது அவர்களின் துஆப் பிராத்தனையும் இடம்பெற்றது.
Subscribe to:
Posts (Atom)
Pages
Pages
Visitors
474566
feature content slider
Content right
.
.
.