கிழக்கு மாகாணப் பாடசாலைகளின் e-Village ஊழியர்களுக்கான உத்தியோகபூர்வ பயிற்ச்சிப் பட்டறையானது சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலத்தில் 21.10.2010 ம் திகதி இடம்பெற்றது.இதில் மாகாண செயற்திட்ட முகாமையாளர் E.K.S.P.கலாநிதி,e-Village நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நந்தசிறீ மற்றும் மாண்புமிகு மாகாண கல்வி,கலச்சார அலுவல்கள்,நிலங்கள் அபிவிருத்தி அமைச்சர் மற்றும் மாகணக் கல்விப் பணிப்பாளர் M.T.A.ஹிசாம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
Thursday, October 21, 2010
தகவல் தொழிநுட்ப விழிப்புணர்வூட்டும் பயிற்ச்சிப் பட்டறை
கிழக்கு மாகாணப் பாடசாலைகளின் e-Village ஊழியர்களுக்கான உத்தியோகபூர்வ பயிற்ச்சிப் பட்டறையானது சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலத்தில் 21.10.2010 ம் திகதி இடம்பெற்றது.இதில் மாகாண செயற்திட்ட முகாமையாளர் E.K.S.P.கலாநிதி,e-Village நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நந்தசிறீ மற்றும் மாண்புமிகு மாகாண கல்வி,கலச்சார அலுவல்கள்,நிலங்கள் அபிவிருத்தி அமைச்சர் மற்றும் மாகணக் கல்விப் பணிப்பாளர் M.T.A.ஹிசாம் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை சுகாதாரக் கழகங்களுக்கு இடையிலான போட்டிப் பரிசளிப்பு விழா
சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான சுகாதாரக் கழகங்களை மேம்படுத்தும் செயற்திட்டங்களுக்கு அமைவாக பாடசாலைகள் தோறும் அமைக்கப்பட்டுள்ள சுகாதாரக் கழகங்களுக்கிடையிலான போட்டி நிகழ்வில் வெற்றி ஈட்டிய பாடசாலைக் கழகங்களுக்கு வெற்றிக் கேடயங்களும் வழங்கப்பட்டன.
2010.10.20ம் திகதி ச்ம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் இடம்பெற்ற விருது வழங்கல் நிகழ்வில் ச்ம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகா வித்தியலாயம்,வீரத்திடல் அல்-ஹிதாயா மகா வித்தியாலயம்,வீரச்சோலை அ.த.க பாடசாலை,மல்வத்தை புது நகர் அ.த.க. பாடசாலை,சம்மாந்துறை அல் மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி போன்ற பாடசாலை சுகாதாரக் கழக உறுப்பினர்கள் வெற்றியாளர்களாகத் தெரிவாகினர்.
இவர்களுக்கான விருது,சான்றிதழ்கள் வலயக் கல்விப் பணிப்பாளர் M.K.M.மன்சூர்,பிரதிக் கல்விப் பணிப்பாளர் V.T.சகாதேவன்,பிரதிக் கல்விப் பணிப்பாளர் A.அஸீஸ் முகைதீன்,சுகாதாரக் கழக செயற்பாட்டாளர்கள்,உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களும் இவ் விழாவில் கலந்து சிறப்பித்தனர்.
Subscribe to:
Posts (Atom)
Pages
Pages
Visitors
feature content slider
Content right
.
.
.