எமது ஊருக்காய் பல அபிவிருத்தித் திட்டங்களையும் எமது ஊரின் வளர்ச்சிக்காக உழைத்தவர்களின் பட்டியலில் இவரும் ஒரு சிறந்த பங்காளரே
இன்று இவரது வரலாறு தொடக்கம் அவரது சேவை வரை ஓர் சிறு ஆய்வுக் கட்டுரையானது அவருடைய சிறார்த்த தினத்தில் நினைவு கூர்வது எமது ஊர் மக்களின் தலையாய கடமையாக காணப்படுகிறது.அந்த வகையில் அவரது அறிமுகமானது வழங்கப்படுகிறது.அன்வர் இஸ்மாயில் கண்ணாடி மரைக்காரின் மகள் சுபைதாவுக்கும் இஸ்மாயில் மாஸ்டருக்கும் 16.07.1967 இல் பிறந்தவர்.தாறுல் உலூம் ,மகளிர் வித்தியாலயம்,சம்மாந்துறை தேசிய பாடசாலை ஆகியவற்றில் பயின்றவர்.ஆரம்பக் கல்வியில் துடுக்குத்தனமிக்கவர்.உயர் கல்விக்குப் பின்பு சங்கங்கள் உருவாக்குவது,பொதுச் சிந்தனைகளில் ஈடுபாடு காட்டுதல் போன்ற விடயங்களில் ஈடுபாடு காட்டினார்.மேலும் இவர் கொழும்பு சட்ட பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
மேலும் இவரது அரசியல் பிரவேசமானது 2001 இல் இலங்கையின் 12 ஆவது பாராளுமன்ற உறுப்பினராக அதிரடியான அரசியல் வாழ்வின் வெற்றிக்கு வித்திட்டது.இவ்வாறு பல் தடைகல்லை வெற்றிப் படியாக மாற்றிய மாபெரும் தலைவராகத் திகழ்ந்தார் என்பதில் எதுவித ஐயப்பாடும் இல்லை என்றே கூற வேண்டும்.இவருடைய அபிவிருத்தி நடவடிக்கைகள் கூட எமது ஊர் மக்களால் நினைவு கூறப்பட வேண்டியதே. இம் மறைந்த தலைவருடைய ஓர் ஆய்வுக் கட்டுரையானது வெகு விரைவில் காத்திருங்கள்.
Monday, September 13, 2010
பெருநாள் கழியாட்ட நிகழ்வுகள்
சம்மாந்துறை அல் மர்ஜான் மகளிர் கல்லூரியில் நோன்புப் பெருநாளை முன்னிட்டு பல்வேறு கல்யாட்ட வேடிக்கை வினோத நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.இதில் மிக்கூச் சொரியும் பாதாளக் கிணற்றுக்குள் அதிவேக மோட்டார் சைக்கிள் ஓட்டம்,பைசிக்கள் ஓட்டம்,வித்தியாசமான முச்சக்கர வண்டி ஓட்டம் என்பன இடம்பெற்றன.இந் நிகழ்ச்சிகளை அரங்கேற்றிய வீரர்கள் வெல்லஸ ஐச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர்களின் திறமையானது முழு இலங்கையர்களும் அறிந்ததே.மற்றும் ஓர் எமது கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திருக்கோவிலைச் சேர்ந்த சாணக்கிய வீரன் சாண்றோ ரவியின் அற்புதத் திறமைகளும் வெளிக்காட்டப்பட்டன.இது தொடர்பான புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
Subscribe to:
Posts (Atom)
Pages
Pages
Visitors
474566
feature content slider
Content right
.
.
.