Thursday, October 25, 2012

பிள்ளை நேயம் உள்ளதா?

சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் பிள்ளை நேயம் உள்ளதா?




இலங்கை கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளை சிலவற்றை பிள்ளை நேயப் பாடசாலைகளாக பிரகடனப்படுத்தி பிள்ளை நேயத்தை இப்பாடசாலைகளில் மேற்கொள்ளும் திட்டத்திற்குகமைவாக,
இந் திட்டத்திற்கு நிதியுதவி வழங்கும் நிறுவனங்களாக யுனிசெப் மற்றும் அவுஸ்ரெலின் எயிட் என்ற இரு நிறுவனங்களும் இதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை வழங்கி வருகின்றது என்பதை இங்கு குறிப்பிடுதல் பொருத்தமாகும்.

பிள்ளை நேயப்பாடசாலையின் அடிப்படையிலான ஆறு பரிமாணங்களாக.
  1. 01. பிள்ளைகளின் உரிமைகள்
  2. 02. பால் நிலை சமத்துவம்
  3. 03. கற்றல் பேறுகளின் விருத்தி
  4. 04. பிள்ளையின் ஆரோக்கியமும், பாதுகாப்பும்
  5. 05. மாணவர்களின் குடும்பப் பிண்ணனி
  6. 06. சிறுவர் நேயக் கொள்கைகள்

என்பவையே இவைகளாகும். மேற்கூறிய செயற்பாடுகளின் செறிவு பற்றி நேரடியான ஆய்வினை செய்வதற்காக யுனிசெப் நிறுவன பிரதிநிதிகள் இப்பாடசாலையில் ஆய்வினை  2012.10.25 மேற்கொண்டனர்.

அத்துடன் இப்பாடசாலையை   மென்மேலும் விருத்தி செய்தி எதிர்காலத்தில் சிறப்பான செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கும் இந்த ஆய்வுகள் ஒரு துடுப்பாக அமைக்கூடுமென இப்பிரநிதிகளும் இப்பாடசாலை சமூகமும் ஆருடம் தெரிவித்துள்ளன. 

thaha naleem

களை கட்டியுள்ள சம்மாந்துறை பெருநாள் விற்பனை


சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டள்ள பெருநாள் விற்பனை கூடங்கள் களைகட்டியுள்ளன.

எதிர்வரும் ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டப வளாகத்தில்  பெருநாள் வர்ததக நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் பெருமளவான மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்து வருகின்றனர். 
வீதிப் போக்குவரத்துகளிற்கு இடையூறில்லா வண்ணம் பாதையோர வர்த்தகர்களிற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். 

மேலும் சம்மாந்துறையிலுள்ள ஆடை விற்பனை நிலையங்கள்  பாதணி  வர்த்தக நிலையங்கள், பலசரக்குக்கடைகள் என்பவற்றிலும் மக்கள் பெருமளவில் பெருநாட் பொருட்கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர்.





திவிநெகும வேலைத்திட்டம் - பயிர்விதைகள் வினியோகம்

திவிநெகும வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சமூர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு பயிர்விதைகள் வழங்கிவைக்கும் நிகழ்வவொன்று இன்று (2012-10-25) சம்மாந்துறையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில்  சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌசாத் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்ததோடு  திவிநெகும திட்டத்தைப்பற்றி மக்களுக்கு விளக்கமளித்தார். மற்றும் பயிர்விதைகளின் வினியோகத்தினையும் தொடக்கி வைத்தார். பிரதேச வாழ் மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் மரநடுகையும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.








Pages

Pages

Visitors

474565

feature content slider

Content right

.

.

.