சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டள்ள பெருநாள் விற்பனை கூடங்கள் களைகட்டியுள்ளன.
எதிர்வரும் ஹஜ்ஜுப்பெருநாளை முன்னிட்டு சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டப வளாகத்தில் பெருநாள் வர்ததக நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் பெருமளவான மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்து வருகின்றனர்.
வீதிப் போக்குவரத்துகளிற்கு இடையூறில்லா வண்ணம் பாதையோர வர்த்தகர்களிற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் சம்மாந்துறையிலுள்ள ஆடை விற்பனை நிலையங்கள் பாதணி வர்த்தக நிலையங்கள், பலசரக்குக்கடைகள் என்பவற்றிலும் மக்கள் பெருமளவில் பெருநாட் பொருட்கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர்.
No comments:
Post a Comment