திவிநெகும வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சமூர்த்தி உதவி பெறும் குடும்பங்களுக்கு பயிர்விதைகள் வழங்கிவைக்கும் நிகழ்வவொன்று இன்று (2012-10-25) சம்மாந்துறையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.எம்.நௌசாத் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்ததோடு திவிநெகும திட்டத்தைப்பற்றி மக்களுக்கு விளக்கமளித்தார். மற்றும் பயிர்விதைகளின் வினியோகத்தினையும் தொடக்கி வைத்தார். பிரதேச வாழ் மக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் மரநடுகையும் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment