Sunday, October 3, 2010

கடந்த 28.09.2010 ஆகிய அன்று சம்மாந்துறை மல்கம்பிட்டி கிராம சேவகப் பிரிவில் கண்டெடுக்கப்பட்ட சடலமானது இனங்காணப்பட்டுள்ளது.


2010.10.03  ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில் குறித்த நபர் தொடர்பாக சந்தேகம் எழுந்தது.26 வயது மதிக்கத்தக்க சம்மாந்துறையைச் சேர்ந்த பரவலாகப் பேசப்படும் நெளசாட் என்பவர் கடந்த 2010.10.02ம் திகதி சம்மாந்துறை பொலிஸில் ஒரு முறைப்பாடு செய்திருந்தார் அதாவது தனது மதினி முறையானவரும் பிள்ளையையும் காணவில்லை குறிப்பாக அவரது கணவருடன் ஓடிவிட்டார் எனவும் முறைப்பாடு செய்திருந்தார்.பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவல்களை அடுத்து குறித்த முறைப்பாடு செய்த நபரையும்,அவரது செயற்பாடுகளையும் இரககியப் பொலிஸார் புலனாய்வு செய்யத் தொடங்கினர் இதனடிப்படையில் காணாமல் போனது எனக் கூறப்படும் சம்மாந்துறை கீச்சார் லேன் இல் வசித்த சுபைர் ரப்னா வயது 25 என்பவரும்,11/2 வயது பெண் குழந்தை ஐனாஸ் என்பவருமே காணாமல் போனவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.முறைப்பாடு செய்த நெளசாட்டிற்கும் காணாமல் போன ரப்னாவிற்கும் 28.09.2010ம் திகதி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட இனம் தெரியாத சடலத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுவதை அறிந்த இரகசிய பொலிஸார் உடனே நேற்று இரவு 7 மணிக்கு சந்தேகத்தின் பேரில் குறித்த நபரை கைது செய்தனர்.பொலிஸாரின் தொடர் விசாரணையைத் தொடர்ந்து இன்னும் பல மர்மங்கள் துலங்கின.அதாவது இவருக்கு உதவியாக கூலி ஆளாக இன்னுமொரு நபர் இயங்கினார் என்றும் தாயும்,மகளும் 27.09.2010ம் திகதி இரவு கொலை செய்யப்பட்டு ஆற்றில் இரகசியமான முறையில் புதைக்கப்பட்டார் எனவும் இருவரும் கட்சிதமாக காரியங்களை செய்தனர் எனவும்  விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர் அடையாளப்படுத்தப்பட்ட பெண்ணின் அக்காவின் கணவரும் ஆகும்.இக்கொலைக்கான காரணங்கள்,மேலதிக விசாரணைகள் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் சம்மாந்துறைப் பொலிஸாருடன் இணைந்து மேற்கொள்கின்றனர்.மர்மங்கள் புழங்கும் போது வெளிவரும்.

சம்மாந்துறையில் சிறுவர் தினப் பெருவிழா


சர்வதேச சிறுவர் தினத்தைக் கொண்டாடும் முகமாக சம்மாந்துறைக் கல்வி வலயமும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் இணைந்து சம்மாந்துறையில் பெருவிழா கொண்டாடியது.சம்மாந்துறை மகளிர் கல்லூரியில் காலை 07.30 இற்கு ஆரம்பித்த ஊர்வலம் விளினையடி ஊடாக ஹிஜ்றா சந்தியை காலை 09.30 இற்கு வந்தடைந்தது. ஹிஜ்றா சந்தை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் அத்தனை மாணவர்களுக்கும் தாகசாந்தி ,குடிபானம் என்பன வழங்கி சிறுவர்களுடைய முயற்சிக்கு சங்கத்தில் உள்ள அத்தனை வர்த்தகர்களும் வீதியோரம் நின்று சிறுவர்களை உபசரித்ததை காணக் கூடியதாக இருந்தது.ஊர்வலம் அங்கிருந்து தொடர்ந்து சம்மாந்துறை கோட்டக் கல்வி அலுவலகத்தை 10.50 இற்கு அவ்விடத்தில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் M.T.A. நிசாம்,கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் M.T.A.தெளபீக்,சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் M.K.M.மன்சூர்,பிறை f.m வனொலி பணிப்பாளர்,கட்டுப்பாளர்,சந்தைப்படுத்தல் பிரிவு பொறுப்பதிகாரி ,பிரதிக்கல்விப் பணிப்பாளர்,உதவிக் கல்விப் பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள்,சகல பாடசாலை அதிபர்கள் உட்பட ஆசிரியர்களும் அவ்விடத்தில் குழுமியிருந்தனர்.பிரதம அதிதிககள்,கெளரவ அதிதிகள்,அதிபர் குலாத்தினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு பேன்ட் வாத்தியக் குழு,பொலிஸ் கடேட் பிரிவு,சாரணியப் படைக்குழு,பொல்லடிக் குழு இன்னும் பல கலாச்சார விழுமியங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்களினால் வரவேற்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தேசிய பாடசாலை கொடிக்கம்பத்திற்கு அருகில்காலை 10.30 மணியளவில் ஊர்வலம் சென்றடைந்தது

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.