சர்வதேச சிறுவர் தினத்தைக் கொண்டாடும் முகமாக சம்மாந்துறைக் கல்வி வலயமும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் இணைந்து சம்மாந்துறையில் பெருவிழா கொண்டாடியது.சம்மாந்துறை மகளிர் கல்லூரியில் காலை 07.30 இற்கு ஆரம்பித்த ஊர்வலம் விளினையடி ஊடாக ஹிஜ்றா சந்தியை காலை 09.30 இற்கு வந்தடைந்தது. ஹிஜ்றா சந்தை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் அத்தனை மாணவர்களுக்கும் தாகசாந்தி ,குடிபானம் என்பன வழங்கி சிறுவர்களுடைய முயற்சிக்கு சங்கத்தில் உள்ள அத்தனை வர்த்தகர்களும் வீதியோரம் நின்று சிறுவர்களை உபசரித்ததை காணக் கூடியதாக இருந்தது.ஊர்வலம் அங்கிருந்து தொடர்ந்து சம்மாந்துறை கோட்டக் கல்வி அலுவலகத்தை 10.50 இற்கு அவ்விடத்தில் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் M.T.A. நிசாம்,கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் M.T.A.தெளபீக்,சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் M.K.M.மன்சூர்,பிறை f.m வனொலி பணிப்பாளர்,கட்டுப்பாளர்,சந்தைப்படுத்தல் பிரிவு பொறுப்பதிகாரி ,பிரதிக்கல்விப் பணிப்பாளர்,உதவிக் கல்விப் பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள்,சகல பாடசாலை அதிபர்கள் உட்பட ஆசிரியர்களும் அவ்விடத்தில் குழுமியிருந்தனர்.பிரதம அதிதிககள்,கெளரவ அதிதிகள்,அதிபர் குலாத்தினால் மலர் மாலை அணிவிக்கப்பட்டு பேன்ட் வாத்தியக் குழு,பொலிஸ் கடேட் பிரிவு,சாரணியப் படைக்குழு,பொல்லடிக் குழு இன்னும் பல கலாச்சார விழுமியங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுக்களினால் வரவேற்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.
தேசிய பாடசாலை கொடிக்கம்பத்திற்கு அருகில்காலை 10.30 மணியளவில் ஊர்வலம் சென்றடைந்தது
No comments:
Post a Comment