சம்மாந்துறைப் பிரதேச சபையின் கீழ் பணியாற்றம் ஊழியர்களின் ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று சம்மாந்துறை ஜனாதிபதி விளையாட்டரங்கில் சம்மாந்தறை பிரதேச சபைத்தவிசாளர் ஏ.எம்.எம்.நௌசாத் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி உதவி ஆணையாளர், பிரதேச சபை ஊழியர்கள் கலந்து கொண்ட இந் நிகழ்வில் பணியாளர்களின் பிள்ளைகளிடையேயான போட்டி நிகழ்சச்சிகளும் , ஊழியர்களிடையேயான போட்டி நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களும் போட்டிகளில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்றவர்களுக்க பரிசில்களும் வழங்கப்பட்டன.