சம்மாந்துறை மண் ஈன்றெடுத்த இன்னுமொரு சட்டத்தரணி எம். பீ. முஹம்மது பௌசான் இன்று (14. 12. 2001) நண்பகல் 12.15 மணியளவில் இலங்கை உச்ச நீதிமன்றத்தில் (Supreme Court of Sri Lanka) நீதியரசர் காமினி அமரதுங்க தலைமையிலான மூவர் கொண்ட நீதியரசர்கள் குழாத்தின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து இம்மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவர் தனது ஆரம்ப கல்வி, இடைநிலை கல்வி, உயர்தர கல்வி ஆகியவற்றை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயத்திலே கற்று 2004 ல் யாழ். பல்கலைகழகத்தின் சட்ட பீடத்திற்கு தெரிவானார். பின்னர் கொழும்பு பல்கலைகழகத்தின் சட்ட பீடத்திற்கு மாற்றம் பெற்று 2010 ல் சட்டமாணி (LL.B) பட்டத்தினை பெற்றுக்கொண்டார். மேலும் அதே வருடம் சட்ட கல்லூரியின் இறுதி பரீட்சையில் சித்தி பெற்றார்.
இவர் 2004 ல் நடைபெற்ற வடக்கு கிழக்கில் ஆயிரம் ஆசிரியர்கள் நியமனதிட்கான போட்டி பரீட்சையில் சித்தியெய்து சம்மாந்துறை சென்னல் சாஹிரா வித்தியாலயத்தில் நிரந்தர ஆசிரியராக மூன்று மாதங்கள் பணிபுரிந்த வேளையில் சட்ட பீடத்திற்கு தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.