Friday, December 30, 2011

பரீட்சை பெறுபேறுகளும் உளவியல் தாக்கங்களும்

எஸ்.எல்.மன்சூர் (கல்விமானி) 

அறிஞர் ஜான் புக்கர் 'இன்றைய உலகத்தில் பல வியாதிகளைக் குணப்படுத்துவதற்கு கல்வி ஒன்றே சிறந்தது' என்று கூறுகின்றார். ஆனால் அந்தக் கல்வியினால் பலர் நோயாளியாக மாறுகின்றார்கள்  என்றால் அந்தக்கல்வியால் என்ன பிரயோசனம். அதனைத்தான் இன்றைய புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் தெளிவு படுத்துகின்றனவா?   

இவ்வாண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் அனைத்தும் வெளியாகியதைத் தொடர்ந்து கூடிய புள்ளிகள் பெற்றவர்கள் பற்றிய விபரங்கள் பத்திரிகைகளில் வெளியாவதும், வெற்றியடைந்த மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிவதும், பாடசாலைக்குப் பாடசாலை போட்டியிட்டு விழாக்கோலம் நடாத்துவதும் கற்பித்த ஆசிரியர்கள், உதவிநின்ற அதிபர்கள் போன்றோருக்கு பரிசுகள் வழங்குவதும் தற்போது வாடிக்கையாகிவிட்ட இன்றைய சூழலில் குறித்த புள்ளிகளை அடைய முடியாத மாணவர்களிளனதும், அவர்களுக்காக இரவு பகலாக கஷ்டப்பட்ட பெற்றோர்களினதும் நிலையையும் சற்று யோசித்துப் பார்த்தோமா? அவர்களது மனசஞ்சலத்தில் பங்குபற்றி ஆறுதல் கூறினோமா? பலர் அவர்களை நினைத்துக்கூட பார்க்கவே இல்லை.

தரம் ஒன்றில் பிள்ளையை பாடசாலைக்குள் விட்ட கையோடு 'என்பிள்ளை தரம் 5 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்து பாராட்டப்படவேண்டும்' என்கிற மனகோட்டை கட்டிய பெற்றோர்களும், அவர்களை நம்பி ஐந்து வருடங்களாக ஏற்றிய மனச்சுமையை கோட்டை விட்ட மாணவர்களினதும் நிலையைப் பற்றி பாடசாலைகளின் அதிபர்களோ, அல்லது சமுதாயமோ, விழா எடுக்கின்ற அரசியல் வாதிகளோ, கற்றறிந்த ஆசிரியர்களோ யாருமே கவனிப்பதாய் இல்லை. இவர்களின் நிலை அந்தோ பரிதாபம் இன்று இவர்கள் கவனிப்பாரற்று தலை தொங்கிய நிலையில் பாடசாலைக்குள் ஏனைய மாணவர்களின் கிண்டலுக்கு உள்ளாகி பாடசாலைக் கல்விக்கு முடிச்சுப்போடுகின்ற ஒரு நிலைமையை இப்பரீட்சையின் பெபேறுகள் தோற்றிவித்துள்ளது என்பதைத்தான் பெற்றோர்களிடமும், குறைவான புள்ளிகள் எடுத்த மாணவர்களிடமும் மனக்கவலையைத் ஏற்படுத்தி, இது பாரிய பின்விளைவுகளைத் தோற்றுவிக்கும் என்பது அறிஞர்களின் கருத்து.

உண்மையில் அரசாங்கத்தினது ஒரு ஊக்குவிப்புக்காக அதாவது குறித்த வீதமான மாணவர்களை மாவட்ட அடிப்படையில் உதவித் தொகை வழங்குவதற்கும், தேசிய மட்டத்தில் பல்வேறு சிறப்புக்களை உள்ளடக்கிய பாடசாலைகளில் கல்வி கற்பதற்குமுரிய வாய்ப்புக்களை வழங்கும் நோக்குடன் இந்த நாடுதழுவிய பரீட்சை நடாத்தப்படுகிறது. இது கடந்த பலவருடங்களாக பல்வேறு மட்டத்திலும் சில தாக்கங்களை ஏற்படுத்தி வந்தாலும், பாடசாலை மட்டத்திலும் தாய்மாரிடமும் தற்போது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் விளைவு பி;ள்ளைக்கு உணவு உண்பதற்கும், தூhங்குவதற்கும் நேரமற்று பலமாதங்கள் சுமைக்கு மேல் சுமையுடன், எப்படியும் பிள்ளை கூடிய புள்ளியை பெற்றால் தனக்குள்ள குடும்ப கௌரவத்திற்கு கிடைத்த பரிசு என்கிற வேதாந்தத்தை பிள்ளை மூலமாக நிறைவு செய்ய முற்படுபடுகின்ற இந்நடவடிக்கைகள் பாரிய பிழையான நடத்தைக்கு வழிவகுக்கும் என்பதை மறந்துவிடுகின்றனர்.

அண்மையில் புத்தி ஜீவிகள் பலரின் சிபார்சுகள் அடங்கிய ஆய்வு அறிக்கை கல்வியமைச்சரிடம் வழங்கப்பட்டது. தற்போது நடாத்தப்படுகின்ற தரம் 5இல் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்வதற்கு அவர்களது வயது போதாது. எனவே தரம் 7இல் பரீட்சிக்கப்படுவதன் அவசியம் பற்றியும் அக்குழுவின் சிபார்சுகள் அமைந்திருந்தன. பொதுவாகவே மாணவர்களை புலமைப் பரிசில் பரீட்சைக்கு தயார் செய்கின்றபோது அவர்களிடம் இயற்கையாக பத்துவயதில் காணப்படுகின்ற பல்வேறு செயற்பாடுகளை மறக்கவைத்து வலிந்து கற்றலில் அவர்களை நெட்டுருப் பண்ணுவதனால் அப்பிஞ்சு உள்ளம் சோபிழந்து கல்வியில் அக்கரையற்று வாழ்க்கையே புஷ்வாணமாகும் சந்தர்பத்தை ஏற்படுத்தியும் சிலவேளை ஏற்படுத்தி விடுகிறது. ஆதலால்தான் வெற்றி, தோல்வி என்ற நிலைக்கும் அப்பால் மாணவரின் கல்வி மீதான பற்றுக்கு அடுத்தபடிக்கட்டாக இப்பரீட்சை அமைய வேண்டுமே ஒழிய மாணவர்களை மனவேதனைக்கு உட்படுவதை தவிர்ப்பதாக அமைய வேண்டும்.

பரீட்சை முடிவுகள் சரியாக அமையாதபோது ஏற்படுத்திவிடும் விபரீதங்கள் மனதை நெகிழவைத்தும் விடுகின்றன. அதற்குதாரணமாக அண்மையில் நடைபெற்ற சம்பவம் ஒன்று மனதை தொட்டதனால் இதனை எழுதுகின்றேன். அதாவது பரீட்சை முடிவுகள் வெளியாகியதும் தனது பி;ள்ளையின் முடிவினை கைதொலை பேசியில் ஒரு இளைஞரிடம் பார்க்கும்படி கேட்கிறார்கள். பார்த்த இளைஞன் ஒரு புள்ளி குறைவினால் சித்தியடையவில்லை என்று கூறியதுதான் தாமதம்  படிப்பு வாசனையே இல்லாத அப்பிள்ளையின் பெற்றோர் சித்தியடையவில்லை என்ற காரணத்தினால் மனமுடைந்து அவ்விடத்தில் இருந்து அழ ஆரம்பித்து நாள் முழுவதும் புலம்பியழுது மன அழுத்தத்திற்கு பிள்ளை உட்பட்ட சம்பவம் மனதை உருக்கியே விட்டது. அடுத்தநாள் மாணவனின் ஆசிரியர் அவ்விடம் சென்று ஆறுதல் கூறினாலும் மரணவீடுபோல் காட்சியளித்த பரிதாபத்தை என்னவென்று கூறுவது.

தற்போது உளரீதியான ஆலோசனை வழங்கப்பட்டு ஓரளவு மனமாற்றத்தை ஏற்படுத்தியதன் பிற்பாடு அம்மாணவன் வழமைபோன்று பாடசாலைக்கு செல்லும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்படியான சம்பவங்கள் மாணவர்களின் நடத்தைக் கோலத்தில் மாற்றத்தை ஏற்படுத்திவிடும் இப்பரீட்சையின் ஊடாக மாணவர்களினது உடல். உளரீதியான அழுத்தங்களுக்கு ஒரு வகையில் பெற்றோரும், சில கற்றோரும் காரணவாதிகளாக அமைந்துவிடுவதுதான் மிகவும் கவலைக்குறிய விடயமாகும். புதிய கல்வி சீர்த்தம் நடைமுறையில் இருந்தாலும் பயன்பாட்டில் இருக்கின்றதா?

கடந்த 1997 இல் கொண்டுவரப்பட்ட ஆரம்பக்கல்வி சீர்திருத்தத்தின் நோக்குக்கு மாற்றமாகவே இப்பரீட்சையின் முடிவுகள் உணரப்படுகின்றன என்பதைத்தான் பலரும் கூறுகின்றனர். அப்போது ஏற்பட்ட பல மாற்றங்கள் தவறுகள் காரணமாக மீண்டும் புதுப்பிக்கப்பட்டு 2003இல் தேசிய கல்வி ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மனித விருத்தி பற்றிய தொலைநோக்கை அடைந்து கொள்வதற்காக தேர்ச்சி மைய, பாடத்திட்ட விருத்திப் பிரவேசத்தின் போது மொழிப்பாடவாரியான தேர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அத்துடன் பொதுத்தேர்ச்சிக் குறிக்கோள்களை அடைவதற்கு மாணவர்கள் எய்த வேண்டிய அடிப்படைத் தேர்ச்சிகளையும் விதந்துரைத்துள்ளது. அதாவது தொடர்பாடல் தேர்ச்சிகள், ஆளுமை விருத்தி தொடர்பான தேர்ச்சிகள், சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகளுக்கான தேர்ச்சிகள், வேலை உலகிற்கு தயார்படுத்தலுக்கான தேர்ச்சிகள், சமயமும் ஒழுகலாறும் தொடர்பான தேர்ச்சிகளும், ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தல், விளையாட்டுப் பற்றிய தேர்ச்சிகள், கற்றலுக்கான கற்றல் தொடர்பான தேர்ச்சிகள் ஆகியன விருத்தியடைந்து செல்லும் விதமாகக் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகள் அமைதல் சிறப்பானது என்பதைத்தான் இவ்வயது மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை எதிர்பார்க்கின்றது. 

ஆனால் இது நடைபெறுகின்றதா? என்றுபார்த்தால் வித்தியாசமான ஒரு போக்கைத்தான் இந்த புலமைப் பரிசில் பரீட்சை வகுப்புகளுக்கு தயார் செய்யப்படுகின்ற மாணவர்கள் நோக்கப்படுகின்றனர். எனவேதான் இப்படியான உளரீதியான தாக்கங்களுக்கு உள்ளாக்கப்படுகின்ற பரீட்சைக்கு குறைந்த புள்ளிகள் 70க்கு மேல் எடுத்த அனைவருக்கும் கல்வியமைச்சினால் தராதரம் வழங்கப்படும் என்கிற உத்தரவாதத்தையும் மீறி குறிப்பிட்ட புள்ளிகளுக்கு மேல் எடுத்த மாணவர்களின் நலனை கவனிக்கும் அதேவேளை குறைவாக எடுத்த மாணவர்களையும் பாராட்டி கௌரவிப்பது அவர்களது எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் ஆற்றலை வழங்கும் என்பதைத்தான் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்லாது ஆரம்ப வகுப்புக்களில் ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் பணியை மாணவர்களுக்கு ஒழுங்கு செய்து கொள்வதுடன், இவர்கள் பிள்ளைவிருத்திப் பருவத்தின் தீர்க்கமான ஒரு கட்டத்தில் காணப்படுவதால் அவர்களிடம் ஆக்கச்சிந்தனையையும், சமூகத்திறன்களும், ஆளுமைப்பண்புகளும் விருத்தியடைந்து இசைவடையும். ஆதலால் பாடசாலைப்பருவத்தில் மாணவர்கள் கற்றலுக்காக சூழலுடன் இடைத் தொழிற்பாடுகளை நடத்துவது மிக முக்கியமாகும். அதற்காகவேண்டியே ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி ஆசிரியர்களுக் வழங்கப்படுகிறது. அதனை முற்று முழுதாக வாசித்தறிந்து அவற்றிலுள்ள விடயங்களை சூழலுடன் இயைபாக்கி கற்றலை மேற்கொள்கின்றபோது இலகுவாகவே மாணவர்கள் கற்றலின்பால் ஈடுபாடுடையவர்களாக தோற்றம் பெறுவார்கள். இம்முறை பரீட்சைக்கு உள்வாங்கப்பட்ட பல வினாக்கள் நேரடியாக பாடத்திட்டத்திற்குள் உட்பட்டவாறே மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. பாடசாலையின் ஆசிரியர் இதனை அழுத்தமாக பிரயோகிக்காமல் சாதாரணமாக கற்பிக்கின்றபோது இலகுவாக மாணவர்களினதும், பெற்றோர்களினதும் மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளலாம்.

இதனை மையமாகக் கொண்டே பரீட்சை முடிவுகள் வெளியான கையுடன் தேசிய பத்திரிகை ஒன்றின் ஆசிரியர் தலையங்கத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. 'வெற்றி பெற்றவர்கள் ஆனந்தக்களிப்பு, கற்பித்த ஆசிரியர் தொடக்கம் உறவினர்கள் வீடுவரை இனிப்புப்பண்டம் வழங்குதல், சித்தியடைந்த மாணவர்களின் கட்அவுட் காட்சிப்படுத்துதல், பத்திரிகையில் மாணவர்களின் போட்டோ இவ்வாறு பெற்றோர் ஆசிரியர் படாதபாடு படுத்துகின்றனர். இன்னொருபுறம் குறைவாக புள்ளி பெற்ற மாணவர்களை கவனியாது விடுகின்றனர். அவனது மனவேதனை அவனது உளப்பாதிப்பினால் விளையப்போகும் எதிர்காலத்தாக்கங்கள் குறித்து கல்விச் சமுதாயம் கவனம் கொள்ளத் தவறிவிடுகிறது. 

அத்துடன் தன்னை முற்றாக புறந்தள்ளிவிட்டார்கள் என்கிற மனவேதனையில் அப்பிஞ்சு உள்ளத்தின் குமுறலையும் நாம் கவனிக்கவேண்டும். விளையாட்டை மறந்து சதா கற்றல் என்ற நிலையில் புள்ளிகள் குறைவான காரணத்தினால் ஆசிரியர், மாணவர்கள், பெற்றோர்கள், உற்றார் உறவினர் ஏன் அதிபர்கூட இவனை நச்சரிப்பதனால் மொத்தத்தில் குழந்தைப் பருவத்தையே மறந்து விடுகின்றான். அத்துடன் புலமைப் பரீட்சையின் பின்னர் பெற்றோர்கள் பலர் உளமருத்துவரிடம் தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்கின்ற ஒருநிலைக்கு இப்பரீட்சை அமையுமானால் எதிர்கால புத்திஜீவிகளை எங்கே தேடுவது. ஆதலால்தான் இப்பரீட்சை தேவையான ஒன்றா என்பதை சிந்தித்துப்பார்க்கின்ற கடப்பாடு அனைவருக்கும் உண்டு' என்கிற கருத்தை தெளிவுபடுத்தி விரிவாக எழுதப்பட்டிருந்தது. 

உண்மையில் ஆய்ந்து அறிந்து பார்க்கின்றபோது கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இத்தகைய புலமைப்பரிசில் பரீட்சையினால் தாக்குண்ட பிள்ளைகளைப் பற்றிய அறிக்கை ஒன்றில் இவ்வாறு காணப்படுகிறது. இப்பரீட்சை எழுதிய பிள்ளைகள் பலர் பல்வேறு நோய்களுக்குள்ளாகி வைத்திய உதவியை நாடுகின்றனர். அதிகமான மாணவர்களிடம் இந்தநோய்கள் பரீட்சைக்குத் தயாராகும் போதும், பரீட்சையின் பின்னரும் ஏற்பட்டவை என்பதையே சுட்டிக்காட்டுகின்றன. இப்பரீட்சை காரணமாக இப்பிள்ளை அனுபவித்து வரும் மன அழுத்தக்காரணிகளை மதிப்பீடு செய்தபோது தலைவலி, பார்வை மங்குதல், தலை சுற்றல், நாற்பட்ட வயி;ற்றுவலி, மூட்டு வலி, தசை வலி, மூர்ச்சையடைத்தல், வலிப்பு, மூச்சுத் திணறல், தூக்கமின்மை போன்ற மனவேதனைகளை இப்பருவத்தின் பிள்ளைகளுக்கு இப்பரீட்சை முடிவுகளும், ஆரம்பமும் ஏற்படுத்திவிடுகின்றன. என்கிற விடயத்தை ஆய்வுகள் தொட்டிக்காட்டி நிற்கின்றன.

அதேவேளை கற்ற பாடசாலைகளில் மாணவர்களிடமிருந்து பல அண்பளிப்புக்கள் பெறப்பட்டு மாணவர்களின் பெற்றோர்களால் பாராட்டுப் பெறவைக்கின்ற முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் குறைவான புள்ளிகள் பெற்ற மாணவர்களையும் இணைத்து பாடசாலைகள் போட்டி குரோத மனப்பாண்மையை விடுத்து பாடசாலைக்கு பெயரைப் பெற்றுத்தந்த மாணவர்களை பாடசாலை சமுதாயமே பாராட்டவேண்டும். அதை விடுத்து பலமாதங்களாக டியூஷன் என்றும், புத்தங்கள், சஞ்சிகைகள், கருத்தரங்குகள் என்கிற பல்வேறு கோணத்தில் பணத்தை பிடிங்கிய நிலையில் மீண்டும் பல ஆயிரங்கள் மாணவர்களின் பெற்றோர்கள் மூலமாக கறக்கப்பட்டு விழா எடுப்பது சிலருக்கு சந்தோசமாக இருப்பினும் குறிப்பாக அரசாங்க உத்தியோகத்தர்களது பிள்ளைகளுக்கு எந்தவிதமான கொடுப்பனவுகளும் இன்மையானது அவர்களது உரிமை சாதாரணமான சம்பளத்திற்காக மறுக்கப்படுவது கவலைக்குறிய விடயமாகும்.

எனவே, பரீட்சைக்குப்பிந்திய காலகட்டத்தில் மாணவர்களினது மன அழுத்தங்கள் அவனது கல்விக்கு வேட்டுவைக்கின்ற நிலையிலிருந்து பிள்ளை விரும்பும் இடமாக பாடசாலையும், உன்னதமான கல்வியும் எதிர்கால நல்வாழ்வுக்கு அடித்தளமாக இப்பரீட்சையும் அமைய வேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக் கௌ;ளும் நிலை எப்போது உருவாகின்றதோ அப்போதுதான் இப்புலமைப் பரிசில் பரீட்சைக்கு உண்மையான பெறுமதி உண்டு என்பதை கற்றறிந்தோரும், பெற்றோரும் உணர்தல் வேண்டும். அத்துடன் இப்பரீட்சையின் ஆரம்பம் உயர்வகுப்பில் சித்தியடைவதற்கு எவ்விதமான தடையாகவும் இருக்கக்கூடாது என்பதைகூறி கற்பதற்கான தடைகள் அகற்றப்பட்டு சாதனை புரியும் ஆற்றலை வழங்கவேண்டிய கடப்பாடு பாடசாலைக்கு உண்டு என்பதை சமுதாயத்தின் முன் உணர்த்துதல் அவசியமாகும்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடம் அமைக்க ஏற்பாடு, உயர் கல்வி அமைச்சர் எஸ். பி. திசாநாயக பணிப்பு, விசேட பேட்டியில் உபவேந்தர் தெரிவிப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொறியியல், தொழில்நுட்ப  பீடம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதே வேளை இப்பல்கலைகழகத்தின் அபிவிருத்திக்கு குவைத் அரசாங்கம் மேலும் 1200 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்வதற்கு முன்வந்துள்ளது என்று உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.முகம்மட் இஸ்மாயில் தெரிவித்தார்.

உபவேந்தர் இஸ்மாயில் அவர்களது பேட்டியின் சில பகுதிகளை இங்கு தருகின்றோம்

கேள்வி:
நீங்கள் உபவேந்தராகப் பதவியேற்ற பின்னர் இப்பல்கலையில் இடம்பெற்றுள்ள அபிவிருத்தி மற்றும் கல்வி மேம்பாடு தொடர்பில் குறிப்பிட முடியுமா?

2009 ஜுன்  மாதமளவில் நான் பதவியேற்றேன். எனது காலப்பகுதியில்   பல்கலை அபிவிருத்தியிலும் மாணவர் கல்வி மேம்பாட்டிலும் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.

எனது குறிக்கோள்:

நான் உபவேந்தர் பதவியை ஏற்பதற்கு  முன்னரே என்னிடம் ஒரு தூரநோக்கு சிந்தனை இருந்து வந்தது. அதாவது இதனை ஒரு சர்வதேச தரத்திலான ஒரு பல்கலைகழகமாக தரமுயர்த்த வேண்டும் என்பதே எனது குறிக்கோளாகும்admin

இதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கையை நான் வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறேன். என்றாலும் ஒரு சில மாதங்களில் எமது இலக்கை அடைந்து விட முடியாது. நான் வரும்போது 10 ஏக்கர் பரப்பிலேயே பல்கலைகழகத்தின் செயற்பாடுகள் அமைந்திருந்தன.ஆனால் அதனை நாம் 200 ஏக்கர் பகுதிக்கு விஸ்தரிப்புச் செய்து கற்றல் செயற்பாடுகளுக்கான சூழலாக மாற்றி அழகு படுத்தியுள்ளோம்.

அபிவிருத்தி என்பது தானாக வருவதில்லை. கற்றல்-கற்பித்தல்-ஆய்வு நடவடிக்கைகளை சரியான முறையில் மேற்கொள்கின்ற  போதே அதனை அடைந்து கொள்ள முடியும். எனினும் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னே ற்றம்  கண்டு வந்த போதிலும் ஆய்வு சம்பந்தமான நடவடிக்கைகள் எதிர்பார்த்தளவு இருக்கவில்லை. அதற்காக இரண்டு முறை சர்வதேச ஆய்வு மாநாடுகளை எமது பல்கலையில் வெற்றிகரமாக நடாத்தியுள்ளோம். இதன் மூலம் தேசிய, சர்வதேச ரீதியிலான கவனத்தை ஈர்த்து பல்வேறு தரப்பினருடன் தொடர்புகளும் நல்லுறவும் ஏற்படுவதற்கு வழிவகுத்துள்ளன.

அத்துடன் போருக்கு பின்னரான எமது நாட்டின் அபிவிருத்தி பற்றியும் சமாதான சூழ்நிலை பற்றியும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின்  அரசின் செயற்பாடுகள், உண்மையான நிலைவரம் தொடர்பிலும் எமது நாடு பற்றி சர்வதேச மட்டத்தில் நிலவும் தப்பபிப்பிராயங்ககளை நிவர்த்திப்பதற்கும் இவ்விரு ஆய்வு மாநாடுகளும் பெரிதும் உதவியுள்ளன

கேள்வி:  
அபிவிருத்தி தொடர்பில் உயர் கல்விஅமைச்சரின் முழுமையான  ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கிறதா?

அமைச்சர் எஸ். பி.திசாநாயக்க அவர்கள் உயர் கல்வி அமைச்சைப் பொறுப்பேற்ற பின்னர் பல்கலைகழக கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. பல்கலை மாணவர்களை தொழில் தேடி வரும் வகையில் அவர்களுடைய கல்வித்தகைமை அமைந்திருக்க வேண்டும் என்பதே அமைச்சரின் முக்கிய குறிக்கோளாகும்.

பல்கலைகழக கல்வியை பூர்த்தி செய்து விட்டு தொழில் வாய்ப்புக்காக போர்க்கொடி தூக்குபவர்களாக இருக்கக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில் அவர்கள் இம்மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.அதற்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்.DSC06469
அத்துடன் பல்கலை அபிவிருத்திக்கு கூடுதல் நிதியை கொடுத்து பின்னர் அப்பல்கலைகழகமே சம்பாதித்து தமது தேவையை நிறைவு செய்து கொள்ளும் நிறுவனமாக மாற  வேண்டும்  என்பதே அவரின் தூரநோக்க சிந்தனைகளாகும்.

எமது பல்கலைக்கழக அபிவிருத்தியில் அமைச்சர் கூடிய அக்கறை செலுத்தி வருகின்றார். அவர்கள் பதவியேற்று முதன் முறையாக எமது பல்கலைக்கழகத்திற்கே விஜயம் செய்தார். இது வரை 3  தடவைகள் வருகை தந்துள்ளார்
கடைசியாக வருகை தந்த போது எமது பல்கலைக்கழகத்தில் பொறியியல் தொழிநுட்ப பீடத்தை ஏற்படுத்துவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு என்னை பணித்துள்ளார் அது எமக்கு கிடைத்துள்ள பெரும் வெற்றியாகும்

கேள்வி:  
வெளிநாட்டு மாணவர்களை உள்வாங்குதல் பற்றி?

எமது நாட்டு பல்கலைகழகங்களில் வெளிநாட்டு மாணவர்களை உள்வாங்குவதன் மூலம் அவற்றை சர்வதேச தரத்திற்கு உயர்த்த முடியும் என்ற நோக்கமும் அவரிடம் உள்ளது.இவற்றுக்கேல்லாம் நாம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம்.


பகிடிவதை:  ஒழிப்பு

எமது பல்கலைக்கழகத்தில் பகிடிவதை ஒழிக்கும் நடவடிக்கை முழு வெற்றி அடைந்துள்ளது  கடந்த 2 வருடங்களில்  பகிடிவதை செயற்பாடுகள் பெருமளவு குறைந்துள்ளது. அவற்றை முடியுமானவரை தடுத்து ள்ளோம். மாணவர்களின் ஒழுக்கம் மேம்பட்ட நிலையில் உள்ளது  ஏனைய பல்கலைக்கழகங்களைப் போன்று போராட்டங்கள் மற்றும் ஒழுங்கீனமான செயற்பாடுகளை  நீங்கள் இங்கு  காண முடியாது. இங்கு நல்லதொரு கற்றல் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளோம். இன்னுமொரு பெருமைக்குரிய விடயம் என்னவென்றால்  குவைத்   அரசின் நிதி உதவியுடன் பாரிய அபிவிருத்திப்பணிகள் மேற்ற்கொள்ளப்பட்டு வருகின்றன. தான் உபவேந்தராகப் பதவியேற்ற பின் முதலாவது  கையொப்பமிட்டு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரகாரம் மேலும் 1200 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்து தருவதற்கு குவைத்  முன்வந்துள்ளது


மாணவர்களுக்கு அதி சிறந்த முறையில் சகல வகையான வசதிகளையும் உட்கட்டமைப்புகளையும் செய்து கொடுத்து வருகின்றோம். அவை நிறைவடையும் நிலையில் DSC06517உள்ளன.இவ்வேலைத்திட்டங்கள் முழுமையடையும் பட்சத்தில் நிச்சயமாக இப்பல்கலைக்கழகம் ஒரு சிறந்த நிறுவனமாக திகழும் என்பதில் சந்தேகம் கிடையாது.


அதேவேளை மூவின மாணவர்களும் வந்து கற்கக்கூடிய வசதிகளையும் சமய கலாசார விழுமியங்களை பேனுவதற்கான ஏற்பாடுகளையும் இங்கு செய்து கொடுத்துள்ளோம். அந்த வகையில் முஸ்லிம், சிங்கள மற்றும்  இந்து மாணவர்களின் நலன் கருதி மதவழிபாட்டுத் தளங்களை  அமைத்துக் கொடுத்துள்ளோம். அதற்கு  மேலாக சர்வதேச ரீதியாகவும் மாணவர்களை உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம். பல இனங்கள் பல கலாசரங்கள் பல மொழிகள் கொண்ட ஒரு பல்கலைக்கழகமாக இது மாற்றமடைவதன் மூலமே சர்வதேச தர கணிப்பீட்டுக்கு எமது பல்கலைக்கழகத்தை உட்படுத்த முடியும்.

விசேட கற்கை நெறிகள்

அத்துடன் விஞ்ஞான பீடத்தில் கணணி,புள்ளிவிபரவியல்,பௌதீகவியல் இரசாயனவியல் உயிரியல் துறைகளில் விசேட கற்கை நெறிகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். மேலும் உயர் கல்விக்காக நாட்டம் கொண்டவர்களின் அபிலாசையை பூர்த்தி செய்வதற்காக MBA கற்கை நெறியை ஆரம்பித்து - மிகவும் சிறந்த முறையில் இயங்கி வருகிறது. இவை தவிர சமுகத்தை சிறந்த முறையில் வழிநடத்தவும் DSC08120திறமைசாலிகளை வளர்த்து விடுவதற்காகவும் விரிவாக்கல் கற்கை நிலையத்தின் மூலம் குறுகிய கால டிப்ளோமா கற்கை நெறிகளை நடாத்தி வருகின்றோம்.

சமுக உறவுகளை வளர்பதற்காக பல்வேறு தரப்பினரையும் உள்வாங்கி  சமுக பொருளாதார அரசியல்  ரீதியான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பல்வேறு வகையான கருத்தரங்குகளை நடாத்தி வருகின்றோம்.

அத்துடன் எமது பல்கலையில் இருந்து அதிக விரிவுரையாளர்களை கலாநிதி மற்றும் முதுமாணி நெறிகளை பயில்வதற்காக சர்வதேச ரீதியில் ல் அங்கிகாரம் பெற்ற பல்கலைகலகங்களுக்கு அனுப்பியுள்ளோம்.

பல்கலை கட்டுமான பணிகளுக்கு அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனக்களின் உதவிகளை பெற்று வருகிறோம். இப்பல்களைக்கலகத்தை வெள்ள அனர்த்தத்தில் இருந்து பாதுகாப்பதற்கு ஏற்ற வகையில் நவீன வடிகாலமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். அண்மையில் அமைச்சர் பசில் ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற அம்பாறை DCC கூட்டத்தில் இவ்வேலை திட்டத்திற்கென  நிதி ஒதுக்கீட்டிற்கு பரிந்துரை செய்யபட்டுள்ளது.

Wednesday, December 28, 2011

``இன்று செந்நெல் கிராமத்தில் சர்வோதயத்தினால் நுளம்பு வ்லைகள் வழங்கப்பட்டது

சம்மாந்துறை செந்நெல் கிராமம்-1,2 இற்கு உட்பட்ட 1200 குடும்பங்களுக்கு சர்வோதயத்தின் மலேரியா ஒழிப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது. இதில் சர்வோதயத்தின் சம்மாந்துறை இணைப்பாளர் எம்.எச்.எம்.பைசால் மற்றும் கல்முனை இணைப்பாளர் எஸ்.எம்.நவஸ் அவர்களும் பிரதேச சபை உப் தவிசாலர் கலீலுர் ரஹ்மான் அவர்களும் கல்ந்து கொண்டனர்
     

Tuesday, December 27, 2011

அம்பாறை மாவட்டத்தில் உயிரியல்துறையில் சம்மாந்துறையைச் சேர்ந்த மாணவி முதலிடம்

 க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் உயிரியல் துறையில் 3A பெற்று அம்பாறை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற சம்மாந்துறையைச் சேர்ந்த கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி மீராமுகைதீன் பாத்திமா சியாதாவையும் அவரது குடும்பத்தினரையும் படங்களில் காணலாம்

Saturday, December 24, 2011

மாணவி தூக்கிட்டு தற்கொலை! மாணவியின் தந்தை, மாமா கைது

கைகாட்டி சந்தியிலுள்ள வீடொன்றில் வசிக்கும் மாணவியொருவர் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியில் உயர்தரப் பிரிவில் கல்வி கற்கும் முத்து முஹம்மட் ஜஹான் (வயது 21) என்ற மாணவியே தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக குறித்த மாணவியின் தந்தை மற்றும் மாமா ஆகியோரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரேதப் பரிசோதனைக்காக சடலம் அம்பாறை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உ/த பரீட்சை பெறுபேறு நாளை வெளியாகிறது!

நடந்து முடிந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நாளை (25) வெளியிடப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை காலை 10 மணியளவில் பெறுபேறுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பெறுபேறுகள் நாளை வெளியாகவுள்ள தகவலை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்கவும் அத தெரணவிடம் உறுதி செய்துள்ளார்.

Friday, December 23, 2011

இளைஞர் பாராளுமன்றத்தின் 4வது அமர்வு

இளைஞர் பாராளுமன்றத்தின் 4வது அமர்வு 2011.12.19 – 2011.12.21ம் திகதி வரை மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் கூடியது. இதன்போது இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் யாப்பினை திருத்துதல் தொடர்பாக கலந்துரையாடப்படடது.

மேலும் "அரசியல் கலையும் இளைஞனும்" எனும் தலைப்பில்  அதிதிகள் உரையாற்றினார்கள்.

சாய்ந்தமருது இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஜீ.அன்வர் யாழ்ப்பாண மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து இளைஞர் பரிமாற்றம் மற்றும் இரண்டு மாவட்டங்களுக்குமிடையில் இளைஞர் யுவதிகளுக்கிடையே எவ்வாறு சினேக பூர்வ தொடர்புகளை ஏற்படுத்துவது என்பது பற்றியும் விரிவாக ஆராய்ந்தார்.

மேலும், இளைஞர் பாராளுமன்ற பிரிவுக் குழுத்தலைவர்களையும் சந்தித்து பிரதேசத்தின் இளைஞர் யுவதிகளின் நலன்கள், அபிவிருத்திகள் பற்றிய கலந்தாலோசனையும் இடம்பெற்றது.

Wednesday, December 21, 2011

உயர்தர பெறுபேறுகள் நாளை வெளியிடப்படும் சாத்தியம்!!

க.பொ.த உயர்தரப்பரீட்சை முடிவுகள் நாளைய தினம் வெளியிடப்படலாம் என பரீட்சைத் திணைக்களத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

பரீட்சை முடிவுகளுக்கமைய வெட்டுப்புள்ளி தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அதற்கான அனுமதிக்கு நேற்று  பல்கலைக்கழக  மானிய ஆணைக்குழு வுக்கு விவரங்கள் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் பரீட்சைத் திணைக்களத் தகவல்கள்  தெரிவித்திருந்தன.

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுச் சபையின் அனுமதி பெறப்பட்டதும் பெரும்பாலும் நாளை குறிப்பிட்ட பரீட்சை முடிவுகளை வெளியிடக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய, பழைய பாடத்திட்டங்களுக்கு அமைவாகவே இசட் புள்ளிகள் தயாரிக்கப்பட்டு வருவதனால் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சைத் திணைக்களத்தினால் பல தடவைகள் பெறுபேறுகள் வெளியிடப்படும் என்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கில் 450 கிலோமீற்றர் வீதி கொங்றீட் வீதியாக புனரமைப்பு


இவ்
ஆண்டுகிழக்குமாகாணத்தில்450 கிலோமீற்றர்வீதிகொங்கிறீட்வீதியாக்அபிவிருத்திசெய்யப்பட்டுள்ளது. இதேவேளைஎதிர்வரும்ஆண்டுபதினொராயிரத்துநூறுமில்லியன்ரூபாய்செலவில்750 கிலோமீற்றர்வீதிகொங்கிறீட்வீதியாகபுனரமைக்கப்படவுள்ளதாக' கிழக்குமாகாணவீதிஅபிவிருத்திஅமைச்சர்எம்.எஸ்.உதுமாலெப்பைதெரிவித்தார். கிழக்குமாகாணவீதிஅபிவிருத்திதிணைக்களத்தின்வீதிஅபிவிருத்திமுன்னேற்றம்தொடர்பானவிசேடகலந்துரையாடல்மாகாணவீதிஅபிவிருத்திஅமைச்சின்கேட்போர்கூடத்தில்இன்றுபுதன்கிழமைநடைபெற்றது. இதில்கலந்துகொண்டுஉரையாற்றும்போதேவீதிஅபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும்நிர்மாணமும், கிராமியமின்சாரம்மற்றும்நீர்வழங்கல்அமைச்சர், எம்.எஸ்.உதுமாலெப்பைஇவ்வாறுதெரிவித்தார் இங்குதொடர்ந்தும்உரையாற்றியஅவர்மேலும்தெரிவிக்கையில் கிழக்குமாகாணம்ஏனையமாகாணங்களைவவிடமுன்உதாரணமாகதிகழ்கின்றது ஏனெனில் கடந்த30 வருடயுத்தத்திலிருந்துஜனாதிபதியின்முயற்சியினால்இம்மாகாணம்விடுவிக்கப்பட்டுதற்போதுபல்வேறுஅபிவிருத்திதிட்டங்களைகிழக்குபெற்றுவருகின்றதுஎனதெரிவித்தார்இக்கலந்துரையாடலில்
.
கிழக்குமாகாணவீதிஅபிவிருத்திதிணைக்களஉயர்அதிகாரிகள்மற்றும்அமைச்சின்செயலாளர்கள்கலந்துகொண்டனர்

தென் கிழக்கு பல்கலைக்கு குவைத் அரசாங்கம் 10.2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் அபிவிருத்திக்காக குவைத் அரசாங்கம் 10.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இரண்டாம் கட்டமாக வழங்கியுள்ளதாக இலங்கை வந்துள்ள குவைத் நிதிய தூதுக்குழுவினர் தெரிவித்தனர். குறித்த நிதியுதவி குவைத் அரசாங்கத்தின் அரபு பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியத்தின் ஊடாக வழங்கப்படவுள்ளது என அந்நிதியத்தின் பிரதி பணிப்பாளர் ஹிசாம் அல் வாஹ்யான் குறிப்பிட்டார். இந்நிதியுதவியின் ஊடாக தென் கிழக்கு பல்கலைக்கழகத்தில் தரமான கற்கை நெறிகளை உருவாக்க முடியும். அத்துடன் பல்கலைக்கழகத்தின் மாணவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடியும் என அவர் தெரிவித்தார். எதிர்காலத்தில் தென் கிழக்கு பல்கலைக்கழத்தில் தரமான கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படும் என குவைத் நிதியம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கையின் கல்வி மற்றும் சுகாதார நடவடிக்கைகளை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் குவைத் நிதியம் ஊடாக வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்தார். தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முதற்கட்ட அபிவிருத்திக்காக 800 மில்லியன் ரூபாவை குவைத் நிதியம் முன்னர் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தென் கிழக்கு பல்கலைக்கழக நிதியுதவி தொடர்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் செயலாளர் பி.வி.ஜயசுந்தர மற்றும் குவைத் நிதிய பிரதி பணிப்பாளர் ஹிசாம் அல் வாஹ்யான் ஆகியோர் இலங்கைக்கான குவைத் தூதுவர் யாகூப் யூசுப் அலாதீக் முன்னிலையில் கைச்சாத்திட்டுள்ளனர். இதேவேளை, நெடுஞ்சாலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 25 பாலங்களை புனர்நிர்மாணம் செய்வதற்காக நிதியுதவி வழங்கவுள்ளதாகவும் குவைத் நிதிய பிரதி பணிப்பாளர் தெரிவித்தார். 1975ஆம் ஆண்டு தொடக்கம் கல்வி மற்றும் அபிவிருத்தி திட்டங்களை இலங்கையில் மேற்கொள்வதற்காக சுமார் 170 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை குவைத் அரசாங்கம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.