Tuesday, November 29, 2011

மண்ணின் மைந்தன் பிரிந்தார்

சம்மாந்துறையில் நீண்ட நாட்கள் அரசியல் வாதியாக இருந்து தற்போது அரசியல் ஒய்வு பெற்றிருக்கும்.

முன்னால் அமைச்சர் பாரளுமன்ற உறுப்பினருமான

 M.A.அப்துல் மஜீட் அவர்கள்

இன்று காலமானார்.

இன்னாலில்லாகி வைஇன்னா இலைகி ராஜிஊன்.                                           

Monday, November 28, 2011

BMICH இல் இடம் பெறும் ICT கண்காட்சியின் நேரடி ஓளி,ஒலி பரப்பு சேவை

கொழும்பு BMICH  இல் நாடளாவிய ரீதியில்DECEMBER  2,3,4,5 ம் திகதிகளில் இடம் பெற இருக்கும் ICT கண்காட்ச்சியின் பல தரப்பட்ட பாடசாலைகள்,பல்கலை கழகங்கள் மற்றும் பல்வேறு பட்ட கல்வி நிறுவனங்களும் பங்கு பற்றும் அதே வேளையில் கிழக்கு மாகாணத்தில் சம்மந்துறையை பிரதி நிதித்துவப் படுத்தி சம்மந்துறை முஸ்லிம்மத்திய மகா வித்தியலையம்(தேசிய பாடசாலை) பங்கு பற்றுகின்றது.

இந்த கண்காட்ச்சியின் நேரடி ஓளி,ஒலி பரப்பு சேவைகள் உடனுக்குடன்  சம்மந்துறை முஸ்லிம்மத்திய மகா வித்தியலையம்(தேசிய பாடசாலை) அங்கத்தவர்கள் வழங்க இருக்கின்றனர்.

இதனை    www.smmmmvns.sch.lk
                     www.sammanthurai.tk 

ஆகிய இரண்டு இனணய தளங்களில் கானலாம்.                   

Sunday, November 27, 2011

EDC யின் O/L தின விழா




இன்ரு சம்மாந்துறை  EDC கல்வி நிறுவனத்தின் இரண்டாவது ஆண்டு O/L தின விழா நிகழ்ச்சி சது/அல்மர்ஜான் மக்ளிர் கல்லுரியில் இடம் பெற்றது.இதில் பிரதம அதிதியாக சட்டத்தரனி M.B.FOWZAN கலந்து கொண்டார்.மற்றும் ஆசிரியர்கள்,மாணவர்களும் கலந்து கொண்டனர்.

சம்மாந்துறையில் நடமாடும் சேவை





சம்மாந்துறை பொலிஸ் நிலையதினால் 2011/11/26 ம் திகதி சனிக்கிழமை சது/ அல் மர்ஜான் மகளிர் வித்தியாலயத்தில் நடமாடும் சேவை இடம் பெற்றது.
                                                                       
இந்தநிகழ்வில் அத்திகளாக

பொலிஸ் உயர் அதிகாரிகள்.


பொலிஸ் சம்மாந்துறை பொறுப்ப்திகாரி.

பிரதேச சபை தவிசாளர்  A.M.M.NOESHAD

உதவி தவிசாளர்                A.KALILUL RAHMAN

பிரதம ந்ம்பிக்கையாளர்  AL-HAJ  I.ABDHUL JABBAR

பாடசாலை அதிபர்கள்

மதகுருமார்கள்     போன்றோரும் கலந்து கொன்டனர்.

இதன் போது

மேடை நிகழ்ச்சி

சம்மாந்துறை வைத்திய சாலையினால் வைத்திய பரிசோதனை இடம் பெற்றது.

அடையாள அட்டை,சாரதி அனுமதிப்பத்திர விநியோகம் சம்மாந்துறை பிரதேச சபையினால் இடம் பெற்றது

சம்மந்துறை மத்தியஸ்தர் குழாவின் செயற்பாடுகள்.

இளைஞர்களுக்கான கரப்பந்தாட போட்டி



போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றன. இந்நிகழ்வு காலை 8.00 முதல் பி.ப 3.00 மணிவரையும் இடம் பெற்றது.

Sunday, November 20, 2011

கல்முனை – அக்கரைப்பற்று நெடுஞ்சாலையில் வாகன விபத்தில் ஒருவர் பலி




கல்முனைஅக்கரைப்பற்று நெடுஞ்சாலையில் கல்முனைக்குடி ஜும்மா பள்ளிவாசலுக்கு அண்மையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் பலியானதுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

டிப்பர் வாகனத்தில் பயணித்தவரான சம்மாந்துறையைச் சேர்ந்த அர்ஸாத் என்பவரே இந்த விபத்தில் பலியானவர் ஆவார்.
சம்மாந்துறையிலிருந்து கல்முனை நோக்கி கல் ஏற்றிக்கொண்டு வந்த டிப்பர் வாகனத்தின் அடிச்சட்ட டயர் ரொட் உடைந்ததன் காரணமாக வழுக்கிச் சென்ற வாகனம் எதிரே வந்த லொறியுடன் மோதுண்டே இந்த விபத்து சம்பவித்தது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து கல்முனை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






Thursday, November 17, 2011

1000 மர கன்றுகள் நடுகைத்திட்டம்




சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில்,இலங்கைத் திரு நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தெயட்ட செவன(நாம் பயிரிடுவோம் நாட்டை கட்டியெழுப்புவோம்) எனும் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரின் தலைமையில் 2011/11/17 ம் திகதி 1000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு சம்மாந்துறை மஹல்லா முஅல்லா (மைய்யவாடி பள்ளி) யில் இடம் பெற்றது.


இந்நிகழ்வில் அதிதிகளாக,
            
    அல்ஹஜ்: A.M.M.NOWSHAD(தவிசாளர்,பிரதேச சபை,சம்மாந்துறை)
     ஜனாப்    : K.KALILUL RAHMAAN(உதவி தவிசாளர்,பிரதேச சபை, சம்மாந்துறை)
                       M. LASITH GAMAGA (மாவட்ட வனவல அதிகாரி)
                       M.A.JAYAA(வட்டார வனவல அதிகாரி)
  அல்ஹஜ் :I.ABDUL JABBARபிரதம நம்பிக்கையாளர் சபை சம்மாந்துறை)


ஆகியோரும் கலந்து கொன்டனர்.                                                          

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்ட மீறல் எட்டு மாதத்தில் 45 இலட்சம் ரூபா அறவீடு

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலிருந்து கடந்த எட்டு மாதங்களில் போக்குவரத்துச் சட்டங்களை மீறியோரிடமிருந்து 45 இலட்சம் ரூபா அதே இடத்தில் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது.
இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரைக்குமான தண்டப்பணமாகவே இத்தொகை பெறப்பட்டுள்ளதாக சம்மாந்துறைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயந்த தஹநக்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இப்பிரதேசத்தில் நடைபெற்ற வீதி விபத்துக்களை குறைப்பதற்காக அம்பாறை மாவட்ட பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சர் பிரேமலால் ரணகலவின் உத்தரவின் பேரில் வாகன போக்குவரத்து பொலிஸார் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக இத்தொகை தண்டப்பணமாகப் பெறப்பட்டுள்ளதுடன் வீதி விபத்துகளும் ஓரளவு குறைந்துள்ளதாகத் தெரிவித்த அவர் இப்பிரதேசத்தில் தற்போது தலைக்கவசம் அணிவதும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்பாட்டம்

இவ்வருடம் சம்மாந்துறையில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்திற்கு புதிதாக அனுமதி பெற்ற மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் தென்னிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான இரண்டாம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்கழக நிர்வாகம்
வகுப்பு தடையை விதித்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தங்களை கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் வகுப்புகளுக்கு செல்ல அனுமதிக்குமாறும் கோரியும் இன்று நண்பகல் சம்மாந்துறையிலுள்ள வளாகத்திற்கு முன்பாக மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பல்கலைக்கழக மாணவர்களும் மாணவிகளும் பாதையோரத்தில் பதாதைகளை ஏந்திய வண்ணம் கோசம் எழுப்பியதோடு ஏனைய பீட மாணவர்களையும் தம்மிடம் இணைந்து கொள்ளுமாறும் அழைப்பு விடுத்தனர்.--



எச்சரிக்கை - உங்கள் பேஸ்புக்கை கண்காணிக்கும் இஸ்ரேல்

இஸ்ரேலிய அரசுக்கு எதிரான சர்வதேச ஆர்வலர்களின் நடவடிக்கைகள் பெருகி வருகின்றன. இஸ்ரேலிய அரசு அவர்களை நாட்டிற்குள் வர விடாது தடுத்து வருகின்றது. பாலஸ்தீன ஆதரவாளர்களை இனங் காண்பதற்காக, முகப்புத்தகம் (Facebook) போன்ற சமூக வலைப் பின்னல்களை பயன்படுத்தி வருகின்றது. முகநூலில், இஸ்ரேலிய அரச உளவாளிகள் போலி அடையாளத்துடன் பாலஸ்தீன ஆதரவாளர்கள் போன்று உலா வருகின்றனர்.

சர்வதேச மட்டத்தில் பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவான நபர்களை இனங்காண்பதும், விபரங்களை தொகுப்பதும் அவர்களது வேலை. அண்மையில் பாலஸ்தீன பிரதேசத்தில் இஸ்ரேலிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வருமாறு, முகநூலில் குழுமங்கள் உருவாக்கப்பட்டன. பல உலகநாடுகளில் இருந்து, பல ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்திருந்தனர். அவர்களது பெயர் விபரங்கள் யாவும் இஸ்ரேலிய அரசின் வசம் சென்றுள்ளன. ஏற்கனவே இஸ்ரேலிய அரசிடம் உள்ள, “விரும்பத் தகாத நபர்களின்” பட்டியலில் அந்த விபரங்கள் சேர்க்கப்பட்டன. இவ்வாறு 300 க்கும் அதிகமான சர்வதேச ஆர்வலர்களின் பெயர்கள், “கறுப்புப் பட்டியலில்” உள்ளன.

சமீபத்தில் இந்தப் பட்டியலில் உள்ள 65 நபர்கள் டெல் அவிவ் விமான நிலையத்தில் வந்திறங்கிய பொழுது, திருப்பி அனுப்பப்பட்டனர். பிற “சந்தேக நபர்கள்” பற்றிய விபரங்கள், இஸ்ரேலுக்கு வரும் விமான நிறுவனங்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. அந்த நபர்களை கொண்டு வரும் விமானங்களுக்கு தண்டப் பணம் அறவிடப்படும் என எச்சரிக்கப் பட்டுள்ளது. பல ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்களில், இஸ்ரேலுக்கு செல்லவிருந்த பயணிகள் பலர் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளனர். இஸ்ரேலிய அரசின் வற்புறுத்தல் காரணமாகவே, தாம் அந்த நடவடிக்கை எடுத்தாக விமான நிறுவன முகாமையாளர்கள் தெரிவித்தனர்.

இஸ்ரேலிய அரசின் கடும்போக்குக் காரணமாக, மேற்கத்திய நாடுகளில் அதிருப்தியாளர்கள் பெருகி வருகின்றனர். சர்வதேச மட்டத்தில் இஸ்ரேலிய உற்பத்திப் பொருட்களை பகிஷ்கரிக்கும் போராட்டம் நடந்து வருகின்றது. இதனால் கலக்கமடைந்த இஸ்ரேலிய அரசு, “பகிஸ்கரிப்பு எதிர்ப்பு சட்டத்தை” கொண்டுவந்துள்ளது. இஸ்ரேலிய இடதுசாரிகளால் “பாசிசமயமாக்கல்” என்று விமர்சிக்கப்பட்ட சட்டம், இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் (கினேசெட்), பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின் பிரகாரம், பகிஷ்கரிப்பால் பாதிக்கப்பட்ட இஸ்ரேலிய நிறுவனம் நஷ்டஈடு கோரலாம். வெளிநாடுகளில் பகிஷ்கரிப்பில் ஈடுபடும் அமைப்பிடமோ, அல்லது தனிநபரிடமோ நஷ்டஈட்டை அறவிடலாம். இஸ்ரேலின் பாசிச சட்டத்திற்கு, சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. ஜனநாயக உலகில், அடிப்படை கருத்துச் சுதந்திரத்தை மீறும் செயல் என்று விமர்சித்துள்ளன.

உலக பிரச்சினைகளுக்கு குர்ஆன் போதனைகள் தகுந்த தீர்வாகும் - பேராசிரியர் பீரிஸ்

இலங்கையில் பெரும்பான்மை பெளத்த மக்களுடனும், இந்துக்களுடனும் முஸ்லிம்கள் சமாதானமாகவும் நல்லெண்ணத்துடனும் வாழ்ந்து வருகின்றனர். மகத்தான மத சகிப்புத்தன்மையுடனும், தமக்குள்ளான நல்லெண்ணத்துடனும் இங்கு மக்கள் சமூகம் வாழக் கிடைத்தமை பாக்கியமாகும். பிரதமர் தி. மு. ஜயரத்ன இவ்வாறு தெரிவித்தார்.

உலக முஸ்லிம் காங்கிரஸ¤ம், ஸ்ரீலங்கா இஸ்லாமிய நிலையமும் ஏற்பாடு செய்த சர்வதேச இஸ்லாமிய மாநாட்டில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசுகையில் பிரதமர் இவ்வாறு கூறினார். பிரதமர் தொடர்ந்து பேசுகையில்:-

முஸ்லிம்கள் இலங்கையில் குறிப்பிடத்தக்க நிலையில் உள்ளனர். நாட்டில் குடியேற்றங்களை உருவாக்கிய அரபு வர்த்தகர்களுக்கு பெளத்த மன்னர்கள் காணிகளையும் புகலிடங்களையும் வழங்கியமை வரலாற்றுப் பதிவாகும். 17 ஆம், 18 ஆம் நூற்றாண்டுகளில் முஸ் லிம்கள் போர்த்துகீசராலும், ஒல்லாந்தர் களாலும் பாரபட்சத்துக்கு உள்ளாக்கப்பட்ட போது மலையகத்தின் பெளத்த மன்னர்கள் முஸ்லிம்களுக்கு குடியிருப்புக்களையும், வசதிகளையும் வழங்கினர்.

நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதிலும் முஸ்லிம் தலைவர்கள் மகத்தான பங்காற்றியுள்ளனர். கலாநிதி ரி.பீ. ஜாயா, சேர் ராசீக் பரீத், ஏ. அஸஸ் போன்ற அரசியல் தலைவர்களின் பணிகள் மகத்தானவை.

சுதந்திரம் கிடைத்த காலம் தொட்டு முஸ்லிம்கள் அரசாங்கங்களில் அமைச்சர்களாகப் பதவி வகித்துள்ளனர். முஸ்லிம் அமைச்சர்கள் சமூக, பொருளாதார அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பை நல்கியுள்ளனர். முப்பது வருட பயங்கரவாத யுத்தம் முடிவடைந்து இலங்கை அமைதியும், சமாதானமும் கண்டுள்ள ஒரு நிலையில் இம் மாநாடு இலங்கையில் நடப்பது பாராட்டத்தக்கதாகும். இம்மாநாடு சகல வழிகளிலும் வெற்றி பெற வாழ்த்துவதாகவும் பிரதமர் குறிப் பிட்டார்.

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தமது உரையில், இஸ்லாத்தின் உயரிய தத்துவங்கள் முழு உலகுக்கும் மகத்தான உதாரணங்களாகும். இன்று உலகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு குர்ஆன் போதனைகள் தகுந்த தீர்வாகும் என்றார்.

உலக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் செனட்டர் ராஜா முஹம்மத் ஸபருள்ஹக், சூடானின் முன்னாள் ஜனாதிபதி பீல்ட் மார்ஷல் அப்துல் ரஹ்மான் ஸொஸார் அல் டஹாப், உலக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் கலாநிதி அப்துல்லா பின் உமர் நப் ஆகியோரும் உரையாற்றினர்.
sources- yarlmuslim

Wednesday, November 16, 2011

தேசிய ரீதியில் இடம்பெற்ற சமூக விஞ்ஞான போட்டியில் சம்மாந்துறை தேசிய பாடசாலையை சோ்ந்த இரு மாணவா்கள் தெரிவு.


எமது பாடசாலை மாணவிகளான  தரம் 7 ஆங்கில பிரிவில் கல்வி கற்கும் எஸ். நஜா சிமாறாஹ், எம்.பாதிமா ஸஸ்னா ஆகிய மாணவிகள் (ஆங்கில மொழி மூலம் தேசியரீதியல் இடம்பெற்ற) சமூக விஞ்ஞஞான போட்டியில் பங்கு பற்றி 3ம், 4ம் இடம்களை பெற்று எமது பாடசாலைக்கு பெருமை தேடித்தந்துள்ளனா் இவா்களை எமது பாடசாலை சமூகம் பாராட்டி கொளரவிக்கின்றது.

Sunday, November 13, 2011

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு சம்மாந்துறையில் ஓர் பாரிய ஊரவலம்





 உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு இன்று சம்மாந்துறையில் ஓர் பாரிய நிகழ்ச்சியும் ஊரவலமும் இடம் பெற்றது.
இந் நிகழ்வு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இருந்து சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபம் வரையில் ஊரவலமாக வைத்திய அதிகாரிகள்ää தாதிமார்கள் மற்றும் ஏனைய அதிதகள் ஆகியோரும்ää பொது மக்களும் கலந்து கெண்ட வண்ணம் இடம் பெற்றது.
மேலும் நிகழ்வில் வைத்திய பரிசோதனைகள் உடனுககுடன் இடம் பெற்ற அதே வேளைää நீரிழிவு நோய்க்கான காரணிகள் மற்றும் அதனைத்தடுக்கும் வழிகளும் காணிபிக்கப்பட்டன.
அத்துடன் நீரிழிவு நோய் சம்பந்தமான நூல் ஒன்றும் Dr.M.M.Nowsath அவர்களினால் வெளியிடப்பட்டது. மேலும் இந் நிகழ்வுக்கு

Dr.A.Issadeen
Dr.P.K.Sivakumar  (பொது வைத்திய நிபுணர்)  
A.A.Bawa (மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர்) 
I.A.ஜப்பார் (பிரதம நம்பிக்கையாளர் - நம்பிக்கையாளர் சபை சம்மாந்துறை)
Dr.M.M.நௌஷாத்
D.M.J.K.தகநாயக்கா (சம்மாந்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி)
அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

Saturday, November 12, 2011

சா்வதேச ஆசிரியா் தின விழா -2011 சம்மாந்துறை வலையத்தில் இன்று மிகவும் கோலாகலமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது




சா்வதேச ஆசிரியா் தின விழாவை முன்னிட்டு இன்று சம்மாந்துறை வலயத்தில் தெரிவு செய்யப்பட்ட பல சிறந்த ஆசிரியா்களுக்கு விருதுகள் வழங்கும் வைபவம் சம்மாந்துறை அல்-அா்சத் மஹா வித்தியாலயத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இவ்வைபவத்திற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி கலை கலாசார காணி காணி அபிவிருத்தி போக்குவரத்து கிழக்கு மாகாண அமைச்சா் விமல வீர திசானயக்க அவா்களும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினா்களான எம் எல்.ஏ. அமீா் , எஸ் புஸ்பராஜா அவா்களும் விஷேட அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளா் அல்-ஹாஜ் ஏ.எம்.எம் நொளசாட், நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளா் ரீ. காலியரசன் , இறக்காமம் பிரதேச சபை தவிசாளா் எம்.ஐ. நைசா் அவா்களும் வலயக்கல்விப் பணிப்பாளா் எம். கே.எம். மன்சூா் அவா்களும்  கலந்து சிறப்பித்தனா். இவ்வைபவமானது சம்மாந்துறை கோட்டக்கல்விப் பணிப்பாளா் ஐ. ஏ. றஸூல் அவா்களின் ஏற்பாட்டின் கீழ் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

Tuesday, November 8, 2011

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான சிறுவர் பாதுகாப்புத் தொடர்பான பயிற்ச்சிப் பட்டறை

சம்மாந்துறை நகர மண்டபத்தில் தற்பொழுது சிறுவர் பாதுகாப்பு சம்மந்தமான பயிற்ச்சிப் பட்டறை ஒன்று தற்பொழுது முன் பள்ளி ஆசிரியர்களுக்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.இந் நிகழ்வினை பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் பி.ப.1.00 மணி தொடக்கம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

Monday, November 7, 2011

சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்திய சாலைக்கு முதல்தடவையாக பெண் நோயியல் வைத்தியர் நியமணம்


சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்திய சாலைக்கு முதல்தடவையாக பெண் நோயியல் வைத்திய நிபுணரான (வீ.ஓ.ஜீ) வைத்திய கலாநிதி யுரேக்கா விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
களுத்துறையை பிறப்பிடமாகக் கொண்ட இவர் கொழும்பு, களுபோவில வைத்திய சாலைகளில் கடமையாற்றி இறுதியாக அக்கறைப்பற்று ஆதார வைத்திய சாலையில் கடமையாற்றிய பின்பே சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகாரத்த ஆதார வைத்திய சாலைக்கு முதலாவது பெண் நோயியல் வைத்திய நிபுணராக (வீ.ஓ.ஜீ) வைத்திய கலாநிதி யுரேக்கா விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்திய சாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.இஸ்ஸதீன் தெரிவித்தார்.
இவருடைய வருகையினால் சம்மாந்துறை மக்களுடைய நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளதாகவும் அத்தியட்சகர்  இஸ்ஸதீன் தெரிவித்தார்.

Sunday, November 6, 2011

இன்று காலை அனைத்து மக்களும் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டனர் அது தொடர்பான புகைப் படங்கள்







சம்மாந்துறை இணையத்தளத்தின் மற்றுமோர் பரிணாமம் இளைஞர்களின் புதிவித முயற்ச்சி

சம்மாந்துறை இணையத்தளமானது இன்று இரவு 9.00 மணிக்கு உறங்காத விழிகள் நிகழ்ச்சியுடன் தமது பரிச்சாத ஒலிபரப்பை தொடர்கிறது கேட்கத் தவறாதீர்கள் எமது இளைஞர்களின் புதிவித முயற்ச்சி

Saturday, November 5, 2011

அனைவருக்கும் இனிய ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துக்கள்

கட்டுப்பட்ட இறைக்குக்
காட்டத் துணிந்தத் தியாகம்;
மறக்காதுமனிதக்குலம்;
இருக்கும்வரை உலகம்!
வெற்றிப் பெற்றச்
சோதனைக்குப் பகரமாய்
பெருநாள்;
களிப்புடன் பலியிட்டுக்
கண்டுக்கொள்ள இத்திருநாள்!

அறுக்கும்கறிஏதும்
அடைவதில்லை
இறைவனை;
புதுப்பித்துக்கொண்டு
பூப்பூக்கும் ஈமானை!
புத்தாடைப்
போர்த்திக்கொண்டு
முழக்கமிடுவோம்
தக்பீரை;
மனம் குளிர்ந்து
முகம் மலர்ந்து
அள்ளித் தெளிப்போம்
வாழ்த்துகளை!
கசந்துப்போன நினைவுகளை
கசக்கிவிடு;
முட்டிநின்றச் சகோதரனை
முத்தமிடு;
எரியும் வெறுப்புகளை
அணைத்துவிட; அணைத்துவிடு!
தந்தை இப்றாகிம்
வழிவந்த திருநாள்
உயிர் தியாகத்தை
உணர்த்தும் நன்நாள்.
ஈதுல் அல்ஹா…ஹஜ்ஜூப் பெருநாள்!

Thursday, November 3, 2011

இலங்கையிலுள்ள தேசிய கல்லூரிகளில் 2012 ஆம் வருடத்துக்குப் புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான நேர்முகப் பரீட்சையை நவம்பர் மாதம் நடத்துவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கேற்ப அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் நவம்பர் மாதம் 16ஆம் திகதியும் 17ஆம் திகதியும், மகாவலி தேசிய கல்வியியற் கல்லூரியில் நவம்பர் மாதம் 26ஆம் திகதியும் 27ஆம் திகதியும், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் நவம்பர் மாதம் 19ஆம் திகதியும் 20ஆம் திகதியும்,  வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் நவம்பர் மாதம் 21ஆம் திகதியும் நேர்முகப் பரீட்சை இடம்பெறவுள்ளது.  


இத்திகதிகளில் முதலாம் மொழி தமிழ், விசேட கல்வி, இஸ்லாம் ஆகிய பாடநெறிகளுக்கான நேர்முகப் பரீட்சை தமிழ் மொழியில் இடம்பெறவுள்ளது. 


இந்தப் பாடநெறிகளைப் பின்பற்றுவதற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளுக்கான நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புக் கடிதங்கள் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

அதேவேளை இதுவரை நேர்முகப் பரீட்சைக்கான அழைப்புக்கடிதங்கள் கிடைக்கப்பெறாதவர்கள் அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி நிருவாகத்துடன் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

தகவல்:
எம். ஐ. எம். நவாஸ்
உப-பீடாதிபதி
அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி
0714286891

Tuesday, November 1, 2011

கிழக்கு மாகாணசபையின் 2012ம் வருடத்திற்கான நிதிப்பிரகடனம்



கிழக்கு மாகாணசபையின் 2012ம் வருடத்திற்கான நிதிப்பிரகடனம் ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. நேற்று (25.10.2011) கிழக்கு மாகாண சபைஅமர்வு சபை தவிசாளர் எச்.எம்.பாயிஸ் தலமையில் இடம்பெற்றது. இச்சபையமர்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனினால் சபைத் தீர்மானத்திற்காக 2012ம் வருடத்திற்கான நிதிப்பிரகடனம் முன்வைக்கப்பட்ட போது சபை ஏகமானதாக ஏற்றுக் கொண்டது.
பதினேழாயிரத்து இருநூற்று அறுபத்தெட்டு மில்லியன் (17,268) நிதி ஒதுக்கீட்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை சபையில் சமர்ப்பிப்பதற்கான பிரகடனத்தினை ஏகமானதாக ஏற்றுக்கொண்டார்கள்.
மாகாணசபை முறைமையினூடாக கடந்த 3 வருடங்களாக புதிதாக உதையமான கிழக்கு மாகாணசபை மூலம் பல உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகள் வலுப்பெறுவதும் வீதி, பாலம், பாடசாலைகளென பல அபிவிருத்திப்பணிகள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் 2011ம் வருடத்தில் ஏனைய துறைகளை விட கல்வித்துறைக்கு கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டது போல் 2012ம் வருடமும் கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுமென எதிர்பாக்கப்படுகின்றது.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.