Thursday, November 17, 2011

சம்மாந்துறையில் போக்குவரத்து சட்ட மீறல் எட்டு மாதத்தில் 45 இலட்சம் ரூபா அறவீடு

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலிருந்து கடந்த எட்டு மாதங்களில் போக்குவரத்துச் சட்டங்களை மீறியோரிடமிருந்து 45 இலட்சம் ரூபா அதே இடத்தில் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது.
இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரைக்குமான தண்டப்பணமாகவே இத்தொகை பெறப்பட்டுள்ளதாக சம்மாந்துறைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜயந்த தஹநக்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் இப்பிரதேசத்தில் நடைபெற்ற வீதி விபத்துக்களை குறைப்பதற்காக அம்பாறை மாவட்ட பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சர் பிரேமலால் ரணகலவின் உத்தரவின் பேரில் வாகன போக்குவரத்து பொலிஸார் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக இத்தொகை தண்டப்பணமாகப் பெறப்பட்டுள்ளதுடன் வீதி விபத்துகளும் ஓரளவு குறைந்துள்ளதாகத் தெரிவித்த அவர் இப்பிரதேசத்தில் தற்போது தலைக்கவசம் அணிவதும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.