பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க மீது சுமத்தப்பட்ட 14
குற்றச்சாட்டுக்களில் 5 குற்றச்சாட்டுக்கள் முழுமையாக
விசாரிக்கப்பட்டதாகவும் அதில் மூன்று குற்றச்சாட்டுக்கள்
நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டு குற்றச்சாட்டுக்களில் இருந்து அவர்
விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா
தெரிவித்துள்ளார்.
1ம் 4ம் 5ம் குற்றங்களில் அவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டுள்ளார் எனவும்
2ம் 3ம் குற்றங்களில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய
குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.