Thursday, July 14, 2011

சம்மாந்துறை புராதன பொதுச் சந்தையை மீள் திறக்க நடவடிக்கை






சம்மாந்துறை புராதன பொதுச் சந்தை அபிவிருத்திக் குழவின் நீண்ட கால முயற்சியின் பின் அதனை மீள் திறப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் A.M.M.NOWSHAD அவர்களின் தலைமயின் கீழ் மற்றும் உப தவிசாளர் A.KALEELURAHMAN மற்றும் UNOPS நிறுவனத்தின் அணுசரணையுடன் அப்பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் 14.07.2011 காலை 7.00 முதல் 12.00 மணி வரை சந்தையை சுற்றியுள்ள சுற்றாடல் சிரமதானம் செய்யப்பட்டது.

Wednesday, July 13, 2011

கிழக்கு மாகாணமட்ட விளையாட்டுப் போட்டியில் முதலிடம்

2011 ஆம் அண்டுக்கான கிழக்கு மாகாணமட்ட விளையாட்டு போட்டியில் சம்மாந்துறை சென்னல் சாஹிறா வித்தியாலயத்தை சேர்ந்த ஏ.ஆர்.எம். சப்றி 17 வயது ஆண்களுக்கான தடைதாண்டும் போட்டியில் முதலாம் இடத்தையும், கோல் ஊண்றி பாய்தலில் இரண்டாம் இட்த்தையும் பெற்றுள்ளார். இப்போட்டிகளில் தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ள  ஏ.ஆர்.எம். சப்றிக்கு சிறப்பான பயிற்சிகளை வழங்கிய ஆசிரியர் எம்.எஸ்.எம் கதாபி என்பது குறிப்பிட்த்தக்கது.
தகவல்: முகம்மட் றிஸாட்

Monday, July 4, 2011

(பிந்திக் கிடைத்த தகவல்) குடிநீர் பிரச்சினையால் 70 மேற்பட்ட மாணவர்கள் மயக்கம்




சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகாவித்தியாலயத்தில் குடிநீர் அருந்தியவுடன் மயக்கமுற்ற நிலையில் 70 மேற்பட்ட மாணவர்கள் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைதியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.மேலும் 15 மாணவர்கள் அவசரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக நீர் சுத்தீகரிப்பு நிலையம் மேற்கொண்ட பரிசோதனையின் போது நீருடன் கிருமி நாசினி கலந்திருப்பதை அவதானித்ததாக கூறப்பட்டது.  
                  

குடிநீர் பிரச்சினையால் 20 மேற்பட்ட மாணவர்கள் மயக்கம்



சம்மாந்துறை தாறுஸ்ஸலாம் மகாவித்தியாலயத்தில் குடிநீர் அருந்தியவுடன் மயக்கமுற்ற நிலையில் 20 மேற்பட்ட மாணவர்கள் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார வைதியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர். மேலும் இதற்கான காரணம் இன்னும் இனங்கானப் படவில்லை என நம்ப த்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
                  

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.