ஐரோப்பிய ஒன்றியத்தினால் தடை செய்யப்பட்ட புலிகளின் படங்கள் பதித்த அஞ்சல் முத்திரைகளை வெளியிட்டார் என்று அடையாளம் காணப்பட்ட நபர் மீது பிரான்ஸ் சட்டமாதிபர் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது எனத் தகவல்கள் வெளிவந்துள்ளன
.
பிரான்ஸின் லா போஸ்ட் நிறுவனத்தின் ஊடாக இலகுவாக யாரும் முத்திரைகளை வெளியிடலாம் என்ற சட்டவிதிகளில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி முத்திரை வெளியிட்டார் என இவர்மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
இவர் பிரான்சின் முன்னணி தமிழ் அமைப்பை சேர்ந்தவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த முத்திரை விநியோகதினால் பிரான்ஸ்சுக்கான தூதுவர்- இலங்கை அரசிடம் மன்னிப்பு கோர வைகப்பட்டதனால் பிரான்ஸ் தூதுவர் ஆத்திரமடைந்ததன் காரணமாகவே இந்த விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
இந்த நடவடிக்கை தற்பொழுது பிரான்ஸ் அரசின் தமிழர் மீதான பரிவான போக்கில் மாற்றங்களைஏற்படுத்தும் எனவும் அறியமுடிகிறது. எனத் தெரிய வருகிறது.(எம்.ரி.-977)