Wednesday, December 21, 2011

உயர்தர பெறுபேறுகள் நாளை வெளியிடப்படும் சாத்தியம்!!

க.பொ.த உயர்தரப்பரீட்சை முடிவுகள் நாளைய தினம் வெளியிடப்படலாம் என பரீட்சைத் திணைக்களத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

பரீட்சை முடிவுகளுக்கமைய வெட்டுப்புள்ளி தீர்மானிக்கப்படவுள்ளதாகவும் அதற்கான அனுமதிக்கு நேற்று  பல்கலைக்கழக  மானிய ஆணைக்குழு வுக்கு விவரங்கள் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாகவும் பரீட்சைத் திணைக்களத் தகவல்கள்  தெரிவித்திருந்தன.

பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுச் சபையின் அனுமதி பெறப்பட்டதும் பெரும்பாலும் நாளை குறிப்பிட்ட பரீட்சை முடிவுகளை வெளியிடக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

புதிய, பழைய பாடத்திட்டங்களுக்கு அமைவாகவே இசட் புள்ளிகள் தயாரிக்கப்பட்டு வருவதனால் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரீட்சைத் திணைக்களத்தினால் பல தடவைகள் பெறுபேறுகள் வெளியிடப்படும் என்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.