சம்மாந்துறை அரசியல் சமூக வரலாற்றில் அதிககாலம் தன்னை நிலைநிறுத்திக் கொண்ட மறைந்த முன்னாள் அமைச்சர் அப்துல் மஜீட் அவர்களின் முதலாவது வருட நினைவு தினம் இன்றாகும் .
1926-10-15ம் திகதி அஹமது லெப்பை உடையார் முகம்மதலி , அப்துல் மஜீட் வன்னிமை கதீஜா தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். சம்மாந்துறை அரசினர் தமிழ்ப்பாடசதலையிலே ஆரம்பக் கல்விகற்ற இவர் . மட்டக்ளப்பு சிவானந்தா வித்தியாலயத்திலே தனது இடைநிலை கல்வியைத் தொடர்ந்தார். பின்னர் பல்கலைக்கழகம் பிரவேசித்த அன்னார் கிழக்கிலங்கையிலேயே முதலாவது முஸ்லிம் பட்டதாரியாக 1949ம் வருடம் வெளியானார்.
சம்மாந்துறை மக்களின் வாழ்வாதார, கல்வி, விவசாய, பொருளாதார, சமூக அபிவிருத்திக்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவர் பட்டின சபைத் தவிசாளராகவும், தவிசாளராகவும், மாவட்ட அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், பிரதி அமைச்சராகவம், அமைச்சராகவும் பல்துறைகளிலும் இருந்து சமூகப்பணி செய்தார்.
சேவையின் சிகரமென புகழப்பட்ட இவர் கடந்த 2011ம் வருடம் நவம்பர் 29ம் திகதி சம்மாந்தறை ஆதார வைத்தியசாலையில் இறையடி எய்தினார்.
No comments:
Post a Comment