Sunday, November 18, 2012

இஸ்ரேலுக்கு அதனைப் பாதுகாக்கும் உரிமை உள்ளதாம்: ஒபாமா

காஸாவில் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் தன்னைப் பாதுகாப்பதற்கான உரிமையைக் கொண்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
“தனது மக்களை நோக்கி ஏவுகணைகள் மழைபோல் வந்து தாக்கும்போது, உலகில் உள்ள எந்த நாடும் அதை சகித்துக் கொள்ளாது. தன்னைப் பாதுகாக்கும் இஸ்ரேலின் உரிமையை நாம் முழு மனதாக ஆதரிக்கிறோம்“ என அவர் தெரிவித்துள்ளார். அவர் தென்கிழக்காசிய நாடுகளுக்கு மேற்கொண்டுள்ள விஜயத்தின்போது தாய்லாந்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் வைத்தே இதனைத் தெரிவித்தார்.
இஸ்ரேல் தரைவழியாக காஸாவை ஆக்கிரமிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என செய்திகள் வெளிவந்துள்ளது. எனினும், எகிப்து இதனை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறது.

நன்றி (மீள்பார்வை)

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.