முர்ஸியினால் நேற்று அரசியல் யாப்புக்கு சேர்க்கப்பட்ட விடயங்கள், 2011 ஆம்
ஆண்டு புரட்சியினால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மிக முக்கிய விடயங்களாக
கருதப்படுகின்றது. முர்ஸியின் இந்த அறிவிப்பினைத் தொடரந்து தஹ்ரிரில் ஒன்று
கூடிய நூற்றுக்கணக்கான மக்கள் தமது ஆதரவுக் குரல்களை எழுப்பினர்.
முர்ஸியினால் நேற்று அறிவிக்கப்பட்ட யாப்புக்கான முக்கிய சேர்க்கைகளாவன
1. ஜனாதிபதியினால்
அறிவிக்கப்படுகின்ற அறிவிப்புக்கள், சட்டங்கள் மற்றும் யாப்புக்கான
சேர்க்கைகள் அனைத்தும் நீதித்துறை உட்பட எந்த ஒரு அதிகாரத்தினாலும்
செயலிழக்கச் செய்யவோ தாக்கல் செய்யவோ முடியாது.
2. எகிப்துக்கான யாப்பு வரைஞர் குழு மற்றும் பாரளுமன்ற உயர் சபையான ஸூரா சபை என்பன நீதித்துறை
உட்பட எந்த ஒரு அதிகாரத்தினாலும் செயலிழக்கச் செய்யவோ களைக்கப்படவோ
முடியாது. மேலும், யாப்பு வரைவுக்கான காலவரையறை இரண்டு மாதங்களினால்
நீடிக்கப்படுவதுடன் யாப்பு ஆவணப்படுத்தலுக்கான காலம் 8 மாதங்களாக நீடிக்கப்படுகிறது.
3. ஜனவரி 25 தொடக்கம்
புரட்சியில் ஈடுபட்டோரை கொலை செய்தல், அவர்களை காயப்படுத்தல் போன்றவற்றில்
ஈடுபட்டோருக்கான சட்டத்தீர்ப்புக்களை மீள்தீர்ப்புக்கு உட்படுத்தல்.
மற்றும் அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட அனைத்து அரச அதிகாரிகளையும் ஓய்வு
பெறச்செய்தல்.
4. சட்ட மா அதிபர் அப்துல் மவ்ஜீத் மஹ்முத் ஓய்வுக்கு உட்படுவதுடன் அவரது பதவிக்கு தளத் இப்றாஹீம் நியமிக்கப்படுகிறார்.
No comments:
Post a Comment