உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு நேற்று புதன்கிழமை
சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட செயலக சிரேஷ்ட நிர்வாக அதிகாரி பிரேமதாச,
சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.அப்தல்
லத்தீப், உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், மாவட்டப்பதிவாளர்
சீ.எம்.எம்.சத்தார் உட்பட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை
உத்தியோகத்தர்கள், பட்டதாரிப் பயிலுனர்கள், முகாமைத்துவ உதவியாளர்கள்,
வெளிக்கள உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு திணைக்களமட்டத்திலும் அமைச்சுக்களின் மட்டத்திலும் நடைபெறவுள்ள நடமாடும்
சேவைகள் உட்பட பிரதேச அபிவிருத்தி தொடர்பிலான பல்வேறு விடயங்கள் தொடர்பில்
ஆராயப்பட்டது.
No comments:
Post a Comment