Saturday, September 29, 2012

இஸ்லாமிய விரோத படத்தினை தயாரித்த நபர் கைது

உலகளாவிய ரீதியில் வாழ்கின்ற முஸ்லிம்களின் மனதினை புண்படுத்தும் விதத்தில் “இன்னஸன் ஒஃப் முஸ்லிம்ஸ்” என்னும் படத்தினை தயாரித்த நபர் நேற்று அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் லொஸ் ஏன்ஜல்ஸ் நகர சட்ட நிறுவனம் அதிகாரி டொம் முரோஸக் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

“முஸ்லிம்களின் மனதினை புண்படுத்தும் விதத்தில் படத்தினை தயாரித்து நெறிமுறைகளை மீறி அதனை இணையத்தில் வெளியீடு செய்த நகௌலா பஸ்ஸெல்லி நகௌலா (வயது 55) என்ற நபரே நேற்று கைது செய்யப்பட்டார். இவரை சமஷ்டி நீதிமன்றில் ஆஜர்படுத்தி விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளோம்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, சமஷ்டி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட மேற்படி நபருக்கு பிணைவழங்க சமஷ்டி நீதிமன்ற நீதிபதி மறுத்துள்ளார். உலகளாவிய ரீதியில் கலகங்களை தூண்டிவிடும் விதத்தில் நடந்துகொண்டமைக்காகவே பிணை வழங்க முடியாது என நீதிபதி கூறியுள்ளார். சமூகத்திற்கு ஆபத்தான விடயத்தினை சந்தேகநபர் செய்துள்ளதாகவும் நீதிபதி சுஸானி எச்.சீகல் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.