புதிதாக தெரிவு செய்யப்பட்ட கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரும் கடிதத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று (10.09.2012) திங்கட்கிழமை கிழக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்க உள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்த தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 11 ஆசனங்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 7 ஆசனங்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 4 ஆசனங்களும் கிடைத்துள்ளன.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 2 போனஸ் ஆசனம் உட்பட 14 ஆசனங்கள் கிடைத்தன. இந்த நிலையில், கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் ஒன்றை இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசாவும் கையெழுத்திட்டு நேற்று (09.09.2012) ஞாயிற்றுக்கிழமை தொலைநகல் மூலம் மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கரமவிற்கு அனுப்பிவைத்தனர்.
நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்த தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு 11 ஆசனங்களும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 7 ஆசனங்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 4 ஆசனங்களும் கிடைத்துள்ளன.
இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 2 போனஸ் ஆசனம் உட்பட 14 ஆசனங்கள் கிடைத்தன. இந்த நிலையில், கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் ஒன்றை இலங்கை தமிழரசுக் கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராசாவும் கையெழுத்திட்டு நேற்று (09.09.2012) ஞாயிற்றுக்கிழமை தொலைநகல் மூலம் மாகாண ஆளுநர் மொஹான் விஜேவிக்கரமவிற்கு அனுப்பிவைத்தனர்.
No comments:
Post a Comment