
Friday, November 30, 2012
துருக்கியின் மறுமலர்ச்சி

பலஸ்தீனுக்கு அங்கீகாரம்

கிரக ஒழுங்கு- அரிய நிகழ்வு
சில இணையத்தளங்களின் தகவல்களின் படி 2737 வருடங்களுக்கொருமுறை நிகழும் இவ்வரிய நிகழ்வு எகிப்தின் மர்மப் பெட்டகமான கீஸா பிரமிடுகளின் மேல் வானிலே 3 கிரகங்களும் வரவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சனி, வெள்ளி, புதன் கிரகங்களே இவ்வாறு அமையவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது
Wednesday, November 28, 2012
பெரியபள்ளிவாசலில் கிரகணத் தொழுகை
மறைந்த அமைச்சருக்கான கதமுல் குர்ஆன் நிகழ்வு
இந்த நிகழ்ச்சியில் பெருமளவானோர் கலந்து கொண்டு அன்னாரின் மறுமை வாழ்வு ஈடேற்றம் பெற பிரார்த்தித்ததோடு அன்னாரின் நற்பணிகளையும் நினைவு கூர்ந்தனர்.
இந்த வருடத்தின் இறுதி சந்திர கிரகணம்
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி நேர்கோட்டில் வரும் போது சந்திர கிரகணம் ஏற்படும் இவ்வரிய நிகழ்வு பல ஆண்டுகளுக்கு ஒரு முறையே அதே போல் நிகழும்.
இவ்வாறான கிரகணமொன்று இன்று இடம்பெற்றது. அதனை இலங்கையில் சிறிதளலு காணக்கூடிய வாய்யு இருந்தது எனினும் காலநிலை மாற்றம் காரணமாக முகில்கள் சூழ்ந்த நிலையில் வானம் காணப்பட்டது. இதனால் கிரகணத்தை தெளிவாக பார்க்க கூடிய வாய்ப்பு பல இலங்கையர்களுக்கு தவறவிடப்பட்டது.
மர்ஹும் எம்.ஏ.அா்துல் மஜீட் அவர்களின் முதலாவது வருட நினைவு
1926-10-15ம் திகதி அஹமது லெப்பை உடையார் முகம்மதலி , அப்துல் மஜீட் வன்னிமை கதீஜா தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். சம்மாந்துறை அரசினர் தமிழ்ப்பாடசதலையிலே ஆரம்பக் கல்விகற்ற இவர் . மட்டக்ளப்பு சிவானந்தா வித்தியாலயத்திலே தனது இடைநிலை கல்வியைத் தொடர்ந்தார். பின்னர் பல்கலைக்கழகம் பிரவேசித்த அன்னார் கிழக்கிலங்கையிலேயே முதலாவது முஸ்லிம் பட்டதாரியாக 1949ம் வருடம் வெளியானார்.
சம்மாந்துறை மக்களின் வாழ்வாதார, கல்வி, விவசாய, பொருளாதார, சமூக அபிவிருத்திக்காக தன்னை ஈடுபடுத்திக் கொண்ட இவர் பட்டின சபைத் தவிசாளராகவும், தவிசாளராகவும், மாவட்ட அமைச்சராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், பிரதி அமைச்சராகவம், அமைச்சராகவும் பல்துறைகளிலும் இருந்து சமூகப்பணி செய்தார்.
சேவையின் சிகரமென புகழப்பட்ட இவர் கடந்த 2011ம் வருடம் நவம்பர் 29ம் திகதி சம்மாந்தறை ஆதார வைத்தியசாலையில் இறையடி எய்தினார்.
சம்மாந்துறையின் முதலாவது வரலாற்று ஆவணப்படம் வெளியீடு
குறிப்பாக சம்மாந்தறையின் வரலாற்றில் அதிகளிவான வரலாற்று தொகுப்புகள் வெளியாகியுள்ள வருடமாக 2012ம் வருடத்தைக் கொள்ளலாம்
வெண்முத்து, அறுவடை, ஈழத்தின் இன்னுமொரு மூலைக்குப் பின்னர் மீலாத் மலர், திறப்பு விழாமலர்கள் , பட்டறை வரை ஆங்காங்கே சேகரிப்புகள் இடம்பெற்றிருந்தாலும் 2012ம் வருடத்தில் சம்மாந்துறையின் முதலாவது வரலாற்றுத் தொகுப்பு தனி நூலாக “சம்மாந்துறை பெயர் வரலாறு“ கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகியிருந்தது. அதன் பின்னர் “சம்மாந்துறை அரசியல் வரலாறு” எனும் நுர்ல் வெளியானது. அதன்பின்னர் பிரதேச செயலகத்தின் தகவல் களஞ்சியமான பட்டறை வெளியானது, பின்னர் சம்மாந்துறையிலுள்ள குடிகள் பற்றிய “முஸ்லிம்கள் மத்தியில் குடிவழிமுறை“ எனும் நூல் அண்மையில் வெளியானது.
இந்த வரிசையில் டீகே இணைய குழுமமும் இணைந்து கொள்கின்றது சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் ஒரு வரலாற்றுப்பார்வை என்ற முதலாவது ஆவணப்படத்தை கடந்த 2012-11-26ம் திகதி இமய விழாவில் வெளியிட்டு வைத்தது.
Monday, November 26, 2012
இமயவிழா 2012-400000 பார்வைகள்
மேற்படி இமயம் நோக்கிய இந்த நிகழ்வைக் கொண்டாடும் முகமாக இன்று டீகே மீடியா குழுமத்தினால் இமய விழா நிகழ்வொன்று சம்மாந்தறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
கடந்த 2008 ம்வருடம் ஆரம்பிக்கப்பட்ட இந்த இணைய ஊடகம் கடந்த நான்கு வருடங்களில் நிகழ்த்திய சாதனைகள் மற்றும் சேவைகள் என்பன பற்றிய கண்ணோட்டமும். சம்மாந்துறை 2012 எனும் தொகுப்புப் பார்வையும். இணைய தளத்தின் 400000 பார்வையாளர்களை தாண்டிய நிலைகள் பற்றிய 400000 பார்வைகள் எனும் நிகழ்வும் இடம்பெற்றது மற்றும் விஷேடமாக டீகே இணைய குழுமத்தின் கூட்டு முயற்சியில் உருவான ” சம்மாந்தறை பெரிய பள்ளிவாசல் ஒரு வரலாற்றுப்பார்வை“ எனும் ஆவணப்படமும் வெளியிட்டு வைக்கப்பட்டது. சம்மாந்தறை வரலாற்றில் முதன்முதலாவது ஒளிப்பதிவு வரலாற்று ஆவணப்படம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்வுக்கு அதிதிகளாக சம்மாந்தறை பிரதேச சபைத்தவிசாளர் ஏ.எம்.எம்.நௌசாத் , மற்றும் மத்தியஸ்த சபை தலைவர் எஸ் அப்துல் றாஸிக், முன்னாள் தவிசாளர் ஐ.எம்.இப்றாஹீம், மற்றும் கவிஞரும் ஆய்வாளருமான பௌஸ்தீன் அவர்களும் கெப்ஸோ நிறுவனத்தை சேர்ந்த சகோதரர் இம்டாட் மற்றும் பல பிரமுகர்களம் ஊடகவியலாளர்களும் கலந்து சிறப்பித்தனர்
Saturday, November 24, 2012
KINDS 21 அமைப்பின் இலவச செயலமர்வு
எதிர்வரும் 27ம் திகதி அமைப்பினரால் அல்மர்ஜான் மகளிர் கல்லூரியில் கணித பாடத்திற்கும் செயலமர்வொன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
முர்சி முக்கிய தீர்மானம்

Thursday, November 22, 2012
மாபெரும் கண்டணிப் பேரணி
Wednesday, November 21, 2012
இஸ்லாமிய புதுவருடத்தை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கொண்டாட்டம்
வாகன விபத்தில் ஒருவர் பலி
அக்கரைப்பற்று, கோமாரி பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான கணேசமூர்த்தி என்பவரே உயிரிழந்துள்ளார். இவர் அக்கரைப்பற்று- மட்டக்களப்பு தனியார் பஸ்ஸின் நடத்துனருமாவர்.
பயணிகளுடன் மட்டக்களப்பிலிருந்து பயணித்துக் கொண்டிருந்த போது ஒலுவில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பஸ்ஸை நிறுத்துவதற்கு முற்பட்ட போது மிதிபலகையிலிருந்து தவறி விழுந்துள்ளார். இதனால், இவரின் தலையில் பஸ் ஏறியமையினாலேயே இவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து தொட்ர்பான மேலதிக விசாரனைகளை அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் விஜயரத்தின தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கமு/ சது/ முஸ்லிம் முஸ்லிம் மகளிர் வித், 2013ற்கு புதிய மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பம் கோரல்
21-11-12 பாலின்ரோம் திகதி

உதாரணமாக “விகடகவி“ என்ற சொல்
“மாடு பாடுமா“ என்ற வசனம் பொன்றவை
இது போலவே திகதிகளிலும் பாலின்ரோம் திகதிகள் உண்டு
அவ்வாறான ஒரு திகதியே 21-நவம்பர்-2012 ஆகும் அதாவது இதனை எழுதும் போது திகதி-மாதம்-வருடம் என்ற ஒழுங்கில் எழுதும் போது 21-11-12 என வரும் . இவ்வாறான திகதிகள் அரிதாகவே காணப்படகின்றன.
Tuesday, November 20, 2012
ஜனாதிபதியின் பிறந்ததினத்தை முன்னிட்டுசம்மாந்துறையில் மர நடுகை
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 67வது பிறந்த தினத்தை முன்னிட்டும் ஜனாதிபதியின் பதவியேற்பின் இரண்டாவது பதவிக் காலத்தின் 2வது வருடப் நிறைவையிட்டும் சம்மாந்துறைப் பிரதேச சபையின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும் சம்மாந்துறை தொகுதியின் சுதந்திரக் கட்சியின் அமைப்பாளருமான அல் ஹாஜ் ஏ.எம்.எம்.நௌஷாட் தலைமைமையில் மரம் நடுகை நிகழ்வும், பிராத்தனையும் இன்று சனிக்கிழமை (2012-11-20) காலை சம்மாந்துறை சென்னல் கிராம நிலையத்தில் நடைபெற்றது .
இந்நிகழ்வில், பிரதேச சபை உதவித் தவிசாளர் எம்.ஏ.கலீலுர் றஹ்மான், பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.ஜீ.எம்.சிப்லி, எம்.ஐ.றனூஸ், எம்.பி.முகைதீன், தியாகரன் ஆகியோரும் மற்றும் பிரதேச சபையின் செயலாளர் எம்.எம்.சலீம் உட்பட பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, ஜனாதிபதியின் தேக ஆரோக்கியத்துக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் சம்மாந்துறை மத்தயஸ்த சபையின் தவிசாளரும் உலமா சபையின் செயலாளருமான மௌலவி எம்.ஐ.அச்சு முகம்மது அவர்களின் துஆப் பிராத்தனையும் இடம்பெற்றது.
Monday, November 19, 2012
சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித், ஜனதிபதியின் 67 அகவையை முன்னிட்டு சான்றிதழ் வழங்கும் வைபவம்
எமது ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாட்டில் பல்வேறுபட்ட நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளது என்பதை நாங்கள் அறிந்த விடயமே. குறிப்பிட்டுச் சொல்லப் போனால் மர நடுகை, மதசார்பான நடவடிக்கைகள் சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
கல்வி அமைச்சின் சுற்று நிருபதிற்குகமைவான முறையில் சம்மாந்துறையில் உள்ள புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகளவான பிள்ளைகளை சித்தியடைவைக்கும் பாடசாலையான கமு/ சது/ முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் இந் நிகழ்வு மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வானது அரசியல் சார்பான ஒரு பிரமுகரின் பிரசன்னத்துடன் நடாத்தப்பட வேண்டும் என்றும் அந்த சுற்றுநிருபத்தில் கோரப்பட்டிருந்தததும் இங்கு ஒரு முக்கிய விடயமாகும்.
இந்த கோரிக்கைக்கமைவாக சம்மாந்துறை கல்வி வலயத்தில் சமாதான கல்விக்கான இணைப்பாளராகவும் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஏ. முகம்மட் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து இந் நிகழ்வை சிறப்பித்தார்.
அத்துடன் இப்பாடசாலை அதிபர் TM. தௌபீக் மற்றும் இப்பாடசாலையின் செயற்பாட்டாளர் .AM. தாஹா நழீம் தரம் -5 கற்பிக்கும் ஆசிரியைகளான RUM.மன்சூர், AU. றிம்லான், AB. பரீதா ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 70 மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி ஜனாதிபதி அவர்களின் 67 பிறந்த தின நிகழ்வை மிக விமர்சியாக கொண்டாடினார்கள்.
Sunday, November 18, 2012
இஸ்ரேல் பொய்யும் புழுகும் நிறைந்த ஒரு நாடு-யூசுப் அல் கர்ளாவி
இன்று ஜனாதிபதியின் பிறந்தநாள்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் 1945ம் வருடம் நவம்பர் மாதம் 18ம் திகதி ஹம்பாந்தோட்டையில் பிறந்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் இரண்டாவது பதவிக்காலத்தின் மூன்றாவது வருட பூர்த்தியும் அவரின் பிறந்த நாளும் அதாவது ஒரே நாளில் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்
இஸ்ரேலுக்கு அதனைப் பாதுகாக்கும் உரிமை உள்ளதாம்: ஒபாமா
நன்றி (மீள்பார்வை)
இஸ்ரேலுக்கு அர்தூகானின் பலமான செய்தி

போர் முழக்கத்திற்கு மத்தியிலும் காஸா மக்கள் திடமாகவே உள்ளனர் – எகிப்திய பிரதமர்
தான்
காஸாவுக்கு விஜயம் செய்தபோது, போர் முழக்கத்திற்கு மத்தியிலும் மக்கள்
திடமாக உள்ளதைக் கண்டதாக எகிப்திய பிரதமர் ஹிஸாம் கந்தில், துருக்கி-
எகிப்திய வர்த்தக மன்றத்தின் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலியப் படையினரால் கொல்லப்பட்ட சிறு குழந்தை ஒன்றைக் கண்டபோது, தனது உள்ளம் ஆழமாக வேதனை அடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார். பிராந்தியத்தில் அமைதியைப் பேணுவதற்காக துருக்கியும் எகிப்தும் இணைந்து பணியாற்றுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மக்கள் வீடுகளில் கூட்டாக ஒன்றிணைந்து இருப்பதாக சில தகவல்கள் வெளிவந்துள்ளன. மரணத்தை கூட்டாக எதிர்கொள்வது ஒரு அருள் என ஒருவர் தெரிவித்துள்ளார்
நன்றி மீள்பார்வை
நபிகளாரின் வரலாறு(ஸீறா) விஷேட சொற்பொழிவு
நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் ஸீறா பற்றிய இச் சொற்பொழிவை மௌலவி அலி ஏ.ஏ.அஹமட் றஸாதி அவர்கள் நிகழ்த்தவுள்ளார்கள்.
குறித்த 23,24,25ம் திகதிகளில் மஃரிப் தொழுகையிலிருந்து இரவு 9.00 மணிவரை இந்நிகழ்வு நடைபெறும்
Saturday, November 17, 2012
செம்மழை மர்மம் துலக்கம்

இவ்வாறான நிகழ்வு இலங்கை மக்களுக்கு புதிதாக இருந்தாலும் இது போன்ற நிகழ்வுகள் ஏற்கனவெ வெளிநாடுகளில் நிகழ்ந்திருக்கின்றன. கடந்த 2005ல் கேரளாவில் இத பொன்ற ஒரு சம்பவம் பதிவாகியுள்ளது.
வேற்று கிரகங்களில் இருந்து வந்தவர்களால் சிவப்பு மழை தோன்றியிருக்கலாம் என்று முன்னர் பரவலாக கருத்துகள் வெளியிடப்பட்டு வந்தன.
எனினும், அவற்றில் எந்தவித உண்மையும் இல்லை என்று ஆதர் சி கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கிரக மண்டல ஆய்வாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவிக்கையில்.
இலங்கைக்கு இவ்வாறான சிவப்பு மழை புதிது எனினும், ஏனைய நாடுகளில் இவ்வாறான சிவப்பு நிற மழை வீழ்ச்சி பல்வேறு சந்தர்ப்பங்களில் பெய்திருப்பதாகவும், கடலில் இருந்து ஆகாயத்துக்கு நீர் உறிஞ்சப்படும் போது, சில சமயங்களில் கடலில் காணப்படுகின்ற அரிதான சிவப்பு நிற மாற்றங்களும் சேர்த்து உறிஞ்சப்படலாம்.
இதன் விளைவாகவே இந்த மழைவீழ்ச்சி ஏற்பட்டிருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Friday, November 16, 2012
இஸ்லாமிய புதுவருட வாழ்த்துக்கள்
இந்த வருடத்தை நல்லமுறைலஷயில் பயன்படுத்துவதோடு எமது கடந்த கால தவறுகளை சிந்தித்து இனிவருங்காலங்களில் அவற்றிலிந்து நீங்கி எல்லாம் வல்ல இறைவனின் நல்லருள் பெற பிரார்த்திப்போமாக.
Wednesday, November 14, 2012
சம்மாந்துறை வரலாற்று ஆவணப்படுத்தல்களில் இன்னுமொரு சுவடு
மட்டக்களப்பு முஸ்லிம்களின் தனித்துவ அம்சங்களில் அவர்களில் காணப்படும் குடி வழிமுறை முக்கியமான மரபாக பேணப்பட்டு வருகின்றது. இதன் வரலாறு மற்றும் சம்மாந்துறைப் பிரதேச முஸ்லிம்களின் மத்தியில் தற்போது வழக்கிலுள்ள குடி வழிமுறை சம்மந்தமாக சம்மாந்தறை குடி மரைக்கார் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கலாபூஷணம் எஸ்.அப்துல் றாஸிக் அவர்களால் தொகுக்கப்பட்ட முஸ்லிம்களின் மத்தியில் குடி வழிமுறை எனும் நூல் வெளியீடு எதிர்வரும் 2012-11-17ம் திகதி சனிக்கிழமை மு.ப. 9.00 மணியளவில் சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரியின் காரியப்பர் மண்டபத்தில் ஏற்பாட செய்யப்பட்டுள்ளது.
குடி மரைக்காயர் சம்மேளனத் தலைவர் எஸ்.எல்.ஆதம்பாவா தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பல பிரமுகர்களும் கலந்த சிறப்பிக்கவள்ளனர். பொது மக்கள் அனைவரும் இலவசமாக கலந்து கொள்ள முடியும் என்பதும்
பிரத்தியேகமாக நூல் விற்பனைப்பிரிவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
சம்மாந்துறை சம்மந்தமான வெளியிடப்படும் தனி வரலாற்று நூல்கள் வரிசையில் இந்த வருடத்தின் மூன்றாவது நூலும். குடி வரலாறுகள் சம்பந்தமான முதலாவது தொகுப்பு நூல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tuesday, November 13, 2012
செல்வி, MR. ஹன்ஸா, மாகாண மட்ட விஞ்ஞான வினாடி வினாப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.


Sunday, November 11, 2012
கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் - சான்றிதழ்ப் படிப்பு
From: "Ila. Sundaram" <ilasundaram@gmail.com>
Date: Fri, 9 Nov 2012 10:53:20 +0530
Subject: கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் - சான்றிதழ்ப் படிப்பு
To:
அன்புடையீர், வணக்கம்.
*கணினித்தமிழ் அடிப்படையும் பயன்பாடும் - சான்றிதழ்ப் படிப்பு
Certificate Course in Fundamental & Usage of Tamil Computing*
*02.12.12 - 28.12.12*
எனும் ஒருமாதகாலச் சான்றிதழ்ப் பயிற்சி வகுப்பு *டிசம்பர், மே *மாதங்களில் *SRM
பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயக் கணினித்தமிழ்க் கல்வித்துறை*யில் நடைபெறவுள்ளது.
கணினியில் தமிழைப் பயன்படுத்துவதற்கும் ஆய்வு செய்வதற்கும் தமிழ் மென்பொருள்
உருவாக்குவதற்கான அடிப்படை ஆய்வுப் பணிகளை அறிந்துகொள்வதற்கும் இணையத்தமிழ்ப்
பயன்பாட்டினைப் புரிந்துகொள்வதற்கும் இந்தச் சான்றிதழ்ப் பயிற்சி வகுப்பு
நடத்தப்படுகிறது.
பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள், தமிழ்
ஆர்வலர்கள் என அனைவரும் பயன்பெறும் வகையில் பருவ விடுமுறை மாதங்களான மே,
அல்லது டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது.
வகுப்புகள்* திங்கள் முதல் வெள்ளி* வரை *20* நாட்கள் காலை *10* மணிமுதல் மாலை *
5* மணிவரை நடைபெறும்.
தகுதி: *10-ம் வகுப்பில் தேர்ச்சி*. வயது வரம்பு இல்லை.
மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பத்தை* www.srmuniv.ac.in/tamil_perayam.php *எனும்
இணையதளத்திலும் தமிழ்ப்பேராய அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பத்தை
நகல் எடுத்தும் பயன்படுத்தலாம்.
பயிற்சிக் கட்டணம் ரூபாய் *1000/-* (ஆயிரம்)-த்திற்கான வரைவோலையை(DD) 'SRM
TAMIL PERAYAM' என்னும் பெயரில் சென்னையில் மாற்றத்தக்கதாக எடுத்து
விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டும்.
நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் வந்துசேரவேண்டிய கடைசி நாள் *26.11.2012*,
திங்கட்கிழமை.
மேலும் விவரங்களுக்கு இணைப்பைப் பாருங்கள்.
நண்பர்களுக்கு இதனைத் தெரியப்படுத்தவும்.
இணைப்பில்.
1. செய்திக்குறிப்பு
2. விண்ணப்பம்
நன்றி...
--
இல. சுந்தரம்
*ILA. SUNDARAM*
M.A., M.Sc.(I.T)., MCA., MBA., M.Phil., PGDCA., (Ph.D)
Assistant Professor of Tamil
Coordinator, Computational Tamil Studies
Tamil Perayam, SRM University
Kattankulathur - 603 203.
Kanchipuram Dt., T.N. S-India.
Cell: +91-*98423 74750*
--
*firos123g@gmail.com
info@sammanthurai.tk*
*
www.sammanthurai.tk
www.sammanthurainews.com
www.saynotodowry.tk
www.newthilgates.tk
*
Saturday, November 10, 2012
இன்று 10-11-12

2012-நவம்பர் -10 சனிக்கிழமை
இன்றைய இந்தத் திகதி 100 வருடத்திற்கு ஒருமுறையே இவ்வொழுங்கில் 10,11,12 ஆகியன பெறுமான வரிசைக்கிரமமாக வருவது அரிய தொடரொன்றாகும். இத்தொடர் இந்நூற்றாண்டின் 11வதும் கடைசிக்கு மதலாவதான தொடருமாகும்
மேலும் எதிர்வரும் 2013ம் வருடம் டிசம்பர் மாதம் 11ம் திதியே இந்த நூற்றாண்டின் கடைசித் திகதியாகும்.
Thursday, November 8, 2012
கல்முனை கல்வி மாவட்டத்தில் மிகச் சிறந்த CFS பாடசாலையாக சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித், தெரிவு
கல்முனை கல்வி மாவட்டத்தில் மிகச் சிறந்த CFS பாடசாலையாக சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித், தெரிவு.
இன்று யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண பாடசாலைகளில் பிள்ளை நேயம் தொடர்பான கருப்பொருள் எவ்வாறு பின்பற்றப்படுகின்றது என்பதை செயற்பாட்டாளராக செயற்படும் UNICEF மற்றும் Australian Aid போன்ற நிறுவனங்கள் நாளுக்கு நாள் பரிசிலனை செய்து வருகின்றன. இதற்காக பல கோடி ரூபாய்க்களை செலவு செய்து வருகின்றது என்றால் அதனை யாரும் மறுப்பதிற்கில்லை.
மேலும் இப்பாடசாலைகளின் செயற்பாடுகளை விருத்தி செய்வதற்கு இப்பாடசாலைகளிலுக்கிடையில் காணப்படுகின்ற விடயங்களை ஏனைய பாடசாலைகள் பின்பற்றி தங்களுடைய பாடசாலையில் அதனை பிரயோகிப்பதன் ஊடாக பிள்ளை நேயக் கோட்பாடுகளான ஆறு கோட்பாடுகளை விருத்தி செய்யும் நோக்கும் கல்முனை கல்வி மாவட்ட மாவட்டத்தில் 15 சிறந்த பிள்ளை நேயப்பாடசாலைகளை தெரிவு செய்து அதில் மிகச் சிறந்த பாடசாலை தெரிவு செய்வதற்கான போட்டி (Sharing CFS Best Practice (District Level) 2012.11.06 ஆந் திகதியன்று கமு/ கமு/ வெஸ்லி உயர் கல்விப் பாடசாலையில் நடாத்தப்பட்டது. இது ஒரு கல்வி மாவட்ட மட்டப் போட்டியாகும்.
இந்தப் போட்டியானது கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் கோரப்பட்ட சுற்று நிருபத்திற்கமைவாக, நேர்மைாயன முறையில் ஒரு திறந்த போட்டியாக நடைபெற்றது. அத்துடன் இதில் வலயக்கல்வி அதிகாரிகள் நடுவர்களாக செயற்பட்டார்கள் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும். அத்துடன் பங்கு பற்றும் பாடசாலைகளிலிருந்து ஐந்து ஆசிரியர்கள் வீதம் அவர்கள் முன்னிலையில் இப் போட்டி நடாத்தப்பட்டது என்பதும் இங்கு கோடிட்டு காட்ட வேண்டும்.
Photo here
கல்முனை உதவிக்கல்விப் பணிப்பாளர், M. நஜிம் அவர்களிடம் பெற்றிக்கான கேடயத்தினை இப்பாடசாலையின் அதிபர் ரீ.எம். தௌபீக், ஆசிரியர் ஏ.எம். தாஹா நழீம் அவர்களும் இணைந்து பெற்றுக்கொள்ளும் காட்சி இது.
firos123g@gmail.com
info@sammanthurai.tk
www.sammanthurai.tk
www.sammanthurainews.com
www.saynotodowry.tk
www.newthilgates.tk
Tuesday, November 6, 2012
தேசிய வாசிப்பு மாத கண்காட்சியும் விற்பனையும்
சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் பிரதேச சபை நூலகங்கள் ஏற்பாட்டில் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கான கார்ட்டூன் அனிமேசன் திரைப்படக் கூடமும், TK மீடியாவின் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்ட முற்றிலம் இயற்கையாலான கலையகமும் பண்பலை ஒலிபரப்பு கூடமும் காணப்பட்டன.
இக்கண்காட்சி சிறவர்களைப் பெரிதம் கவர்ந்ததோடு. பெரியவர்கள் இளைஞர்களின் வருகையும் அதிகரித்துக்காணப்பட்டது.
அங்கு சம்மாந்துறையின் இளம் விஞ்ஞானி மர்சூக்கின் கண்டுபிடிப்பு மாதிரியும் இடம்பெற்றிருந்தமை கறிப்பிடத்தக்கது.
மேலும் TK.மீடியாவினர் தயாரித்திருந்த பெரியபள்ளிவாசல் ஒரு வரலாற்றுப்பார்வை எனும் ஆவணப்படமும் இங்கு காட்சிப்படத்தப்பட்டது.
இக்கண்காட்சி தொடர்ச்சியாக 4 நாட்களக்க ஏற்பாட செய்யப்பட்டள்ளது.