Monday, October 22, 2012

அவசியம் ஏற்பட்டாடல் கருத்துக்கணிப்பு நடத்துவோம்!


-அமைச்சர் பசில் ராஜபக்ஷ தகவல்-
திவிநெகும சட்டமூலத்துக்கு 13 ஆவது திருத்தச் சட்டம் தடையாக அமைந்தால் அது தொடர்பில் பொதுமக்கள் உரிய தீர்வை வழங்குவார்கள். அவசயம் ஏற்பட்டால் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் பொது மக்கள் கருத்துக் கணிப்பு நடாத்தப்படும் என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்;தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இன்று தமிழ் ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது-

திவிநெகும சட்டமூலத்துக்கு இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரே இன்று முக்கிய தடையாக இருக்கின்றனர். தமது அரச விரோ நடவடிக்கைகளை முன்னெடுக்க வடபகுதி பொது மக்களையே இவர்கள் இலக்கு வைத்துள்ளனர்.
சமுர்தி மற்றும் திவிநெகும தி;ட்டங்கள் மூலம் வட பகுதி வரிய மக்கள் அடையப்போகும் நன்மைகளை இவர்கள் தடுக்கின்றனர்.

2001 முதல் 2004 ஆண்டு காலப் பகுதியில் இவர்கள் புலிகளின் பிரதிநிதிகளாகவே பாராளுமன்றம் நுழைந்தனர். எனவே பொது மக்களுக்கு புலிகள் நன்மை செய்தாலும் தீமைகள் செய்தாலும் அவற்றின் முழுப்பொறுப்பையூம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரே ஏற்கவேண்டும்.

வட பகுதி மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய அடிப்படை வசதிகளை புலிகள் அழித்தனர். மன்னாருக்கும் யாழ்ப்பாணத்துக்கும் செல்லும் ரயில் பாதைகளை இவர்கள் நிர்மூலமாக்கினர். தொழிற்சாலைகளை தகர்த்தனர். இறுதியாக மக்களின் உயிர்களையூம் பறித்தனர்.

சமுர்தித் திட்டம் இலங்கையின் எல்லாப் பாகங்களிலும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. எனினும் இந்த வருடம் வரையில் வடக்கில் அது செயற்படவில்லை. கிளிநொச்சி- மன்னார் - முல்லைத் தீவூ ஆகிய பிரதேசங்களில் சமுர்த்தித் திட்டம் செயல்படவில்லை. அன்று புலிகள் என்ன செய்தார்களோ அதனையே இன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் செய்கின்றனர்.

வட பகுதி மக்களின் முக்கிய பிரச்சினை தீர்க்க அரசாங்கம் "பிம் சவிய' திட்டத்தை முன்வைத்தது. எனினும் அத்திட்டத்துக்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதால் அத்திட்டம் முடக்கப்பட்டது.

நாடு சுதந்திரமடைந்து சுமார் 60 வருடங்களில் கிடைக்காத அடிப்டை வசதிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைiயிலான அரசாங்கம் வட பகுதி மக்களுக்கு வழங்கியது. புலிகள் இல்லாதொழித்த வசதிகளையூம் அதற்கு மேலான வசதிகளையூம் இன்றை அரசு செய்துள்ளதுஇ

ஆனால் அடிக்கடி வெளிநாடு செல்லும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் அங்கு பொய்களைக் கூறி அரசின் நல்ல திட்டங்களைத் தாமதப்டுத்துகின்றனர்.

வெளிநாடுகள் இலங்கைக்கு வழங்கும் கடன் உதவிகள் மறறும் உதவிகளைத் தடுக்கின்றனர். இதன் மூலம் அவர்கள் தமிழ் மக்களுக்கு துரோகம் இழைக்கின்றனர். இலங்கைக்கு உதவி வழங்குங்கள் என்று அவர்கள் ஒருபோதும் வெளிநாடுகளிடம் இதுவரைக் கோரிக்கை விடவில்லை.

வறிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவே நாம் திவி நெகும் திட்டத்தை முன்னெடுக்கிறௌம். மாகாணசபை அதிகாரங்களில் நடவடிக்கைகளில் நாம் தலையிட மாட்டோம். தமிழ் மக்களுக்கு நன்கு பழக்கப்பட்ட நிருவாக முறையொன்றை அவர்களுக்கு நாம் வழங்குவோம் என்றும் அமைச்சர் கூறினார். 

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.