Monday, October 22, 2012

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை டிசம்பர் மாதம் 11ஆம் திகதி!


இவ்வாண்டின் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறுமென கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார்



நேற்று கல்வி அமைச்சில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் இத்தகவலைத் தெரிவித்தார்

இந்த பரீட்சையை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் முன்னோடி கருத்தரங்குகளை நடத்தவும் அமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் கருத்தரங்குகள் நாளை மறுதினம் 19ஆம் திகதி முதல்  25ஆம்திகதி வரை சகல பாடசாலைகளிலும் நடத்தப்படும் எனவும் அதற்கான செயல்முறை விளக்கம் அதிபர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும்  அமைச்சர் பந்துல குணவர்த்தன மேலும் தெரிவித்தார் .


இதேவேளை,இம்முறை க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கு 5,37,393 பேர் தோற்றுவதாகவும் இதில் 1லட்சத்து 50,968 பேர் பாடசாலை மட்டத்தில் தோற்றுபவர்கள் என பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஏ புஷ்பகுமார தெரிவித்தார்.


மூன்று லட்சத்து 20ஆயிரம் பேர் இப்பரீட்சை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.