மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்துக்கு அமைவாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மூலம் ஒரு கிராமத்துக்கு ஒரு மில்லியன் வேலைத்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் சம்மாந்துறை தைக்கா பள்ளிவாசலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் கலந்து கொண்டார். கௌரவ அதிதிகளாக அம்பாரை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் எஸ். அன்வர்தீன், மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜஹ்பர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன் (ஐ.பி), பிரதம நம்பிக்கையாளர் ஐ.ஏ. ஜப்பார், ஜனாதிபதி இணைப்பாளர்கள், ஊர்பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment