கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் வருடாந்தம் பிரதேச ரீதியாக நடத்தப்பட்டுவரும் பிரதேச சாஹித்திய கலாசார விழா சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் 22-03-2012 வியாழக்கிழமை நடைபெற்றது. கலை நிகழ்வுகள்,சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்துகொணடு வெற்றியீட்டியவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன. சம்மாந்துறை பிரதேச செயலக சாஹித்திய கலாசார பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் சாஹித்திய கலாசார பேரவையின் பிரதித் தலைவர் கலாபூஷனம் மாறன் யூ.செயின் ஆகியவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
No comments:
Post a Comment