தற்போது கிழக்கு மாகாணப் பாடசாலைகளிலிருந்து ஆசிரியர் சமன்பாட்டை ஏற்படுத்தும் நோக்குடன் செய்யப்பட்டு வருகின்ற ஆசிரியர்களது இடமாற்றம் முறையற்ற விதத்தில் நடைபெற்றுள்ளது என்று பரவலாக ஆர்ப்பாட்டங்களும், கோசங்களும் எழுப்பட்டுவரும் நிலையில் உரிய ஆசிரியர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருந்தால் அவர்கள் மேன்முறையீடு செய்திருப்பார்களாயின் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ. புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
குறிப்பாக தூரப்பிரதேசங்களுக்கு பெண் ஆசிரியைகள் இடமாற்றம் பெற்றுள்ளனர். இவர்களது இடமாற்றம் சம்பந்தமாக உரிய பரிசீலனை செய்யப்பட்டு அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும், இவ்வாறு அதிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள பெண் ஆசிரியைகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளானவர்கள் என்பதால் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் அதேவேளை திருமணமாகாத ஆசிரியைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் இந்த இடமாற்றதிற்கு உட்படுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சகல ஆசிரியர் தொழில் சங்கங்களையும் எதிர்வரும் 22ஆந்திகதி சந்திக்கவிருப்பதாகவும் தெரியவருகிறது.
குறிப்பாக தூரப்பிரதேசங்களுக்கு பெண் ஆசிரியைகள் இடமாற்றம் பெற்றுள்ளனர். இவர்களது இடமாற்றம் சம்பந்தமாக உரிய பரிசீலனை செய்யப்பட்டு அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்றும், இவ்வாறு அதிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள பெண் ஆசிரியைகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளானவர்கள் என்பதால் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் அதேவேளை திருமணமாகாத ஆசிரியைகளுக்கும், ஆசிரியர்களுக்கும் இந்த இடமாற்றதிற்கு உட்படுதுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே சகல ஆசிரியர் தொழில் சங்கங்களையும் எதிர்வரும் 22ஆந்திகதி சந்திக்கவிருப்பதாகவும் தெரியவருகிறது.
No comments:
Post a Comment