Tuesday, December 20, 2011

தென்கிழக்கு பல்கலையும் BCAS நிறுவனமும் இணைந்து உயர்கல்வி பயிற்சிப் பட்டறை



இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் கலை காலாச்சார பீட மாணவர்களுக்கான பிரதித்தானிய பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி எனும் தலைப்பிலான பயிற்சிப் பட்டறை கலை கலாச்சார பீடத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.

தொழில் வழிகாட்டல் ஆலோசகர் ஏ. பாறுக் தலைமையில் நடைபெற்ற இப்பயிற்சிப் பட்டறைக்கு  வீகாஸ் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட மாணவ ஆலோசகர் ஏ.எம். நியாஸ் அதே பல்கலைக்கழகத்தின் மாணவ ஆலோசகர் அஸாம் ஏ. காதர் ஆகியோர் கலந்து கொண்டு விரிவுரைகளை நிகழ்தினர்.

இந்நிகழ்வானது இலங்கை தென்கிழக்கு பல்கலைக்க கழகத்தின் தொழில் வழிகாட்டல் பிரிவின் ஏற்பாட்டிலும் வீகாஸ் பல்கலைக்கழகத்தின் அனுசரனையிலும் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.