அம்பாறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொண்டை வெட்டுவான் பிரதேசத்தில் வயலில்
யானைக் காவலில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது ஜீப்பில் வந்த இனம் தெரியாத
குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் காயமடைந்த மூவர் ஆபத்தான நிலையில் அம்பாறை
பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் கொண்டை வெட்டுவான் பள்ளிவாசலுக்கு அருகாமையில் நடைபெற்றுள்ளது.
இத்தாக்குதலில் காயமடைந்த சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ.எம்.மன்சூர் (வயது45) ஏ.எம்.முகைதீன் பாவா(வயது 44), நிந்தவூரைச்சேர்ந்த எம்.சலீம்(வயது 50) ஆகிய மூவருமே மேற்படி சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளானவர்களாவர்.
இச்சம்பவம் பற்றி தாக்குதலுக்குள்ளானவர்கள் தெரிவிக்கையில் தாம்வயலில் யானைக்காவலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அங்கு ஜீப் வண்டியில் ஒரு குழுவந்து தம்மிடம் நீங்கள் எந்த மதத்தைச்சேர்ந்தவர்கள் என்று கேட்டதாகவும், தாம் இஸ்லாமியர்கள் எனக் கூறியபோது எம்மீது சரமாரியாகத் தாக்கி விட்டுத் தப்பிச் சென்று விட்டதாகவும் கூறினார். இது தொடர்பாக அம்பாறை பொலிஸார் விசாரணைகளை நடத்திவருகின்றனர்.
இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் கொண்டை வெட்டுவான் பள்ளிவாசலுக்கு அருகாமையில் நடைபெற்றுள்ளது.
இத்தாக்குதலில் காயமடைந்த சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ.எம்.மன்சூர் (வயது45) ஏ.எம்.முகைதீன் பாவா(வயது 44), நிந்தவூரைச்சேர்ந்த எம்.சலீம்(வயது 50) ஆகிய மூவருமே மேற்படி சம்பவத்தில் தாக்குதலுக்குள்ளானவர்களாவர்.
இச்சம்பவம் பற்றி தாக்குதலுக்குள்ளானவர்கள் தெரிவிக்கையில் தாம்வயலில் யானைக்காவலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது அங்கு ஜீப் வண்டியில் ஒரு குழுவந்து தம்மிடம் நீங்கள் எந்த மதத்தைச்சேர்ந்தவர்கள் என்று கேட்டதாகவும், தாம் இஸ்லாமியர்கள் எனக் கூறியபோது எம்மீது சரமாரியாகத் தாக்கி விட்டுத் தப்பிச் சென்று விட்டதாகவும் கூறினார். இது தொடர்பாக அம்பாறை பொலிஸார் விசாரணைகளை நடத்திவருகின்றனர்.
No comments:
Post a Comment