Saturday, August 20, 2011

காத்தான்குடியில் பொலிஸார் - பொதுமக்கள் மோதலால் பதற்றம்! வீடுகள், வாகனங்கள் சேதம்

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனைக் கிராமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட மர்ம மனிதன் தொடர்பாக பதற்றத்தினால் பொலிஸாருக்கும் பொதுமக்கள் சிலருக்குமிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பாலமுனை மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் அமைதியின்மை ஏற்பட்டது.
இதன்போது நடந்த தாக்குதல்களில் சில வாகனங்கள், வீடுகளின் கதவுகள், ஹோட்டல்களின் முன்புற கண்ணாடிகள் என்பனவும் சேதமடைந்தன.

காத்தான்குடியை அண்மித்த பாலமுனை கிராமத்தில் நேற்றிரவு மர்ம மனிதர்கள் இருவரின் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்ததையடுத்து அப்பகுதியில் பதற்ற நிலை காணப்பட்டது.

இதையடுத்து நேற்றிரவு 11 மணியளவில் பாமுனை மற்றும் கர்பலா பிரதேசங்களில் பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

பொலிஸாருக்கும் பொதுமக்கள் சிலருக்குமிடையில் முரண்பாடு அதிகரித்த நிலையில், பொலிஸாரை நோக்கி பொதுமக்கள் சிலர் கற்களை வீசினர். இதன் பின்னர் அங்கு வரவழைக்கப்பட்ட இரானுவத்தினர் சப்த வேட்டுக்களை தீர்த்து பொதுமக்களை கலைத்தனர்.

இதன் போது காத்தான்குடி கடற்கரை வீதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறி மற்றும் மற்றும் வான், அதே போன்று புதிய காத்தான்குடி கர்பலாவீதியில் நிறுத்தப்பட்டிருந்த கார் என்பவற்றின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதுடன் சில ஹோட்டல் கடைகளின் முன்பகுதி கண்ணாடிகளும் உடைக்கப்பட்டுள்ளன.

இதே போன்று சில வீடுகளிற்குள் இருந்த மின் குமிழ்கள் வீட்டின் கதவுகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தின் போது அங்கு விரைந்த காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஷ்பர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் ஆகியோர் இராணுவ, பொலிஸ் உயரதிகாரிகளுடன் பேசி நிலைமையை வழமைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் இன்று அதிகாலையில் காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள குட்வின் சந்தியில் டயர்கள் போட்டு எரிக்கப்பட்டன.

இதையடுத்து அங்கு விரைந்த காத்தான்குடி நகர சபை தலைவர் அஷ்பர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் உள்ளிட்ட பொதுமக்கள் சில் எரிந்து கொண்டிருந்த டயர்களை அகற்றி வாகனப்போக்குவரத்தை சீர் செய்தனர்.

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.