Wednesday, October 31, 2012

முதலாளியை கொலை செய்து மனைவியை வல்லுறவுக்கு உட்படுத்திய இலங்கையர்!

சவுதி அரேபியாவில் வாகன சாரதியாக பணியாற்றி வந்த இலங்கையர் ஒருவர், அவரது முதலாளியை கொலை செய்துவிட்டு, அவரின் மனைவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார். சவுதியின் தெற்கு பகுதியில் உள்ள கோபார் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முதலாளியையும் அவரது மனைவியையும் காரில் ஏற்றிச் சென்ற குறித்த சாரதி, கோபாரில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி ஒன்றில் வைத்து முதலாளியை கொலை செய்துள்ளார். அதன் பின்னர் அவரது மனைவியை வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு, தானும் தற்கொலை செய்ய முயற்சித்த போது பொலிஸார் அவரை மீட்டுள்ளனர். கைதான இலங்கையருக்கு 50 வயது என்றும் கொலை செய்யப்பட்டவருக்கு 70 வயது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.