Thursday, October 18, 2012

சர்வதேச வெள்ளைப் பிரம்பு தின நிகழ்வு


 Green Flowers விழிப்புலனற்றோர் அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த 18-10-2012ம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.00 மணிக்கு, சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு  தினம்-2012. நிகழ்வு இடம்பெற்றது. இந் நிகழ்வில் வெள்ளைப் பிரம்பு விழிப்புணர்வு ஊர்வலமும் நடைபெற்றது. பிரெய்ல் புள்ளி முறையில்  பரீட்சைகளில் தோற்றி சித்தியடைந்த மாணவர்களுக்கு காசோலைகளும், பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அமைப்பின் உறுப்பினர்களுக்கும் அமைப்பினால் வெள்ளைப் பிரம்புகளும் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.;
இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மாகாண சுதேச வைத்திய மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரின் பொதுசன தொடர்பு அதிகாரி U.L.M.பசீர் அவர்களும் விசேட அதிதியாக சம்மாந்துறை பிரதேச சபையின் உப தவிசாளர் கலீலுர் ரஹ்மான் அவர்களும் மேலும் பல அதிதிகளும் கலந்து சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.