Sunday, February 19, 2012

மண்ணெண்ணெய் நிவாரண திட்டம் !

நாளை மறுதினம் நாடு முழுவதும் ஆரம்பம்  -

மின்சாரக் கட்டண அதிகரிப்பைத் தொடர்ந்து அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் மண்ணெண்ணெய் நிவாரண திட்டம் நாளை மறுதினம் நாடு முழுவதும் ஆரம்பிக்கப்பட உள்ளது.

மின்சாரம் இல்லாத அனைத்து வீடுகளுக்கும் மாதம் ஒன்றுக்கு 200 ரூபா பெறுமதியான மண்ணெண்ணெய் நிவாரணத்தை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் தீர்மானத்து உள்ளது.

ஆதற்கமைய நாட்டின் தோட்டப்புறங்கள் உள்ளிட்ட சுமார் ஐந்து இலட்சம் குடும்பங்களுக்கு தற்போது அந்த நிவாரண உரிமை கிடைத்துள்ளது.

25 மாவட்டங்களின் 330 பிரதேச செய லக பிரிவுகளையும் உள்ளடக்கி மண்ணெண்ணெய் நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கும் இந்த வேலைத் திட்டம் பெப்ரவரி 19 ஆம் திகதி முதல் நாடு முழுவதும் ஆரம்பிக் கப்படும் என சமுர்த்தி ஆணையாளர் நாயக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரா விக்ரமசிங்க தெரிவித்தார். news.lk

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.