Sunday, February 19, 2012

கடந்தவருடம் A/L பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் கவனத்திற்கு..!


உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் மீள்திருத்தத்திற்காக விண்ணப்பித்த மாணவர்கள் அம் முடிவுகளை பெறும்வரை காலதாமதம் செய்யாது பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை அனுப்புமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

மீள் திருத்தத்தின் மூலமாக மாணவர்களது பெறுபேறுகளில் மாற்றங்கள் இருக்கும் பட்சத்தில், அம் மாணவரது விருப்பத்தின் படி பாடநெறி தெரிவில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2012ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை இம்மாதம் 21ஆம் திகதியுடன் நிறைவடைகின்றன. 

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான காலம் மேலும் நீடிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு 40,000இற்கும் அதிகமான விண்ணப்ப படிவங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக ஆணைக்குழு தெரிவிக்கிறது. 

விண்ணப்ப படிவங்களை நிரப்புவதில் தெளிவின்மை காணப்படுமாயின் மாணவர்கள் எந்தவொரு பல்கலைக்கழகத்துடனும் தொடர்பு கொண்டு தகவல்கலைப் பெறமுடியும் என அவ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.