ஓடுற மாட்டிறைச்சியின் சுவை!!!!!
சம்மாந்துறை அழகிய கிராமம் மக்களில் மடடுமல்ல இறையளித்த இயற்கையின் கொடைகளிலுமே.
அன்றைய மட்டக்களப்பு (இன்றைய சம்மாந்துறை) அராபிய ,இந்திய வெளிநாட்டு வர்த்தகர்களின் பண்டமாற்று சந்தையாகவும், மத்திய நாட்டு மக்களிற்கான வியாபாரப் பாதையாகவும், தவளம் முறை வியாபாரம் நடைபெற்ற புராதன செரண்டீப் இனது முக்கிய தலமாகவும் காணப்பட்டது.
இங்குள்ள மக்கள் வீரத்திலும் விவேகத்திலும் விஞ்சியவர்களே, இவர்களின் உணவுப்பழக்க வழக்கமும் விருந்தோம்பலும் சிறப்பானதே.........
.
சம்மாந்துறை கல்வி, விவசாயத்திலும் மடடுமல்ல கால்நடை வியாபாரத்திற்கும் பெயர்போன இடமாகும்
அந்த வகையில் இங்குள்ள பெரும் மாட்டுப் பண்ணையாளர்களிடம் இறைச்சி வியாபாரிகளும், புனித காலங்களில் தானம் வழங்குபவர்களும் தேவையான மாடுகளை வாங்கினர்.
அதன்போது காலையிலுள்ள (பெருமளவான மாடுகள் தங்கவைக்கப்படும் எல்லைப்படுத்தப்பட் பகுதி அல்லது மாடுகளின் கூட்டம்) மாடுகளிற்கு மத்தியில் மாட்டுக்காரர் நின்று கொண்டு கயிறொன்றை சுழற்றுவார். அப்போது உற்சாகமான ,ஆரோக்கியமான மாடுகள் காலையிலிந்து வெளிறயேறுவதற்காக சுற்றி ஓடும்.
அதன்போது அவற்றில் மிக சிறந்த மாட்டை வாங்கிக் கொள்வார்கள்.அவற்றையே உணவுக்காகவும், தானம் வழங்கவும் பயன்னடுத்தினர்.
இதனாலேயே இவர்கள் "ஓடுற மாட்டில இறைச்சி எடுத்து தின்பவர்கள்" என அழைக்கப்பட்டனர்.
காலப்போக்கில் இது அவர்களை இகழச்சிக்காக அழைக்கும் குறிசொல் எனப்புரியப்பட்டது.
இவர்கள் மக்களை இகழ்வதாக எண்ணிப் புகழ்வது முரண்நகையே....
தகவல்:- மூத்த கால்நடை கிராம வைத்தியர்
சம்மாந்துறை அழகிய கிராமம் மக்களில் மடடுமல்ல இறையளித்த இயற்கையின் கொடைகளிலுமே.
அன்றைய மட்டக்களப்பு (இன்றைய சம்மாந்துறை) அராபிய ,இந்திய வெளிநாட்டு வர்த்தகர்களின் பண்டமாற்று சந்தையாகவும், மத்திய நாட்டு மக்களிற்கான வியாபாரப் பாதையாகவும், தவளம் முறை வியாபாரம் நடைபெற்ற புராதன செரண்டீப் இனது முக்கிய தலமாகவும் காணப்பட்டது.
இங்குள்ள மக்கள் வீரத்திலும் விவேகத்திலும் விஞ்சியவர்களே, இவர்களின் உணவுப்பழக்க வழக்கமும் விருந்தோம்பலும் சிறப்பானதே.........
.
சம்மாந்துறை கல்வி, விவசாயத்திலும் மடடுமல்ல கால்நடை வியாபாரத்திற்கும் பெயர்போன இடமாகும்
அந்த வகையில் இங்குள்ள பெரும் மாட்டுப் பண்ணையாளர்களிடம் இறைச்சி வியாபாரிகளும், புனித காலங்களில் தானம் வழங்குபவர்களும் தேவையான மாடுகளை வாங்கினர்.
அதன்போது காலையிலுள்ள (பெருமளவான மாடுகள் தங்கவைக்கப்படும் எல்லைப்படுத்தப்பட் பகுதி அல்லது மாடுகளின் கூட்டம்) மாடுகளிற்கு மத்தியில் மாட்டுக்காரர் நின்று கொண்டு கயிறொன்றை சுழற்றுவார். அப்போது உற்சாகமான ,ஆரோக்கியமான மாடுகள் காலையிலிந்து வெளிறயேறுவதற்காக சுற்றி ஓடும்.
அதன்போது அவற்றில் மிக சிறந்த மாட்டை வாங்கிக் கொள்வார்கள்.அவற்றையே உணவுக்காகவும், தானம் வழங்கவும் பயன்னடுத்தினர்.
இதனாலேயே இவர்கள் "ஓடுற மாட்டில இறைச்சி எடுத்து தின்பவர்கள்" என அழைக்கப்பட்டனர்.
காலப்போக்கில் இது அவர்களை இகழச்சிக்காக அழைக்கும் குறிசொல் எனப்புரியப்பட்டது.
இவர்கள் மக்களை இகழ்வதாக எண்ணிப் புகழ்வது முரண்நகையே....
தகவல்:- மூத்த கால்நடை கிராம வைத்தியர்
No comments:
Post a Comment