கிழக்காசியாவின் மிக உயர்ந்த கோபுரத்துக்கான அடிக்கல் இன்று காலை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் நடப்பட்டது.
கொழும்பு பேரை வாவியின் அருகில் டி.ஆர். விஜேவர்தன மாவத்தையில் உள்ள 3.06 ஏக்கர் நிலத்தில் இந்த பாரிய கோபுரம் அமைக்கப்படவூள்ளது.
இலங்கை தொலைத் தொடர்பாடல் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
“தாமரைக் கோபுரம”; எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த பல நோக்குக் கோபுரம் அமைக்கப்பட்டதும் இதன் மூலம் 50 ஒலிபரப்புச் சேவைகளுக்கும் 50 தொலைக் காட்சிச் சேவைகளுக்கும் 20 தொலைத் தொடர்பாடல் சேவைகளுக்குமான வசதிகளைக் கொண்டிருக்கும்.
அத்துடன் உல்லாசமாக பொழுதைப் போக்கக்கூடிய இடமாகப் பயன்படுத்தக்கூடிய அடிப்படை வசதிகளும் இங்கு அமைக்கப்படவூள்ளன.
அத்துடன் உல்லாசமாக பொழுதைப் போக்கக்கூடிய இடமாகப் பயன்படுத்தக்கூடிய அடிப்படை வசதிகளும் இங்கு அமைக்கப்படவூள்ளன.
இந்த தாமரைக் கோபுரத்துக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் பசில் ராஜபக்ஷ இங்கு உரையாற்றுகையில்:
ஜனாதிபதியினதும் இந்த நாட்டு மக்களினதும் ஒரு பாரிய கனவூ இன்று நனவாகின்றது. இக்கோபுரத்தை கம்பஹ மாவட்டத்தில் அமைக்கவே முதலில் திட்டமிடப்பட்டது. பின்னர் ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரிலேயே கொழும்பில் இடம் ஒதுக்கப்பட்டது.
ஜனாதிபதியினதும் இந்த நாட்டு மக்களினதும் ஒரு பாரிய கனவூ இன்று நனவாகின்றது. இக்கோபுரத்தை கம்பஹ மாவட்டத்தில் அமைக்கவே முதலில் திட்டமிடப்பட்டது. பின்னர் ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரிலேயே கொழும்பில் இடம் ஒதுக்கப்பட்டது.
உலகின் ஏனைய நாடுகள் அடைந்துள்ள அபிவிருத்திக்கு இணையாக எமது நாடடையூம் முன்னேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனேயே ஜனாதிபதி இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளார் என்றும் கூறினார்.(எம்.ரி.-977)
No comments:
Post a Comment