Thursday, March 24, 2011

நிரந்தர நீதிவான் நீதிமன்றமாக இயங்குவதற்கு அனுமதியளிப்பு

சம்மாந்துறை புதிய நீதிவான் நீதிமன்றத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதியிலிருந்து நிரந்தர நீதிவான் நீதிமன்றமாக இயங்குவதற்கான அனுமதியை பிரதம நீதியரசர் அசோக டி சில்வா வழங்கியுள்ளார்.
புதிய நீதிவான் நீதிமன்றத்தின் நீதிமன்ற நடவடிக்கைகள் நேற்று புதன்கிழமை வைபவ ரீதியாக கல்முனை மஜிஸ்ரேட் நீதிமன்ற நீதிபதி எம்.ஐ.எம்.றிஸ்வியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை புதிய நீதிவான் நீதிமன்ற நீதிபதியாக எம்.எச்.பக்ர்டீன் நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது கடமையினை எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளார்.
இக்கட்டிடத் தொகுதியை அண்மையில் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா மற்றும் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.