டெங்கு ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதியின் செயற்குழுவின் டெங்கு ஒழிப்புத்
திட்ட வாரம் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை கிழக்கு மாகாண கல்வித்
திணைக்களங்கள், கல்வியலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளில் அமுல்படுத்தப்பட்டு
வருவதாகக் கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார
தெரிவித்துள்ளார்.
இதற்கமைய ஒவ்வொரு வலயக் கல்விப் பணிப்பாளர்களும் அவர்களது நிர்வாகத்தின் கீழுள்ள வலயக் கல்வி அலுவலகங்கள், கோட்டக் கல்வி அலுவலகங்கள், பாடசாலைகள், வேறு கல்வி அலுவலகங்கள் போன்ற இடங்களில் நுளம்பு பரவும் இடங்களை 29 ஆம் திகதிக்கு முன்னர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்திற்கென மேற்பார்வை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தியோகத்தர்களை நியமித்து, அவர்களிடமிருந்து அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் சுகாதார அமைச்சின் உத்தியோகத்தர்களிடமிருந்துஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் இச்செயற்பாட்டினைத் திறம்பட நடத்த நிகழ்ச்சித் திட்டங்களைத் தயார் செய்து அமுல்படுத்துவதுடன் இச் செயற்திட்டம் தொடர்பான அறிக்கை ஒன்றினை எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் திகதிக்கு முன்னர் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தனக்கு அனுப்பி வைக்குமாறும் மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார கேட்டுள்ளார்.
இதற்கமைய ஒவ்வொரு வலயக் கல்விப் பணிப்பாளர்களும் அவர்களது நிர்வாகத்தின் கீழுள்ள வலயக் கல்வி அலுவலகங்கள், கோட்டக் கல்வி அலுவலகங்கள், பாடசாலைகள், வேறு கல்வி அலுவலகங்கள் போன்ற இடங்களில் நுளம்பு பரவும் இடங்களை 29 ஆம் திகதிக்கு முன்னர் இதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இத்திட்டத்திற்கென மேற்பார்வை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தியோகத்தர்களை நியமித்து, அவர்களிடமிருந்து அறிக்கைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் சுகாதார அமைச்சின் உத்தியோகத்தர்களிடமிருந்துஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் இச்செயற்பாட்டினைத் திறம்பட நடத்த நிகழ்ச்சித் திட்டங்களைத் தயார் செய்து அமுல்படுத்துவதுடன் இச் செயற்திட்டம் தொடர்பான அறிக்கை ஒன்றினை எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் திகதிக்கு முன்னர் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தனக்கு அனுப்பி வைக்குமாறும் மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் என்.ஏ.ஏ.புஷ்பகுமார கேட்டுள்ளார்.
No comments:
Post a Comment