சம்மாந்துறை மக்களின் நீண்ட கால குறைபாடாக விருந்த பௌசி மாவத்தை வீதி
அபிவிருத்திப் பணிகள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.எல்.ஏ. அமீரின்
முயற்சியினால் 158 மில்லியன் ரூபா செலவில் நவீன காப்பற் வீதியாக
அபிவிருத்தி செய்வதற்கான ஆரம்ப வைபவம் அண்மையில் வீதி அபிவிருத்தி
திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட பிரதம பொறியிலாளர் ஏ.எம்.றிஸ்வி தலைமையில்
நடைபெற்றது.
இவ் விழாவில் பிரதம அதிதியாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா கௌரவ அதிதிகளாக மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன, வீடமைப்பு நிர்மாண, கிராமிய மின்சார அமைச்சர் எம்.எஸ்.உதுமா லெப்பை, மாகாண சுகாதார சுதேச வைத்தியத்துறை , கூட்டுறவு விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.சுபைர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர்,அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம்.இர்ஷாட், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் உட்பட திணைக்களத் தலைவர்கள், பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது பௌசி மாவத்தை வீதிக்கான நினைவுக் கல்முனை விளினைபட்டி சந்தியிலும், 20 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள புதிய பள்ளி வீதி கொங்கிரீட் வீதிக்கான நினைவுக் கல்லினை சம்மாந்துறை புதிய பள்ளி வீதிச் சந்தியிலும் அமைச்சர்களால் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
No comments:
Post a Comment