Tuesday, October 9, 2012

நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மீதான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்


நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரத்ன மீதான தாக்குதலைக் கண்டித்து கல்முனை நீதிமன்ற வளாகத்தின் முன்பாக நேற்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டிலும் அச்சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் தலைமையிலும் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்தில் அதன் அங்கத்தவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இவ் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரத்ன மீதான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதுடன், இத்தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் கைதுசெய்வதற்கான  நடவடிக்கையை எடுக்குமாறும் கோரினர்.

thanks  tamilmirror

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.