இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவும், மனித அபிவிருத்திச் சங்கமும் இணைந்து சர்வதேச சிறுவர் தின நிகழ்வொன்றினை சம்மாந்தறை அல்- மர்ஜான் முஸ்லிம் பெண்கள் பாடசாலையில் இன்று (2012-10-01) நடாத்தினர்
உலகளாவிய ரீதியில் சர்வதேச சிறுவர்தினமாக ஒக்டோபர் முதலாம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஓர் அம்சமாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும், மனித அபிவிருத்திச் சங்கமும் இணைந்து சர்வதேச சிறுவர் தின நிகழ்வொன்றினை சம்மாந்துறையில் இன்று ஏற்பாடு செய்திருந்தனர். சம்மாந்துறை அல்-மர்ஜான்முஸ்லிம் பெண்கள் பாடசாலையின் எம்.எஸ்.காபரியப்பர் மண்டபத்தில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் எம்.எம்.சறூக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்தியேட்சகர் எம்.எஸ்.ஜாபிர் அவர்களும், சட்ட ஆலோசகர் ஆரிக்கா காரியப்பர் அவர்களும் மற்றும் அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment