சர்வதேச ஆசிரியர் தின விழா – 2012 சம்மாந்துறை -முஸ்லிம் மகளிர் வித், (படங்கள் இணைப்பு)
மாதா, பிதா, குரு தெய்வம் என்பது தமிழ்மொழி எமக்குச் சொன்னது. அதில் வரும் குருவானவர் ஒரு பிள்ளையின் எதிர்காலத்தில் எந்தளவு முக்கியத்துவமானவர் என்பதை நான் சொல்லி நீங்கள் அறிய வேண்டியதில்லை.
அவ்வாறு எங்களுக்கு கற்பித்தல் பணிகளை மேற்கொள்ளும் ஆசான்களை நாங்கள் கண்ணியப்படுத்த வேண்டியது ஒவ்வொரு பிரஜையினதும் தலையாகிய கடமையாகும்.
ஒரு நல்ல கல்வி நற்பிரஜையை உருவாக்கும் என்ற கோட்பாட்டுக்குகமைவாக அந்த மாணவனை இந்த ஆசான் வழிநடத்திச் சென்று அவனை நல்லவனாக உருவாக்குகிறான் என்பதில் ஐயமில்லை.
அவ்வாறு நற்பிஜைகளை உருவாக்கும் சிறந்த சேவைகளை செய்யும் ஆசிரியர்களை நாங்கள் கௌரவப்படுத்த வேண்டியது ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
இந்த வகையில் சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆசிரியர் நிகழ்வுகள் அதன் பாடசாலை முன்றலில் 05.10.2012ல் மிக விமர்சியாக நடைபெற்றது. அதன் போது அப் பாடசாலையின் அதிபர் ரீ.எம். தௌபீக் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு மற்றும் அங்கு சிறப்பாக கடமையாற்றிய ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டார்கள் இந் நிகழ்வு தரம் – 9 ம் வகுப்பு மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு மாணவர்களின் கலை, கலாச்சார நிகழ்வுகளும் நடைபெற்றது இங்கு விசேட அம்சமாகும்.
தகவல்கள் – ஏ.எம்.தாஹாநழீம் – (Publisher – Google Inc)
--
firos123g@gmail.com
info@sammanthurai.tk
www.sammanthurai.tk
www.sammanthurainews.com
www.saynotodowry.tk
www.newthilgates.tk
No comments:
Post a Comment