Thursday, May 3, 2012

அகில இலங்கை ரீதியில் இரண்டாம் மொழி சிங்களம் மதிப்பீட்டு தேர்வில் சம்மாந்துறை தேசிய பாடசாலை மாணவி முதலிடம்


தேசிய மொழிகள் மற்றும் மானுடவியல் கல்விப் பிரிவினால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட இரண்டாம் மொழி சிங்களம் மதிப்பீட்டு தேர்வில் சம்மாந்துறை மத்திய மகா வித்தியாலய மாணவி செல்வி எம். என். பாத்திமா சுமையா முதலிடம் பெற்றுக்கொண்டார்.

  கொழும்பு அல் இக்பால் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இன் நிகழ்வில் தேசிய மொழிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர். எம். எம். ரத்னாயகவினால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தரம் 8 ஆம் பிரிவு மாணவர்களுக்கிடையே இப்போட்டி நிகழ்ச்சி தேசிய ரீதியில் நடைபெற்றது. சம்மாந்துறையை சேர்ந்த இம்மாணவி தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவி நிதியாளர் கே. எல். எம். நசீர், சம்மாந்துறை மத்திய மகா வித்தியாலய ஆசிரியை சரிபா முகம்மது நசீர் ஆகியோரின் செல்வப் புதல்வி என்பது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்,
    விடாமல் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான கட்டுரை எழுதுங்கள்....

    எங்க தளத்திற்கும் நீங்க வாங்க,தளத்தில் உறுபினராக ஆகுங்கள் www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,நபிகள் நாயகம் அவர்களின் குணநலன் அறிய, நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1 TO 15),காமகொடுரனுக்கு தண்டனை தந்த பெண்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி,ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள்.அந்த தளத்தில் இணையுங்கள்,வாருங்கள் உங்கள் கருத்தை உலகறிய தெரிவியுங்கள் ,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

    ReplyDelete

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.