தம்புள்ள அல் ஹைரிய்யா ஜும்ஆ பள்ளிவாசல் இடிப்பை கண்டித்து நாடு தழுவிய ஓர்
கண்டன ஆர்ப்பாட்டத்தை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் ஏற்பாடு செய்துள்ளது.
கோரிக்கைகள்
தம்புள்ள அல் ஹைரிய்யா ஜும்ஆ பள்ளிவாசலை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
எக்காரணம் கொண்டும் பள்ளிவாசல் இடம் மாற்றம் செய்யப்படக் கூடாது.
காலம்:
27.04.2012 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் (2.00 மணி முதல் 4.00மணி வரை)
இடம்:
மாலிகாவத்தையில் அமைந்துள்ள SLTJ தலைமையகத்திற்கு முன்னிருந்து கொழும்பு கோட்டை வரை பேரணி தொடரும்.
அல்லாஹ்வின் ஆலயத்தை மீட்க (ஆண்கள் பெண்கள் உட்பட)அனைத்து முஸ்லிம்களையும் அணிதிரளுமாறு அழைக்கிறது
குறிப்பு:
இப்போராட்டம் அத்து மீறி செயல்பட்ட
கடும்போக்கு சிங்களவர்களுக்கு எதிராகவே நடத்தப்படுகிறது. அனைத்து
சிங்களவர்களுக்கும் எதிராக அல்ல. மற்றும் இப்போராட்டம் மிகவும் அமைதியான
முறையயில் நடத்தப்படவுள்ளது.
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்(SLTJ)
தொடர்புக்கு: 0112677974, 0774781471, 0774781473,
No comments:
Post a Comment